Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: 1 ... 10 11 [12]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-038 உலகில் ரசிக்க ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும்!  நான் அதிகமாக நேசித்தது உன்னுடன் பேசும் போது எனக்கு கிடைக்கும் அந்த  நொடிகளை தான்....

துடிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்துக்கு தவிக்கவும் கற்று கொடுத்தது உன் நினைவுகள் தான்...
உன் நினைவுகள் இல்லாத என் விடியலும் இல்லை...

உனக்காக துடிக்கும் என் இதயமும்... உன்னுடன் பேச துடிக்கும் உதடுகளும்... உன்னை காண தவிக்கும் என்  கண்கள் ஆயிரம் கதை சொல்லும் என் காதலின் ஆழத்தை....

ஏனோ சில கோபம்... ஏனோ சில மௌனம்..
ஏனோ சில தயக்கம்..
நம் காதலில் கண்டேன்... ஆனாலும் அதையும் ரசிக்கிறேன்... ஏன் தெரியுமா கோபம் தீரும்போது மௌனம் உடையும் போது... கெஞ்சி பேசிட நானும் கொஞ்சி பேசிட நீயும்! அன்பு மழை பொழியே நம் காதலும்... கோபத்தின் பின்னால் ஒழிந்து கொண்டிருக்க... உன்னை எப்படி நான் வெறுத்து செல்வேன் அன்பே....

நீ அருகில் இல்லாத போது உன்னை தேடும் கண்கள்... நீ அருகில் வந்தவுடன் இமைக்க மறுக்கும் என் கண்கள்... அன்பு நிறைந்த கண்ணீரோடு வரும் காதல்  அது...  மோதலில் ஆரம்பித்து காதலில் முடியலாம் தவறில்லை...ஆனால் காதலில் ஆரம்பித்து மோதலில் முடியும் காதல் உயிர் உள்ளே சென்று உயிருடன் கொல்லம் சக்தி காதலுக்கு உள்ளது...

தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் காதல் அழகு தான்... ஆனால் ஒரு போதும் தவிக்க விட்டு சென்று விடாதே... அந்த நொடி என் இதயத்தை ரணமாக்கி விடும்....

ஆயுள் முழுதும் கைதியாக இருப்பேன் உன் இதயமோ சிறையாக இருந்தால்.... சண்டை போட்டு உன் மௌனத்தை கூட ரசிப்பேன்... கோபத்தை உடைக்கும் என் காதல் உன் மௌனத்தை விட பெரியது என் அன்பே....

காதலில்  வரும் மௌனத்தை கூட புரியாதவர் பிரிந்து செல்கின்றனர்... புரிந்தவர் அன்பை மேலும் கொடுத்து காதலை வலுப்படுத்துகின்றனர்... காதலில் வரும் கோபம் கூட காதல் அதிகம் இருப்பதால் தான் வருமே தவிற... விட்ட விலக இல்லை...
உண்மையான இதயம் அடிக்கடி குட்டி குட்டி சண்டை போட்டு காதலை ரசிக்க கற்று தரும்! அது நம் காதலில் உள்ளது அன்பே .. புரியும் காதல் என்றும் பிரிவை தேடாது... கோபத்தில் இருக்கும் அன்பை உணர்ந்தவருக்கு என்றும் காதல் வெற்றி தான்....

காதல் சண்டை போட தயாரா!.... கோபத்தில் அன்பை கொடுக்க தயாரா! அப்போ உங்கள் காதல் அந்த கோபத்தையே வென்று விடும்.... இனி உங்கள் அன்பானவர் உங்களிடம் முதலில் அன்பை எதிர்பார்க்காது சண்டை போட தான் காத்திருக்கும்... ஏன் தெரியுமா ... நீங்கள் தான் சண்டையின் பின்னால் அதிக அதிக காதலை கொடுக்க போகின்றீர்களே...😍

உன்னை நினைக்காத நாள் இல்லை!😍
உன்னை நேசிக்காத பொழுது இல்லை💕
உன்னை மறந்த நிமிடமில்லை
உன்னை மறக்கவும் நினைக்கவில்லை💞

February 08, 2024, 08:55:14 am
1
Happy Birthday Coffee BoY
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday (11-02-2024) Wishes To Our Lovable Coffee BoY Wishes Him All The Very Best & Good Luck👍


🎊💫🎁 Wishing You A Beautiful Day With Good Health And Happiness Forever🎊💫🎁

🍫🍬🍰Be Happy With Your Loved Ones
May Your Dreams All Come True🍫🍬🍰

February 10, 2024, 11:57:06 pm
1
Re: Happy Birthday Coffee BoY
Many more happy returns.,
Wish u all success as ur heart 😍
Thank you for making us entertained in the way of providing a peaceful platform.
Beyond every small fights this is a special wish from me.

Happy Birthday Coffee BoY 🎂

Stay happy... Always wear a smile on.... 😇

February 11, 2024, 12:05:13 am
1
Re: Happy Birthday RIJIA
I really don have any proper words to wish you, but I have my heartly wishes for your lovely Birthday 😍😍

As ur smile glows day by day, ur positive vibes glows the same.. Such a kind hearted sisi it's my special wish for u...

எல்லோரின் மனதில் பூக்கும் ஒரு சிறிய பூ உன் புன்னகை....
பூவினும் மென்மையான குணம் உடைய இந்த
பேசும் கவிதைக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 💜💜💜

Wishing you a lovely year and wonderful life as ur kindness to all 💝
 

February 22, 2024, 10:22:23 pm
1
Re: கவிதையும் கானமும்-039
"அம்மா மாதிரி"

ஆண்களை உணர்ச்சிவசப்படும் தருணங்களில் கவனித்ததுண்டா ?

நன்றாய் அக்கறைப்படும் ஆசிரியையில்;
நல்வழி காட்டும் நண்பியில்;
சோர்ந்து விழ சேர்ந்து நின்று "பாத்துக்கலாம்" என தோள் தரும் காதலியில்;
"என்கிட்ட ஏன் சொல்லல" என உரிமையோடு கோபிக்கும் தமக்கையில்;
பிறப்பிடம் விட்டு பிழைப்பிற்கு வந்த இடங்களில்
"சாப்பிட்டியா" என கேட்கும் ஒவ்வோர் குரலிலும்;
"இளைச்சு போய்ட்ட" ன்னு சமைத்து தரும் அக்காமார்களின் தூய அன்பிலும்;
அப்படியே அம்மாவின் சாயல்,
அந்நேர ஆண் மனத்தில் அசரீரியாய் கேட்கிறது.
"இவர்கள் அப்படியே அம்மா மாதிரி"
ஆம், அம்மாவை தான் காண்கிறேன் அத்தனை பேரிலும்.

அந்த "அம்மா மாதிரி" அன்பைத்தேடி தான் வாழ்க்கை முழுதும் ஓடுகிறேன்.
அன்பு காணும் இடமெல்லாம் அவளை அங்கு பொருத்தி அழகு பார்க்க
"அம்மா மாதிரி" எனும் சொற்றொடரின் செறிவு காலத்தோடு அதிகரித்தே செல்கிறது.
அம்மா அனைத்தும் ஆகி விடுகிறாள் - கடவுள் போல

ஆண்பிள்ளைகளின் முதல் காதலி அவள்.
போர்க்களம் தான் வாழ்க்கை என்ற போதும்,
கேடயமும் ஆயுதமும் தான் தேவையென்ற போதும்,
கேடயமாய் தான் நின்று
ஆயுதத்தை கையில் தந்து
படித்துக்கொள் என்றவள் அவள்.
இரும்பு கேடயமல்ல;
இரத்தமும் சதையுமாய், உரிமையும் உணர்வுமாய்
அவள் அன்பெனும் கேடயம்.

தகப்பன் அன்பு கிடைக்காத போதும்
தகப்பனும் தாயுமாய் நின்று காத்தவள்.
போர்க்கள வாழ்வில் எனை நானே பார்த்துக்கொள்ளும் போதே
இத்தனை வலிகளை கடக்கிறேன்;
அவள் எமக்காய் தனியே எத்தனை வலிகளை கடந்திருப்பாள் - அத்தனையோடும்
அவற்றை புறம் வைத்து அன்பை மட்டுமே எமக்கு கடத்தியிருக்கிறாள்.
கைம்மாறாய் எனக்கு ஒன்றே உண்டு ...
அதில் தான் அவளின் மொத்த சந்தோசமும்.

(திருக்குறள்) "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"

அத்தனை பேரிலும் நான் அம்மாவை கண்ட போதிலும்
அம்மாவை அறிந்தவர்கள் என்னில் தேடுவதும் அதுவே தான் - அம்மாவின் நற்குணங்கள்
அவர்கள் மனதில் இருந்து
"அப்படியே இவன் அம்மா மாதிரி" எனும் வாழ்த்திற்காகவே ஓடலாம்,
அது தான் வாழ்க்கை.

அனைத்து பெண்களிலும் அம்மாவை தேடியவன் - தேடலோடு
அம்மாவிற்கான என் அன்பையும் மதிப்பையும்
அம்மாவெனவே அனைத்து பெண்களிடமும் கொடுக்க நினைக்கிறேன்;
அதில் தான் அவளின் மொத்த சந்தோசமும்.
நிச்சயம் பெற்றுவிடுவேன் என் கிரீடத்தை
"அப்படியே இவன் அம்மா மாதிரி"

சி. வி. ஆர்.

March 06, 2024, 12:23:17 pm
1
Re: கவிதையும் கானமும்-039

என்னுள் நீயே...


இயல்பான ஓர் இனிய உறவில்
  மென்மையாக நேசம் நிறைந்த புன்னகையோடு....

தன்னுள் விவரிக்க முடியாத அளவு
  வலி நிறைந்த வழிகளில்
பயணித்த களிப்பு துளி அளவு இல்லாமல்...

தனக்காய் என்று, எண்ணம் கொள்ளாமல்
சலிக்காது தன் உயிரான அன்பின் வாசம்
பொழுதும் சேய் மீது விழ...

ஆசையாய் சேயின் அழகை ரசித்தே
அனைத்து  இன்னல்களையும்
சிறிய சிரிப்போடு கடந்து...

தன்னை தாக்கியவை ஏதும்
 தன்னோடு உறவாடும் சேய்க்கு சேராது
அனைத்து துன்பங்கள் தன்னோடு சேர்த்து
இன்பம் இனிதாக தன் சேய்யோடு பகிர்ந்து...

இணையற்ற அன்பை பொழிந்த அவள்
ஏனோ என்னுடன் இருக்க மட்டும் மறந்துவிட்டால்

நினைவில் கூட எனக்கு
 இன்றும் ஆழகாய் காண்பிக்க
ஆழமாய் தன் உறவின் பதிவை
 சற்றும் மறுக்கவோ மறக்கவோ இயலாது
அனைத்தும் அன்பாய் என்னுள் நீயே..

மீண்டும் கிடைக்குமோ 🥺









March 10, 2024, 12:35:01 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#057
Hi Sangeetha Megam team,

Intha varam I m here to enjoy. Epavum pola Sangeetha megam plays a good part in my life as a stress burster. Thank you. Kalakal RJ DON NILA and DJ APPU KUTTY ku my frst applause. Thank you for the show.

Intha week na kekra song
Song name: Kaathal kavithaigal
Movie : Gopura vaasalile
Music : Maestro Ilayaraja Sir

Intha song my recent play list la romba ottikichu, SPB and Chitra ma voice la i really love it..

Thank you SM Team 💜


March 17, 2024, 09:05:03 pm
1
கவிதையும் கானமும்-040 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-040


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

March 18, 2024, 07:21:06 pm
1
Re: கவிதையும் கானமும்-040


உனதருகில் நான்...


ஒவ்வொரு நிமிடத்தின் ஆழங்கள்
 சற்று கடினமாக கடக்க நேர்ந்தாலும்
என்னில் இருக்கும் எண்ணில்லா உணர்வை
 ஏனோ! வெளிப்படுத்த வெய்த்தது நீயே....

எவற்றை இழந்த பொழுதும்
 எனக்காய் என்று என்னோடு இன்றும்
உறவாடும், உன் எண்ணத்தின் மதிப்பு
 உன்னோடு இருக்கும் என் சிரிப்பில் வெளிப்படும்....

எண்ணற்ற எண்ணங்கள் அனைத்தும்
  எண்ணக் கூட வெய்க்காது,
விலகியே விரும்பும் உன் மனதின் செயல்பாடு
  செயல் இழந்த என்னை ஓர் புதிய செயழியாக மாற்றியது....

சிறிதும் செயல் இழக்க நேர்ந்தால் கூட
 மனதின் அன்பை கொண்டு என்னை சரி செய்யும் நீ..
செவி சாய்த்து உன் தோளில் விழும் தருணத்தில்
என்னோடு எழும் ஆசை அனைத்தும்
  உன்னுடன் கூற விரும்பியது யாதெனில்
தந்தையின் மார்போடு தன் முகத்தை முட்டி சாய்க்கும்
  ஓர் இன்புற்ற ஏக்கங்கள் நிறைந்த மழலையைப் போல
என்றும் உனதருகில் நான் 😇💜



March 20, 2024, 09:04:16 pm
1
Re: கவிதையும் கானமும்-041
மைக் கனவு...


ஓர் விரல் புரட்சி தான் நம் வாழ்க்கை என்று
        சிறுது அழகூட்ட தென்ப்படும் வியப்பு
விரலின் அழகை மெருகூட்ட அல்ல
        வாழ்கையின் எண்ணத்தை செறிவூட்ட
சிறிதேனும் மாறும் என எண்ணிக்கொண்டே
        சிறுதூரம் செல்வோம் என ஏங்கும் அவ்விரல்
சற்று திகைப்புடன் செலவழிக்கும் அந்நேரத்தின் மதிப்பு
        தன்னுடைய அனைத்தையும் மாற்றுமோ ?

மாற்றும் எண்ணமானது விரலோடு மற்றும் அல்ல
       அதனுடன் இருக்கும் எனக்கானதும் கூட
விரலின் பொறுப்பு அல்ல அந்த மாற்றம்
        அதனோடு அடங்கும் என் எண்ணத்தின் வெளிப்பாடும்
எண்ணிய அனைத்தும் செயலாற்ற
        அச்சிறு விரல் பொதுமெனில், செயல்படுமா நம் எண்ணம் ?
அனைத்தையும் மாற்றுமா என்றால் இயலாது, இருந்தும்
        மாற்றத்தின் விதையையாவது விதைப்போம்
மாறுவது என்னுடைய அனைத்துமாக இல்லை என்றாலும்
        அதை எண்ணி ஏங்கும் என் விரலின் மைக் கனவு...

       


April 09, 2024, 08:37:02 am
1