Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - AkshiTha

Pages: [1]
2
என்னை சுற்றி  அனைவரும் இங்கும் அங்கும்
வேகமாக ஓடவும்  நடக்கவும் இருக்க 
நான் மட்டும்  தரையில் அமர்ந்து
என் இலக்கை அண்ணாந்து
 வேடிக்கை பார்த்தேன் 

வாழ்க்கையின் வெற்றிப்படிகளில்
 ஏறும் முயற்சியில்
என் கால்களை ஊன்றி மெல்ல மெல்ல
நான் எழுந்து நிற்க
என்னால் நிற்க இயலாமல்
தரையில் விழுந்தேன்.

தயக்கம் என்னை தடுக்க 
தோல்விகள் என்னை சோர்வுற செய்ய
வாழ்க்கைவெறுமையாய் தோன்றியது

வாழ்வின்  தொடக்கம்
இவ்வளவு கடினமானதா?
என்று உள்ளம் குமுற.. 
விரக்தி அதிகமாக..
மனம் துவண்டது.

"தோல்விகள் இன்றி வரலாறு இல்லை
உன்னால் முடியும் முயன்று பார் "
என்ற என் தாயின் குரல்
என்னை உத்வேகம் ஊட்ட
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தேன் .

வெற்றியின் முதல்படி என்றும் கடினமானதே
 என்பதை உணர்ந்தேன்
ஒவ்வொரு முறை நான் வீழும் பொழுதும்
என் தோல்விக்கான காரணத்தை அறிய  முயன்றேன்
அதை சரி செய்யும் யுக்தியை கையில் எடுத்தேன் 
என் இலக்கு விலகாமல்
முயற்சி செய்து கொண்டே இருந்தேன்

இன்று ஒவ்வொருமுறையும்
வெற்றியை முத்தமிடுகிறேன்.

அன்று முதல் இன்று வரை
நான் கடை பிடிக்கும் மந்திரம்
முயற்சி , தன்னம்பிக்கை,தெளிவான சிந்தனை !


தோல்வி என்றும் நிரந்தரம் இல்லை
முயற்சி இருப்பின் வெற்றிக்கு இல்லை எல்லை!




 

3
Birthday Wishes / Re: Happy Birthday CARING PERSON
« on: August 01, 2022, 12:37:40 am »
HAPPY BIRTHDAY CARING PERSON

4
Birthday Wishes / Re: Happy Birthday MEERA (HeLeNa)
« on: July 28, 2022, 11:13:21 am »
Happy birthday helena

5
இரவெனும் ஆடையில்
நட்சத்திர கண்ணாடி மின்ன
நிலவில் அழகில் தன் நிழலை பதிக்க முயலும்
தென்னங்கீற்றை ரசிக்கிறேன்!

மயிலிறகால் வருடுவது போல்
தென்றல் என்னை தழுவிச் செல்ல
என்னவனை தவிர
வேறு யாரும் என்னை தீண்டி விட முடியாதென்ற
 
உறுதியுள்ள என் கர்வத்தை உடைக்கவே
தென்றல் எனைத்தீண்டி,, சீண்டியதோ?

அவரும் நானும் ...

இதை சொல்லும் தருணம்
இதழில் பூத்த புன்னகை சொல்லும்
என் நாணத்தின் ஆழத்தை...

என்னவரின் தோளில் நான் சாயும் அந்த நொடி
அவரின் விரல் ஸ்பரிசம் என் தோளில் படும் அந்த தருணம் 
பட்டாம் பூச்சி சிறகடிக்க ,
மலர்கள் மலரும் தருணம் போல் தேகம் சிலிர்க்க
விவரிக்க இயலா உணர்வு என்னை ஆட்கொள்கிறது.

என் சகி நீ ... என்னுள் பாதி நீ... 
உனக்கு உறுதுணையாய் நான் இருப்பேன் ..
என்று  அவர் ஸ்பரிசம் உணர்த்தியது..

என் இணை... நீ  உன் துணை நான்...
இனிவரும் காலங்களில் இன்பத்துன்பங்களை
உன்னுடனிருந்து பொறுப்பேன்
என்ற உறுதியோடு...மேல் சாயும்  பொழுதில்
நான் உணரும் அவர் வாசம்
எந்நாளும் என் மேல் வீச
உள்ளம் வேண்டுகிறது.

இப்படியே உன் தோள் சாய்ந்து  விடியும் வரை
கதை பேச  ஆசை கொள்கிறது மனம்

கடலின் ஆழத்தை மிஞ்சும்
அன்பையும் காதலையும் கொண்டு
வாழ்வின் அர்த்தத்தை
ஆழமாக்கும் முயற்சியில் நாங்கள்...

என்னவனின் உடனிருக்கும் நொடிகள்
சொர்கமாய் நான் உணர...
விடியலை தூரமாக்க... இரவே நீயும் நீள்வாயோ???


Pages: [1]