Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-039 அன்னையின் அன்பில் அரவணைக்கப்பட்ட
அனைவருமே அன்பானவர்கள்..
அறிவானவர்கள்.. அழகானவர்கள்.!நேசிக்கும் உறவுகள் யாவும்
நம் அம்மா ஆக முடியாது.

வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்
இருந்தாலும் நாம் ரசிப்பது
நிலவை தான்..
பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்
நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டுமே.

எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா
கிடைத்து விடுகிறாள்.. ஆனால்
எல்லா அம்மாக்களுக்கும்
நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை.!

துன்பங்கள் வரும் தருணம்
தாயின் மடி சொர்க்கம்.
 இன்று என்னை இவுலகுக்கு அறிமுகம் செய்த அன்பு அம்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்கள். தாயை வணங்குவோம்
தாய்மையை போற்றுவோம்


March 09, 2024, 02:41:33 pm
3
Re: கவிதையும் கானமும்-040 ஒன்றாய் பிறந்த உறவுகள் நாங்கள்
இரண்டாய் பிறந்தும் ஒரே எண்ணங்கள்
பாசம் பகிரும் பிறப்புகள் நாங்கள்
நேசம் மறக்கா அண்ணன் தம்பிகள்
 
ஒன்றாய் குடித்த தாயின் பாலும்
சுகமாய் பகிர்ந்த தாயின் மடியும்
அன்போடு கிடைத்த நேச வளர்ப்பும்
சமமாய் கிடைத்த தாயின் அன்பும் .

எனதென்றும் அவனது என்றும் ஏதுமில்லை
ஒன்றாய் பயணிக்கும் வாழ்க்கை இதிலே
போட்டிகள் பொறாமைகள் என்றும் இல்லை
பொய்யாய் போற்றும் அன்பும் இல்லை

ஒருவரை ஒருவர் மறுப்பதுமில்லை
ஒருவரை ஒருவர் மறந்ததுமில்லை
துரோகங்கள் இல்லா எங்கள் வாழ்க்கை
துயரம் இல்லா இன்ப வாழ்க்கை

காலம் மாறும் கடமைகள் மாறும்
வேகமாய் போகும் உலகம் இதிலே
இனிந்தே பயணிக்கும் அண்ணன் தம்பிகள்
நாம் என்றுமிருப்போம் ஒற்றுமை உணர்வில்....

March 25, 2024, 09:58:24 am
2