சிறைப்பட்ட காதல்
கோபம், வெறுப்பு, இவற்றிற்கு அப்பாற்பட்டது, உன் மீதான அன்பு,
நித்திரையில் நித்தம் நினைக்கும் நிஜம் நீ!
நீ இருக்கும் மனத்தில், கவிதைகளும் பிறக்கும்,உன் கனிவான பார்வையில் காதலும் மலரும்.!
உள்ளதை பேசும், அன்பின் வலிமை அதிகம் தான், ஆனால் அன்பை வெளிப்படுத்த, வார்த்தைகள் வெறுமனே கிடைத்து விடுமா என்ன?
நலம் விசாரிப்போடு முடிந்து விடும், உன் பேச்சின் மௌனம் கலையாதா, என்ற ஏக்கங்களுடனே நகரும் நாட்கள்!
கற்றுக் கொள்ள உன்னில் ஆயிரம் இருக்க, கடந்து செல்ல முடியாமல், உன்னையே பின்தொடரும் கால்கள்!
உன் சேட்டைகள் ரசித்து, சலிப்படையா காதலுரும் நாழிகை, என்னையே ஏமாற்ற மனமின்றி, விலகிச் செல்லும் நொடிகள் !
பேசா மடந்தையா! என்றெண்ணும் அளவு, தூண்டிலில் சிக்குண்ட மீன் போல, உன்னிடம் சிறைப்பட்ட என்னை விடுவிப்பாயா?..
போர்வீரன் காதல்
பாதையற்ற ஊருக்கு பயணம் போல, பார்த்த அவன் பார்வைக்கு, பதில் சொல்ல காத்திருந்தேன் காதலுடன்.!
போரிட்டு தோற்றுப் போன, போர் வீரன் மீதான அனுதாபம் அல்ல, இது.. அவன் வீரத்திற்கு மருந்திடும் அன்பின் காதல்.!
வாள் வீசி வாகை சூடி, என் வாழ்வின் வழித் தாங்கல் ஆனவன்.!
வானவில்லை வளைத்தெடுத்து வில்லாக்கும், உன் கரம் பற்றி வாழ்ந்து விட்டு சாதல் வேண்டும்.!
காகிதத்தில் ஆழமாக முத்தமிட்டு, காயம் தீர்க்கும் மருந்தாக தூதனுப்பி உன் துன்பம் நீக்குவேன்.!
அணுக்களும் இடம்பெயரும், அவன் அணைப்பினில் அனுதினமும் கண்ணுறங்க ..!
களவு போன கனவுகளை, தேடிச் சென்று அகப்பட்டு கொண்ட கள்வனாக ..!
காலியாக இருந்த மனதில், காதலறும்பும் கணங்களை கொடுத்தவனாக..!
அடுக்கடுக்காய் தினந்தோறும், கனவுகளை கொடுத்து அமைதியாக கடந்து செல்கிறான் ..!
அவன் கால்கள் நடக்கும், வழித்தடத்தில் பயணிக்கிறேன் என்றென்றும் காதலுடன் .!
மௌனம் அழகு |
மௌனம் அழகு
இந்த மௌனங்கள் பேசும் மொழி எத்தனை அழகு!
விடிந்த பொழுதில், முதல் முறையாக விரியும் மலரின், வாசனை நுகரும் மௌனம்!
இரைச்சலான மழை சத்தத்தின் நடுவே, இதமான தேநீர் ருசி, நாவை தொடும் மௌனம்!
பேருந்தை பிடிக்க மூச்சிரைக்க ஓடி, ஏறிக்கொண்டதும் இளைப்பாறும், அந்த நொடி மௌனம்!
பிரிந்து போன பள்ளி காதலின், பல வருடம் கழித்த சந்திப்பின் போது, ஏற்படும் இனம்புரியா மௌனம் !
விருப்பப் பாடலில் வரிகள் மறந்து, முனுமுனுப்புடன் நின்று விடும் மௌனம் !
ஆர்ப்பரிக்கும் கடலில், நம் கால்களை தொடாமல் ,சோர்ந்து திரும்பி செல்லும் சிறு அலையின் மௌனம்!
மங்கலான வெளிச்சத்தில், மெல்லமாக நடைபோடும் கால்களுக்கு, வழிகாட்டும் நிலவொளியின் மௌனம் !
அதீத குழப்பமற்ற, ஆளைக் கொல்லும் வார்த்தையற்ற, அநாவசிய கோபமற்ற, அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே.!
உன் முகம் பார்த்து நான்
நலமாக இல்லை..
நாட்கள் நகராமல் நின்று விடவில்லை..
எண்ணங்கள் தேங்கி போய் விடவில்லை..
முகவரியை தொலைத்து தேடி அலைய வில்லை..
என்றெல்லாம் பேச விரும்பவில்லை..
எங்கே உன்னை தேடுவதாக நினைத்து கொள்வாயோ...
உன் ஆறுதலுக்கும், அன்பிற்கும் அடிமை என்றெண்ணி விடுவாயோயோ..
என்று மனம் பதபதைக்கிறது..
ஒருவர் மட்டுமே தான் வாழ்க்கையா என்ன..?
முடிந்து போன வாழ்விற்கு முதலுதவி எதற்கு??
நான் ஒன்றும் கடந்து செல்ல முடியாத அளவு அன்பை வைத்து விடவில்லை உன்மேல்..
என் மகிழ்ச்சியான முகமே நீ காணும் என் நிரந்தர முகமாக இருக்கும்..
Wow ammuu nice
|
நிஜமான காதலே..
பக்கம் பக்கமாக கவிதை வேண்டாம்..
பாசமான பேச்சு வேண்டாம் ..
காதலில் கரைய வேண்டாம்..
கனவுகளில் வரவே வேண்டாம் ..
என் குறுஞ்செய்தி ஒன்றை கண்டு, உன் முகத்தில் பூக்கும் சிறு புன்னகை போதுமடா..
அதிகமான அன்பில் மனம் உன்னையே தேடுவதும்...
பிறகு பேசிக் கொள்ளலாம் என தள்ளி போட்ட கதைகள் பல உள்ளதும்..
சரி என்ற வார்த்தைக்கு பின் சரளமாக பேச நினைத்து பேசாமல் நிற்பதும்..
பேசும் போது அமைதியாக இருந்துவிட்டு பேசாத போது உன்னையே தேடுவதும்..
விசித்திரமாய் இருக்கிறதே..
காரணங்கள் புரிய மறுக்கிறதே..
இறங்கி வருவதில் இரக்கம் காட்டினால் இடைவெளிகள் குறையுமடா..
எல்லைகள் இல்லையென்று தொல்லை தர முடிவெடடா..
நீதான் என் நிஜமான காதலே..