GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Empty Dappa on June 22, 2023, 03:39:22 am

Title: அன்பின் விதி🩷
Post by: Empty Dappa on June 22, 2023, 03:39:22 am
மறக்கவியலாத ஒரு தாக்கத்தை
நமக்குத் தந்த
எந்த விஷயத்தையும் நாம வெகு சுலபமா மறந்துட்றது இல்ல!
அதன் Impact உள்ளுக்குள்ள
இருந்துட்டே இருக்கும்.
அது லைப்ல நாம சந்திச்ச வினோதமான மனிதர்களாக இருந்தாலும் சரி!
மனசுக்கு நெருக்கமாக
நாம சேர்த்து, அணச்சி வச்சிக்கிட்ட மனிதர்களாக இருந்தாலும் சரி!

சிலரோடு மட்டும் தான்
பேசிக்கிட்டே இருக்குறதுக்கும்,
எதையாவது ஒன்ன
அவுங்க கூட பரிமாறிட்டே இருக்குறதுக்கும்,
நம்ம மனசு துடிச்சிட்டே இருக்கும்.
அது அவுங்க மேல உள்ள
ஈடுபாட்டின் உயர்நிலை.
அவுங்களோடான உறவு,
ஏதாவது ஒரு வழில
என்னைக்கும் நமக்கு இருந்துட்டே இருக்கனும்ன்ற படபடப்பு,
சில போது பயமா கூட மாறும்.

கொஞ்சம் ச்சில்!
கொஞ்சம் ரிலாக்ஸ்!
இந்த பதட்டம் பயமாகி,
அந்த பயத்துக்கு ஏற்றாற்போல
அவுங்கள தவற விட்ற மாதிரி
ஒரு ஃபீல் மைண்ட்டுக்குள்ள க்ரியேட் ஆகுது.

அப்றம் என்ன?
நீ சரியா பேசல!
சரியா புரிஞ்சிக்கல!
சரியா கவனிக்கல!
நீ முன்ன மாதிரி இல்ல!
போன்ற குறைகள் தான்
நிறைய மனசுல தழும்பி நிற்கும்.

ஒரு கட்டத்துக்கு மேல
எதையெல்லாம்
நம்மளால தாங்கிங்க முடியாம போகுதோ! எதையெல்லாம்
மன முரண்டோடு உள்வாங்கி,
ஏத்துக்க முடியாம திணறுகிறோமோ!
அதை எல்லாம் சர்வ நிச்சயமாய்
சலித்துப் போனவைகளில்,
அல்லது விருப்புக் குறைந்தவைகளில்
நம் மனம் சேர்த்துக் கொள்ளும்.
ஆனா...!
அதுக்கெல்லாம் காலவரையறை இல்ல!
அடுத்த நாளே கூட அந்த சலிப்பு உடையலாம்.
அவுங்க திரும்ப வந்து பேசுற வரை தான் நம்ம கர்வம் எல்லாம் ஒட்டிக்கும்.
அதுவர நாம திட்டலாம், கதறலாம், எல்லாத்தையும் வெறுப்போடு அணுகலாம்.

எதுவுமே பற்றில்லாத போது
மறுபடி இந்த மனசு வேண்டுறது
ஒன்னே ஒன்னு தான்.!
"அவுங்க வந்து பேசினா நல்லாருக்கும்ல"

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்!
புரிதலின் அடிப்படையில்
நம்மளோட யாரெல்லாம்
கருணையோடு கரம் கோர்த்தார்களோ...! அவுங்களுக்கும் கண்டிப்பா
நமக்குள்ள இருக்குற,
அதே Impact இருந்துட்டு தான் இருக்கும்.
அதான் அன்பின் விதி.!
Title: Re: அன்பின் விதி🩷
Post by: Vaanmugil on June 22, 2023, 10:30:33 am
உண்மை...... :( சுகமும் வலியும் அன்பின் விதியில்..... அருமை.....
Title: Re: அன்பின் விதி🩷
Post by: Sanjana on June 25, 2023, 06:45:20 pm
மறக்கவியலாத ஒரு தாக்கத்தை
நமக்குத் தந்த
எந்த விஷயத்தையும் நாம வெகு சுலபமா மறந்துட்றது இல்ல!
அதன் Impact உள்ளுக்குள்ள
இருந்துட்டே இருக்கும்.
அது லைப்ல நாம சந்திச்ச வினோதமான மனிதர்களாக இருந்தாலும் சரி!
மனசுக்கு நெருக்கமாக
நாம சேர்த்து, அணச்சி வச்சிக்கிட்ட மனிதர்களாக இருந்தாலும் சரி!

சிலரோடு மட்டும் தான்
பேசிக்கிட்டே இருக்குறதுக்கும்,
எதையாவது ஒன்ன
அவுங்க கூட பரிமாறிட்டே இருக்குறதுக்கும்,
நம்ம மனசு துடிச்சிட்டே இருக்கும்.
அது அவுங்க மேல உள்ள
ஈடுபாட்டின் உயர்நிலை.
அவுங்களோடான உறவு,
ஏதாவது ஒரு வழில
என்னைக்கும் நமக்கு இருந்துட்டே இருக்கனும்ன்ற படபடப்பு,
சில போது பயமா கூட மாறும்.

கொஞ்சம் ச்சில்!
கொஞ்சம் ரிலாக்ஸ்!
இந்த பதட்டம் பயமாகி,
அந்த பயத்துக்கு ஏற்றாற்போல
அவுங்கள தவற விட்ற மாதிரி
ஒரு ஃபீல் மைண்ட்டுக்குள்ள க்ரியேட் ஆகுது.

அப்றம் என்ன?
நீ சரியா பேசல!
சரியா புரிஞ்சிக்கல!
சரியா கவனிக்கல!
நீ முன்ன மாதிரி இல்ல!
போன்ற குறைகள் தான்
நிறைய மனசுல தழும்பி நிற்கும்.

ஒரு கட்டத்துக்கு மேல
எதையெல்லாம்
நம்மளால தாங்கிங்க முடியாம போகுதோ! எதையெல்லாம்
மன முரண்டோடு உள்வாங்கி,
ஏத்துக்க முடியாம திணறுகிறோமோ!
அதை எல்லாம் சர்வ நிச்சயமாய்
சலித்துப் போனவைகளில்,
அல்லது விருப்புக் குறைந்தவைகளில்
நம் மனம் சேர்த்துக் கொள்ளும்.
ஆனா...!
அதுக்கெல்லாம் காலவரையறை இல்ல!
அடுத்த நாளே கூட அந்த சலிப்பு உடையலாம்.
அவுங்க திரும்ப வந்து பேசுற வரை தான் நம்ம கர்வம் எல்லாம் ஒட்டிக்கும்.
அதுவர நாம திட்டலாம், கதறலாம், எல்லாத்தையும் வெறுப்போடு அணுகலாம்.

எதுவுமே பற்றில்லாத போது
மறுபடி இந்த மனசு வேண்டுறது
ஒன்னே ஒன்னு தான்.!
"அவுங்க வந்து பேசினா நல்லாருக்கும்ல"

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்!
புரிதலின் அடிப்படையில்
நம்மளோட யாரெல்லாம்
கருணையோடு கரம் கோர்த்தார்களோ...! அவுங்களுக்கும் கண்டிப்பா
நமக்குள்ள இருக்குற,
அதே Impact இருந்துட்டு தான் இருக்கும்.
அதான் அன்பின் விதி.!

AGAIN A GOOD ONE FRD....
Title: Re: அன்பின் விதி🩷
Post by: RiJiA on July 19, 2023, 11:26:29 am
GOOD ONE👏👏