POEMS - கவிதைகள் => படித்து ரசித்த கவிதைகள் => Topic started by: MDU on February 12, 2019, 03:10:36 am
Title: அம்மா கவிதைகள்
Post by: MDU on February 12, 2019, 03:10:36 am
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும் முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும் தாயிடம் --உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே --உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும் பிள்ளை வயிறு பசி பொறுக்காது என்பவளே --உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால் விம்மி நான் அழுதால் விடியும் வரை விழித்திருந்து விழியில் உதிரம் வடிப்பாயே --உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய தண்டனை நீ பெற்று குற்றம் உன்மேல் எனும் சுத்தமானவளே --உனக்கு கோபிக்க தெரியாதா அம்மா .!
காற்றுப்பட்டு நான் வீழ்ந்தாலும் கண்பட்டு வீழ்ந்தேன் என்று ஊருக்கே திட்டிவிட்டு கண் திருஷ்டி கழிப்பவளே -- உனக்கு கண்ணானேனா நான் அம்மா .!
தோளுக்கு மேல் வளர்ந்த பின்பும் தலை துடைத்து எண்ணெய் தேய்க்க --இன்னும் சலிக்கவில்லையா அம்மா .!
விக்கினாலும் தும்மினாலும் நினைப்பது என் பிள்ளை என்று நெகிழ்கின்றாயே அம்மா
நினைத்துக்கொள்கின்றேன்
இன்னுமோர் பிறப்பில் உனக்கு நான் அன்னையாக ...!!
Title: அம்மா கவிதைகள்
Post by: MDU on February 16, 2019, 07:10:21 pm
கடல் கடந்து சென்றேன். கவிதைகள் பல படைத்தேன். வரலாற்றில் இடம் பிடித்தேன். காவியங்கள் பல படித்தேன். ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் இழந்தேன். அது தான் என் தாயின் முகம்.
Title: Amma
Post by: EWA on March 11, 2019, 01:29:17 pm