29
« on: December 01, 2022, 08:17:48 am »
"பள்ளிக்கூடம் என்றுமே என் மனதில் பூங்காவனம்!!!...
"பள்ளிப்பருவம் என்றுமே என் நினைவில் பிருந்தாவனம்!!!...
"பள்ளிக்கூடம் என்னை ஈன்றெடுத்த மற்றொரு தாயின் சோலைவனம்!!!...
"என் தாயின் கருவில் பாதுகாப்பாக இருந்தேன்!!!
"இவ்வுலகிற்கு நான் கனவுகளோடு பிறந்தேன்!!!
" தாயின் பிரியாத அரவணைப்பில் அனைத்தும் உணர்ந்தேன்!!!
"வருடங்கள் கடந்தன திடிரென முதல் முறை பள்ளிக்குச் செல்ல ஒரு சின்ன பயம் உண்டானது"....
"என் மனதில் பயத்தையும், தோளில் புத்தகத்தையும் சுமந்தபடி பள்ளிக்கூடத்தை அடைந்தேன்... `அம்மா... அம்மா... என்ன விட்டுட்டு போகாதேம்மா என்று கதறி அழுதேன்"....
"என் அம்மாவோ என் குமுறல் அழுகையைப் பார்த்து கண் கலங்கி நின்றார்"....
"பள்ளிக்குச் சென்ற அந்த முதல் நாள் நான் ஒரு அசத்துடனும், பயத்துடனும் அழுது கொண்டே பெண் ஆசிரியரின் முகத்தைப் பார்த்தேன்....
என் வகுப்பு பெண் அசரியரோ என்னை தூக்கிக்கொண்டு அழதே என் தங்கமே என்று கூறியது இன்றும் என் நினைவில் வைத்திருக்கிறேன்"....
"பள்ளிக்கூடம் என் உள்ளத்தில் அறிவை அள்ளிக் கொடுத்த ஞானச்சாலை"....
"என் பிஞ்சு விரல் பிடித்து அ...ஆ.... என்று சொல்லித்தந்த என் பெண் ஆசிரியரின் முகம் 31 வருடங்கள் கழித்தும் இன்றும் என் மனதில் பதித்திருக்கிறது"....
"பள்ளிக்கூடம் என் வாழ்க்கையின் பொன்னான பருவ நாட்களில் ஒன்று"....
"பள்ளிக்கூடம் என் நண்பர்களுடன் நான் சந்தோஷமாக குடியிருந்த நினைவுக்குடு"....
"பள்ளிக்கூடம் அன்று என் நண்பர்களுடன் துள்ளிக்குதித்து விளையாடிய ஆனந்தக்களம்"....
"பள்ளிக்கூடத்தில் நண்பர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடுவது, பந்துவீசி விளையாடுவது, கண்ணாமூச்சி விளையாடுவது மற்றும் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொள்வது என பல சந்தோஷம் மிகுந்த அந்ந தருணங்கள் மிகவும் அற்புதமானவைகளே"....
"பள்ளிக்கூடத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அந்த சந்தோஷமான தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியனவையே"....
"பள்ளிக்கூடத்தில் பள்ளிப்பருவத்தில் எனக்கு கிடைத்த என் ஆருயிர் நண்பர்களின் நட்பு இன்று வரை எனக்கு கிடைத்த பொக்கிஷம்"....
"பள்ளி விடுமுறை தினங்களில் கூட பள்ளி செல்ல முடியவில்லையே என்று என் மனதில் ஒருவித ஏக்கம்"....
"நண்பர்களை காண முடியவில்லையே என்று என் மனதில் ஒருவித துக்கம்"....
"பரிட்சை நேரம்...வினாக்கள் இன்னும்... எத்தனை இருக்குன்னு எண்ணம்.. விநாடிகள் நகர.... பயமோ உதர.... நண்பனோ விடை கொடுக்க....
பதில் அளித்தேன் கை வலிக்க.... சந்தோஷமோ என் மனம்முழுக்க"....
"இப்படி என் பள்ளிக்கூட அனுபவத்தை சொல்லிக்கொண்டே போகலாம்"....
"என் வாழ்வில் மீண்டும் திரும்பக் கிடைக்காத அந்த நாட்களை எண்ணி திரும்பி பார்க்கும் போது கனத்த இதயமும் கண்களில் கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது"....
"கடவுள் என்னிடம் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்!!!
"எனக்கு என்னுடைய அம்மாவை திரும்பக் கொடு, எனக்கு என்னுடைய பள்ளி நாட்களை திரும்பக் கொடு என்று தான் கேட்பேன்"....
இப்படிக்கு
உங்கள் NATURE LOVER (இயற்கை நேசகன்)