மழலையின் மகத்துவம்.......
அழகு மழலையே !!!
பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......
உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?
உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....
உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே.....
உந்தன் விரல் தீண்டினால் தேகம் சிலிர்க்குமே.....
உந்தன் விழி பார்த்தால் ஆணவமும் அகலுமே.....
உந்தன் துயில் கண்டு சிந்தனையில் ஆழ்த்துமே.....
தத்தி தவழும் கணமே,
பூமியாய் மாறிட வானமும் ஏங்குமே!!!
அச்சமின்றி பாதம் பதிய வைக்கும் அழகு மழலையே
அரவணைத்து கொஞ்ச எண்ணும் உந்தன் அழகிலே....
எத்தனை அழகு உன்னிடம் ?
எண்ணி சொல்ல போதவில்லையே என்னிடம்.....
மழலையே உந்தன் மகத்துவம் கண்டு,
பெண்மையை இவ்வுலகம் வணங்குமே......
போர் வீரன் காதல்.... |
கைதி ஆனேன்.... |
அன்புள்ள அப்பா.....
தாயின் பாதி தந்தையே.....
கர்ப்பத்தில் சுமகிறாள் அவள்.
வாழ்வின் எல்லை வரை,
மார்பிலும், மனதிலும் சுமக்கிறாய் நீயே....
பூமிக்கு வந்தவுடன்
பூவாய் தாங்குகிறாய்....
உன் முதல் பார்வை புன்னகை கண்ணீரில்
என்னை ஏந்துகிறாய் நீயே....
நான் காணும் முதல் உறவு !
என் புது உறவு என் தந்தை நீயே....
பசி என்று அழுதால் அணைப்பாள் அவள்,
என் பசி அறிந்தும், தன் பசி மறந்து
தாலாட்டில் துயில வைப்பாய் நீயே....
தத்தித் தவழும் வேளையில்,
என்னை போல் அங்கு நீயும்
சிறு குழந்தை ஆகிறாய் என் தந்தையே.....
பாகன் போல் நானும் மாற
நீ அந்நேரம் மண்டியிட்டு
மகிழ வைப்பாய் தந்தையே......
என் பிஞ்சு விரல் பிடித்து
உன் பாதம் தொடர
சிறந்த வழிகாட்டியும் நீயே.....
பருவம் வந்தாலும்,
உன் மடியில் துயிலும்
இன்பம் வேறில்லை தந்தையே.....
அன்றும் என்றும்
சிறு குழந்தை போல என்று
எண்ணுகின்ற என் தந்தையே.....
புது உறவு புகுந்த வீடு என்று
அழைப்பில் காத்திருக்க
ஊரார் உறவினர் கூடியிருக்க
கட்டியணைத்து கண்ணீர் மல்க
முத்தமிட்டு துன்பம் காணும்
என் அன்புள்ள அப்பவே....
இவ்வுலகில் மிகவும்
அரிதான, அழகான, ஆழமான உறவு
என் தந்தை நீ என்பதும்,
உன் மகள் நான் என்பதுமே.....
I love you DAD.....
அன்புள்ள அப்பா..... |
Sis ma 🥹love u so much
என் தங்கை நிலா..... |
என் தங்கை நிலா.....
என் செல்ல தேவதை இவள்,
என் சின்ன தேவதை இவள்,
பூமிக்கு கிடைத்த அதிசய நிலவு இவள்,
பூக்களை விட மென்மையான
மனம் கொண்டவள்,
புன்னகையில் மனம் கவரும்
பூஞ்சோலை இவள்,
அதட்டி பேச அறியாதவள்
அன்பால் அரவனைப்பவள்,
அழுகை ஆள வந்தால்,
நம்பிக்கை என்ற வாள் வீசி
வதம் செய்பவள்,
இன்பம் துன்பம் வந்த போதிலும்
எதிர்த்து போராடும்
வீரப் பெண் என்ற பெயரும் கொண்டவள்
சாதிக்க பிறந்தவள்,
இவள் போல அழகு எங்கும் இல்லை,
இவளே என் செல்ல பிள்ளை,
இவள் குழந்தை மனம் போல்
வேறு எதுவும் தேவை இல்லை....
இவள் அன்புக்கு அடிமையாகாதவர் எவருமில்லை,
எனக்கு தங்கை இல்லை என்ற குறை தீர்த்தவள்,
இவளே என் அன்பு தங்கை நிலா செல்லம்......
I love u da NILA CHLMM.....
BEAUTIFUL KAVITHAI ❣
தனிமை...... |
தனிமை......
தனிமை என் இனிய நண்பனே,
சில சிந்தனைகள்
நினைவுக்குள் சிதையாமல் கிடப்பதை
மீண்டும் சித்தரிப்பு செய்வது தனிமை......
இது இனிமை இல்லை.....
ஆனாலும்
சில நினைவுகளை இனிமையாக்கும்,
இது வித்தியாசமானதுதான்
ஆனாலும்,
ஓர் விருப்பம்மான உணர்வு,
என்றும் நிரந்தரமான உணர்வு......
ஏனென்றால், அங்கு மட்டுமே
மனம் கவர்ந்தவரின்
நினைவையும், உறவையும்
மற்றும் சில அகிம்சையும்,
அழகாய் உணர வைக்கும்....
கடந்து போன நினைவுகளை
கண்முன் நிற்க வைக்கும்......
அந்த நினைவில் தன்னை தானே
இதழில் ஓரம் புன்னகைக்க வைக்கும்....
பொய் உறவாகினும்,
ஆறுதலும், நிம்மதியும்,
நாம் யார் என்பதை
உணர வைப்பவன் தனிமையே...
யாரில்லா போதிலும்
துணையாய் துணை நிற்பவன்
இவனே என் இனிய தனிமை.......
GOOD ONE SISS👏👏👏💐💐