POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

Arrow Kavithaigal

(1/6) > >>

Arrow:
இணையத்தில் இருந்து
இணைந்த உறவு

அண்ணன் என்றும்
தங்கை என்றும்
நண்பன் என்றும்
பரஸ்பரம்
விளித்து மகிழ்கிறோம்

ஓர் நாள் காணாவிடினும்
ஒவ்வொருவராய் வினாவுகிறோம்
கண்டாயா இவரை என

அடையாளம் மறைத்து
முகமூடியிட்டு தான்
பழகுகிறோம்
எனினும்
நமக்குள்
அன்பு என்றும்
வெளிப்டையானதே

இளவரசன்:
True Lines .

 Keep going   with own poems  bro.

Arrow:
இன்றும்
இரவு வரும்
இரவு வந்தால்
இதயத்தில்
இவள் நினைவு வரும்


இரவில்
இவள் வருகையில்
இவளை
இமைக்காமல் கண் பார்க்க
இன்பம்தனை தந்திடுவாள்

இவளை சுற்றி இருப்பர்
எண்ணிலடங்கா கூட்டம்

இவளை நெருங்க கனவு
கண்டு ஒரு கூட்டம்
இவளை முதலில் நெருங்கியவனை
இன்றும் நினைத்திடும்
இவ்வுலகம்

மாதமொருமுறை
மறைந்திடுவாள்
அந்நாள் 
மனதிற்கு சோகம்தனை
தந்திடுவாள்

குழந்தை முதல்
முதியவர் வரை
பாகுபாடில்லாமல்
விரும்பிடுவர்
இவளை

இது
இரவு நெருங்கும்
நேரம்
ஓடி வா
வெண்ணிலவே

Arrow:
தனித்து சுற்றிகொன்றிருந்த
வேளையொன்றில்

முகம் காணாமல்
உருவான உறவு
அன்பு ஒன்றே பிரதானம் என
தொடர்ந்த உறவு

கோபமோ
கேளிக்கையோ
கிண்டலோ
பரஸ்பரம் பெரிதாய்
பாதிக்காமல்
தொடர்ந்தது

கால சுயற்சியில்
குரூரத்தின்
கண்டறிய முடியாத
காரணங்களால்
தனித்து விட படுகையில்
மரணத்தின்
வலி உணர்கிறேன்

அன்பு
மட்டும்
எஞ்சிருக்க 

மீண்டும்
தனித்திருத்தலின்
சௌகரியம்
பழகிக்கொள்கிறேன்

MDU:

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version