Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - kittY

Pages: [1] 2
3
ஆயிரம் ஆயிரம் வார்த்தை இல்லாமால்  மொழி பேசும் இதயத்திலே.....❤️

நான் முதல் கேட்ட கீதம்.....கருவறை முதல் எனக்காக துடித்த என் தாயின் இதய துடிப்பின் ஓசையில் அறிந்த சங்கீதமே....
யாரும் இதுவரை இசைக்கவில்லை அது போல் ஒரு கீதம்.....இன்று முதல் எல்லோர் இதயத்திலும் விட்டு விட்டு துடிக்குது தாயின் கருவறை முதல் பாடிய தாலாட்டு.....

எத்தனை வகை சங்கீதம் இருப்பினும்....
என்னை பத்து மாதம் பத்திரமாய் பார்த்து கொண்ட தாயின் இதய துடிப்பின் கீதமே என் முதல் கீதமும் என் கடைசி கீதமும்......

தாயின் அன்பை தியாகத்தை மறந்து விட கூடாது என்பதாலோ என்னவோ....கடவுளால் நம் ஒவ்வொரு இதயமும் இடைவிடாது துடித்து கொண்டிருக்கின்றது... தாயின் தியாகத்தை இசையாய் ஒரு ஓசையாய் என்னுள் கேட்டுக்கொண்டே இருக்கின்றது....

பல பல சாங்கீதங்கள் உலகில் இருந்தாலும்.... அதை பற்றி சொல்ல தோனவில்லை என் இதயத்திற்கு.... எவராலும் இதயம் துடிப்பின் ஓசையை நகல் எடுத்து இதயத்தில் சேர்க்க முடியாத கீதம் அது தாயின் தியாக கலந்த  சங்கீதம் இதய துடிப்பின் ஓசை அது....

நம் கருவறை தோன்றிய நாள் முதல் கேட்ட இதயம் கீதம் ! இன்று பல உணர்வுகளில் கதை பேச கற்று தந்தது அதுவும் உண்மை தான்....நம் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு கீதம் ஒலிந்து கொண்டு தான் இருக்கின்றது
இதயம் அது எத்தனை நாள் துடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை... ஆனால் நீ துடிக்கும் வரை என் தாயின் கீதம் என்னுள் இசைந்து கொண்டே இருக்கும்.... என்று நான் என் தாயை மறந்தேனோ அன்று என் இதயம் துடிப்பதும் நின்று விடும்.....

எத்தனை எத்தனை இசைகளால் உலகம் சுற்றி கொண்டு இருந்தாலும் நமக்குள் துடித்து நம் உயிரோடு இருப்பதை உலகிற்கு காட்டி கொண்டிருக்கும் இதயம் போடும் இசையே முதல் இசை....

என் இதயத்தை நான் மறந்தாலும்... என் இதயம் என்னை மறக்கவில்லை லப் டப்... லப் டப்... என்ற சத்தத்துடன் இன்னும் இசைத்து கொண்டு தான் இருக்கின்றது.......அன்னையின் அன்பில் ஒரு தாலாட்டு என்னுள் இதயத்தோடு இதயம் உயிரோடு இணைந்த சங்கீதம்....(❤️அன்னையின் அன்பில் ஒரு தாலாட்டு என்னுள் இதயத்தோடு இதயம் உயிரோடு இணைந்த சங்கீதம்)....❤️

4
★உழைத்து உழைத்து
நித்தமும் உழைத்து
ஓய்ந்து விடாமல்... சோர்ந்து விடாமல் உழைத்து சிந்தும் வியர்வையில் வாழ்வை கரைத்து.... உயிர் போகும் நொடி வரை உழைக்கும் நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள் இதோ....~~~

உழைக்கும் கரங்காலாய் நீ இருக்க சொல்லில் சொல்ல முடியாது உழைப்பாளியின் மகிமையை.....
படிப்பு மாறலாம் ...
துறைகள் மாறலாம்...
சேவைகள் மாறலாம்....
ஆனால் உழைப்பு மட்டும் மாறதே....

விழிகளில் தூக்கம் தொலைத்து கைகள் சிவக்க, கால்கள் கடுக்க.... வீட்டிற்காய், வூறுக்காய், நாட்டிற்காய் உழைத்து மடியும் உமக்கு நன்றி சொல்ல இந்த நாள்....

வறுமைபட்டு, கஷ்டப்பட்டு,காயப்பட்டு
இஷ்டப்பட்டு கஷ்டப்படும் தொழிலாளிகளே  உம்மை மறந்தவர்களுக்கு நினைவூட்டும் அந்த இனிய நாள் இன்று...

தொழிலாளிகள் இல்லாவிடின் முதலாளி ஏது... முதலாளியின் கெளரவம் தொழிலாளி கொடுத்த  வியர்வை முத்துக்கள்... வியர்வை முத்துக்களாய் சிந்தியதால் பவளமாய் மின்னுகின்றனர் முதலாளிகள்.... உமக்கு நன்றி சொல்லவே இந்த நாள்....

 இலட்சியங்கள் ஏதுமில்லை.... உழைப்பை இலட்சியமாய் கொண்டு பூமியில் எங்கும் பூக்களாய் பூத்து குலுங்கும்  உழைப்பாளிகளே உமக்கு நன்றி சொல்ல இந்த நாள்....

வஞ்சனை செய்யா நெஞ்சத்தோடு....சிவந்த கரம் நீட்டி உழைக்கும் உங்கள் கரம் பற்றி பிடித்து சொல்லுகின்றேன்... உடல் அளவில் நீங்கள் காயாப்பட்டாலும் மனதளவில் நீங்கள் நிம்மதியாய் வாழ்வீர்கள்... முதலாளிகளை உருவாக்கும் தொழிலாளிகளே... உம்மை மறக்க நினைக்கவில்லை...
உங்கள்  உழைப்பால் எங்களை உயர செய்த எங்கள் சொந்தகாரர் நீங்கள்...(முதலாளிகளை உருவாக்கும் தொழிலாளிகளே... உம்மை மறக்க நினைக்கவில்லை... உங்கள்  உழைப்பால் எங்களை உயர செய்த எங்கள் சொந்தகாரர் நீங்கள்...

மீண்டும் ஒரு முறை உம் சிவந்த கரம் தொட்டு உமக்கு இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை சொல்ல கடமை பற்றியிருக்கின்றேன் நான்....

5
தடம் பிரலாமல் தடம் பார்த்து செல்லும் தொடர்வண்டி... என்னை சுமக்க நீ இருக்க.. இயற்கை ரசிக்க கற்றுத்தந்த முதல் பயணம் இது....

நீண்ட தூரம் போகனும்..
நினைவு இனிமை ஆகனும்....ஜன்னல் ஓரம் கரம் நீட்டி கொட்டும் மழையை ரசிக்கணும்...

எண்ணம் சிறகை விறிக்குது... பசுமை கண்டு வியக்குது....
ரசனைக்கு எட்டா நினைவில் அது ரசிக்க வைத்த பயணமிது....

 சில்லென்று காற்று வந்து மெல்லிசை பாடுது.... மழை சாரலும் துளி துளியாய் தாளம் போட... என் கரங்கள் தொட ஜாலம் காட்டுது... என் மனம் அலை பாயுது இயற்கையை  என் மீது கொண்ட காதலை கண்டு....

 இயற்கையோடு கதை பேசும் பயணமிது இயற்கையோடு வந்த காதலிது.... (இயற்கையோடு கதை பேசும் பயணமிது இயற்கையோடு வந்த காதலிது....)
கபடமில்லா இயற்கை அதை என்னை மறந்து ரசித்து விட்டேன்....

தொடர் வண்டி பயணமிது இன்னும் தொடராதா என்று ஏக்கத்தோடு விடை கொடுத்து செல்ல.... ஜன்னல் வெளியே நீட்டிய கரத்தை கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்சி விளையாடிய மழையில் இருந்து விட்டு பிரிய..... மழை சாரளும் அதிகமாய் தூறல் இட தூறலோடு வந்த கண்ணீர் அது என்று நான் புரிந்து கொண்ட.... இயற்கையோடு வந்த காதல் இது....

விடை கொடுத்து 
நானும் மெல்ல மெல்ல நடந்தேன்....இயற்கை காதலை இழந்த படி,(நானும் மெல்ல மெல்ல நடந்தேன்....இயற்கை காதலை இழந்த படி)😔

6
காரிருள் சூழ்ந்திட வயிற்றிலே சுடா வெப்பத்தை சுமந்து மின்னலுக்கே சிறு மின்னலாய் ஆனாயோ...
அதனால் தான் என்னவோ உனக்கு மின் மினி என்று பெயர் வந்ததோ...

இரவை ரசிக்க நீ வந்தாய் உன்னை ரசிக்க நான் வந்தேன்...
வெப்பம் இல்லாத அந்த ஒளியை உருவாக்க இன்றுவரை எந்த மனிதனாலும் முடியவில்லை....

இரவிலே
மரக்கிளையிலே அமர்ந்து மின் மினி பேரழகு தான்... ஆமாவசை இரவிலே பொளர்ணமியாய் சுற்றி திரிய நீ இருக்க... எந்த விளக்கும் தேவையில்லை எம் கைகளுக்கு.... கற்பனைக்கு எட்டா அளவு உன் வருகையோ ஒரு ஆச்சரியம் நிறைந்த விசித்திரம்....

உம் ஒளியை காண எம் கண்களுக்கு தான் இன்னும் ஒளி தேவை...
பகலிலே உறக்கம் கொண்டு  இரவிலே ஊர்வலமா
 வானில் தெரிவது விண்மீன்....பூமியில் திரிவது மின்மினி...
உம் அழகை காண குட்டி தேவதையாய் நான் இருக்க.... நிசப்தம் இல்லா இரவில் நித்தம் ஒரு கதை பேசிட வாராயோ மினிமியே என் கண்ணில் பட்ட கண்மணியே.... இந்த தேவதையையும் ரசிக்க வைத்து விட்டாயே உன் வெப்பம் இல்லா ஒளியால் என்னை கவர்ந்து விட்டாயே.....

யாரை தேடி அலைகிறாய் இந்த இரவில்...உன்னை தேடி நான் அலைகிறேன்... உன் வருகையால் என் கண்கள் மின்னலடிக்கிடிக்கின்றது.. என் இதயம் இடி இடிக்கிறது.... உன்னை காணும் இந்த நித்தம் ஒரு பயணம் முடிவில்லா பயணம்.....

உன்னை காணும் அழகிலே இனிய இரவிலே உன் வருகையை பார்த்து மரக்கிளையிலே பூத்திருப்பேன்.... அடடே கதை பேசி பேசி  விடியலும் வந்துவிட்டது... உன் ஒளியும் மங்கி விட... நானும் இனி மறைய போகிறேன்... நித்தமும் ஒரு இரவில் சப்தம் இல்லா பயணம் இது....

7
கொஞ்சி கொஞ்சி வளர்த்தாலும் கொய்யாப்பழம் தந்தாலும்.... அஞ்சி அஞ்சி வாழ எனக்கு விருப்பமில்லை....

கூண்டுகுள்ளே அடைத்து செல்வமாய் வளர்த்தாலும் தேவை இல்லை அது எதுவும்....என் சிறகை விரித்து இறக்கை அடித்து வானில் சுற்றி வர வேண்டுமே....

மரத்தின் உச்சியில் கூடு கட்டி கதைகள் பேச தோணுதே!!...விடியலை  கண்டவுடன் கூட்டமாய் கூட்டை விட்டு உலாவி வர தோணுதே..

இந்த மானிடம் செயல் கண்டு வருந்துகிறேன் ... எங்கே சென்று முறையிடுவேன், நீதி எப்படி பெற்றிடுவேன்... கூண்டுக்குளே கைதியாய் அடைத்து வைக்களாகுமோ.... அப்படி என்ன தவறு செய்தேன் உங்கள் கண்களில் பட்டது பாவம் தான்....

பாவப்பட்ட ஜீவன் நாங்கள் வார்த்தை புரியா  ஊமை நாங்கள்....இத்தனை செயல் பார்க்கும் நீங்கள் கண்கள் இருந்தும் குரடர்களோ...

அடைத்து வைத்து ரசிக்கின்றீரே.... எங்கள் உணர்வை உணரவில்லை..

கொஞ்சி கொஞ்சி பேசினாலும்... கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன் அடைக்கலமும் வேண்டாம் அடைத்து வைக்கவும் வேண்டாம்... உலகம் பார்க்க சிறகை விரித்து
...வானவில்லை ரசிக்கணும்....கொட்டும் மழையில் நனையனும்.... சிறு கூட்டை அமைக்கணும்... நேரம் பார்த்து வசிக்கணும்... உறவுகளை ரசிக்கனும்... எட்டா தூரம் பரக்கனும்....

அடைத்தும் வைக்கும் கரங்களே...விடுதலை தர  மறுக்கின்றிரே... இன்னொரு ஜென்மம் இருக்குமென்றால்... மானிடா எம் நிலை அறிய நீ இறக்கயுடன் பிறக்க வேண்டும் நான் கரங்களுடன் பிறக்க வேண்டும்.....
இருந்தும் மனிதா உம் தவறை நாங்கள் செய்ய நினைக்கல புரிய வைக்க முடியல😒.....



8
என்னவனே....
இலட்சத்தில் இலட்சியமாய் கரம் பிடிக்க வந்த என்னை கரம் தட்டி விட்டு போகாதே.....

இருளிலும் விலகி விட நீ என் நிழலாக இல்லை... என் உதிரமாக இருக்கின்றாய்... காயங்கள் இல்லாமல் வலிகளை உன்னால் மட்டுமே கொடுக்க முடியும் அன்பே.....

காலம் உள்ள வரை என் இதய கருவறையில் உன்னை  சுமப்பேன்.... நியோ தள்ளி சென்று நினைவின் வேதனை சுமையை கொடுத்து செல்கிறாய்.....

வாரத்தில் இரு நாள் விடுமுறையாம்.... உன் நினைவிற்கு  என்றும் விடுமுறை இல்லை உன் நினைவில் நான்.... துடிக்கும் இதயத்திற்கு எப்படி சொல்லி புரியவைப்பேன் துடிக்க வைப்பது அவன் தான் என்று....

தள்ளி செல்லாதே என் அன்பே...வேண்டும் உன் காதல் ஒன்றே...உன்னை மட்டும் நேசித்தேன் அது உண்மை மீண்டும் வேறொரு காதல் இல்லை .....         

சிதரிப்போன என் சிந்தனையில் சில்லு சில்லாய் உன் நினைவுகள்...கடந்து போன நீயும் மறக்க நினைக்க நானும்...பிரிந்து போன இடத்தில் உரைந்து போனதோ என் இதயம்....அதை உயிர் பிழைக்க செய்வாயா??....

காதல் ஒன்று உன்னில் கண்டேன்...வாழும் ஆசை என்னில் கொண்டே காதல் என்றால் கண்ணீர் என்று....இன்று நான் அறிந்து கொண்டேனடா....
விலகி சென்றதெனோ...விட்டு விலக முடியாமல் தவிக்கும் என் இதயம்...
     
மனசுல இருக்கிற வலியை மறைக்க தெரியுதே தவிர....
மறக்க தெரியவில்லை.... வழி நெடுவில் வலியுடன் ஒரு பயணம் உன் நினைவுடன்..... மறந்தும் கூட மறக்க மாட்டேன் உன் நினைவுகளை.....   




9
வெண்ணிற ஆடையிலலே காற்றோடு கலந்து..
தனிமையிலே தொலைந்து..
உதிரமில்லா இதயத்தின் புலம்பல் கேட்கிறதா....
விண்ணோடும் இல்லாமல் மண்ணோடும் இல்லாமல்...
வழி நடுவில் வலியாய்...
யாரிடமோ பயணம் சொல்ல மறந்தது போல்
அங்கும் இங்குமாய் சிறகடிக்கிறது....

ஒஹ் மனிதா...
என்னை தள்ளி போகாதே....
உடல் விட்டு உயிர் ஓடிவிட்டது...
இப்போது உடலும் இல்லை..உயிரும் இல்லை..
தனிமை வாட்டுகிறது....

உடல் அடக்கமானதும்
குடும்பமே என்னை விட்டு பிரிந்து விட்டது ..
உள்ளம் நினைத்து உறவை தேடி போனால்....
என்னை பார்த்தவுடன் நடுக்கதில் ஓடகின்றனர்.....

உறவே நான் என்ன பிழை செய்தேன்...
உறவை தேடி நான் வந்தது அது  என் தவறா?...
அல்லது என்னை மறந்து பிரிந்தது உங்கள் தவறா?...
 பகலிலே என்னால் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை....
 இரவிலே என்னால் நடமாடமல் இருக்க முடியவில்லை....

இரவு என்னை நிம்மதியாய் உறங்க விடாமல்....
நினைவுகளால் அலைய விடுகிறது...
தொலைத்த என் உறவை தேடி
கால் இல்லாமல் காற்றோடு மிதந்து வருகின்றேன்....

உறவோடு இருக்கும் போது
சென்ற இடமெல்லாம் தலை கோதி
போய் வா மகளே என்று சொல்லி அனுப்பும் உங்கள் வார்த்தை...
இப்போதும் என் காதில் ஒளித்து க்கொண்டு தான் இருக்கின்றது....
 
கடைசி நிமிடத்தில் ஏன் கூற மறந்தீரோ
 போய் வா என்று...
விடை தெரியாமல் அலைந்தோடி
வருகின்றேன் தெருவோரம்....
விடை கிடைக்காமல் செல்லவும் மாட்டேன் என் நிரந்தர இல்லத்திற்கு.....

வெளிச்சத்தை தொலைத்து இருளுக்குள் அடங்கி விட்டேன்...
என் நிறைவேறாத ஆசையால் நினைவுகளை தேடுகின்றேன்....
வா என்னிடம்... போய் வா என்று சொல்ல மறந்தாயோ...
உறக்கமில்லதா என் இரவுகளுக்குள்...
இரக்கமில்லாமல் என்னை தொலைத்து விட்டாயே ....

 நினைவோடு நான் இருக்கும் வரை
இரவோடு கலந்த என் பயணம் தொடரும்....
இப்படிக்கு நான் தான் உங்கள் பக்கத்தில் இருக்கும் ....
ஹாஹா ஹா ஹா சட்டென்று திரும்பி பார்க்காதே
நடுக்கத்தில் உறைந்து விடுவாய்....🙄

11
தம்பி எனும் தங்கத்துக்கு....👫

என் அழகான சொந்தம் ஒன்று எனக்கு பின்னால் பிறந்தாயோ அதிகாரம் செய்யும் அக்காவாக நானும்....சேட்டை செய்ய நீயும் பிறந்தாயே என் செல்ல தம்பி.....

அண்ணன் இல்லாத ஏக்கம் என்னுள் இருந்தாலும்... உன்னை பார்க்கும் போது அது காணாமல் போனது அன்பு செல்ல என்  சகோதரா....

பக்கத்தில் இருந்த போது பகைவன் போல் பார்ப்பேன்... நீ தொலை தூரம் சென்றதும் வேதனையில் துடித்து  போனேன்..
சிறு சிறு சண்டைகள் சேட்டைகள்
உன்னை அழவைத்து பார்க்கும் ஆனந்தத்தை கடவுள் எனக்கு மட்டும் கொடுத்தார்...

பார்பதற்கு தான் நாம் சண்டை காரர்கள்.... உண்மையில் நாம் பாசக்காரர்கள்....
 இன்று சண்டை போட நீ இல்லை கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய்... கடலளவு பாசத்துடன் உன் வருகைக்கு ஏங்கி கொண்டிருக்கின்றேன்... அன்பு சகோதரா.... நீ என் சகோதரன் உருவத்தில் இருக்கும் என் நண்பன் தான்....

எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை சகோதரன்... சகோதரனாய் நீ எனக்கு  கிடைத்தது எனக்கு மிகவும் பெருமிதம்....
வார்தயால் அதை விவரிக்க தேவையில்லை வார்த்தைக்கும் பஞ்சம் வந்து விடும்....

என் அன்பு சகோதரா என் சேட்டைக்கு சொந்தக்கார..... உனக்காக நான் ஒரே ஒரு அக்காவாக...எனக்கு நி ஒரே ஒரு தம்பியாக இருப்பதில் கர்வம் கொள்கிறது மனம்.....
நம் இந்த சேட்டை சண்டை பயணம் குறும்புத்தனம் வாழ்நாளும் தொடர வேண்டும் என் நெஞ்சோடு ஒரு ஏக்கம்.....என் செல்ல தம்பியே.....👫

12
வெள்ளை மனதோடும் துள்ளி விளையாடும் இந்த சிறுவர்கள் தான் தேசத்தை ஆளப்பொகும் நாளைய தலைவர்கள்....
 
சாதிக்கப் பிறந்த சாதனையாளர்களின் சாதனைகளோ சாகடிக்கப்படுகின்றன..எங்கும் குழந்தைகளின் கூக்குரல் சில வரிகளாக.....

பொய் அறியாத பண்பு குழந்தையின் அன்பு...
சின்னஞ்சிறு பூக்களே
எழில் மின்னும் இள மொட்டுக்களே பள்ளிக்கூட சோலைக்குள்ளே துள்ளி பறக்கும் சிட்டுக்களே!

நாங்கள் கூட வீட்டிற்குள் அடைக்கப்பட்ட விளையாட்டு கைதிகள் தானே....
கிட்டிபுல், கிளித்தட்டு, கிளை மரத்து ஊஞ்சல் அன்று.... புழுதி அள்ளி விளையாடும் பொற்காலம் அதை மாற்றி கணினி உள்ளே விளையாடும் காலமாக மாற்றியதேனோ.... அன்பான நெஞ்சங்கள் துள்ளி எழும்! பயம் அது கண்டால் அடங்கி விடும்...கோபத்தை காட்டி விடாதே ! எம்       இறக்கைகளை உடைத்து விடாதே!!!

இன்று கல்வி கூட கைபேசியில் அடங்கி விட்டன! அதற்குள்ளே பிஞ்சி உள்ளங்கள் முடங்கி விட்டன.....சொந்தங்கள் தொலை தூரம் மனதிலே ஒரு பாரம்...

பட்டாம்பூச்சிகளாய் சிறகுவிரிப்பாய்!
எட்டாச் சிகரத்தையும் ஏறி மிதிப்பாய்!
பயத்தை சற்று விலக்கி விடுவாய்!
மனதிலே வீரம் கொள்வாய்!

அவசரகால உலகமிது!!
இன்னல்கள் வந்து சேரும் சமூகமிது...தனிமை படுத்தியது ஏனோ!
சொந்தங்கள் கரம் தேடி அலையும் பிஞ்சு உள்ளங்கள் நாம்...மற்றோர் கரம் கண்டு அஞ்சுவது ஏனோ.... மனித நேயம் மறந்து விட எங்களை அடக்கும் கரங்களை விளங்கிடுவோம்!

மனிதரில் உண்டு பல இனம்-தீய மனிதனின் உள்ளம் சுகயீனம்...
நல்லதை ஏற்று நடந்திடு! நீ கெட்டதை ஏற்க மறுத்திடு!! சுற்றி நடப்பதை நன்றாக புரிந்திடு அதற்கு ஏற்றாற் போல் திட்டமிடு..

சொந்தமும் சொர்க்கம் தான் அந்த சொர்க்கமும் தொலைவில் தான்... சொர்க்கத்தை பார்ப்பதும் வாரத்தில் ஒரு முறை தான் அதுவும் தொலைபேசி எனும் அலைபேசியில் தான்.....

சின்னஞ் சிறு மலரே! உன் ஏக்கங்கள் தொலையட்டும்... உன் சிறகுகள் உடைக்கும் கரங்கள் உடையட்டும் உன் அன்பு நெஞ்சங்கள் நெருங்கட்டும் உறவுகள் தொடரட்டும்! கல்வியை கையில் எடு
அறிவை மெருகூட்டு... புது புது சாதனை படை... அதையே கேடய(ம்)மாக்கு!

ஒளி வீச துடிக்கும் நட்சத்திரங்களே மறைத்திடும் நிழல்களை விலக்கிடுவோம். பிஞ்சு நெஞ்சங்களின் மலர்வுக்கு வழி செய்வோம்....

13
★★★வறுமையின் நிறம் பச்சை★★★

இடியோ மின்னலோ
வெய்யிலோ மழையோ
இரவோ பகலோ மண்ணோடு நான் என்னோடு யார்...

நீலமே வானமாய்...
பசுமையே பூமியாய்
உழவனின் காதலால் மண்ணை உடைக்கின்றான்...
அதனுள் மர்மம் படைக்கிறான்...

நெல் மணி நீ விவசாயிகளின் கண்மணி...
நீ விதைத்த விதைகள்...எங்கள் வாழ்வின் உயிர் நாடி..
நன்றி மறவா நல்லவனே உமக்கு நன்றி சொல்ல சிறு பங்கு கவிதை இது....

மண்ணோடு விண்ணுக்கு வந்த காதல்..இந்த மண்ணோடும் உழவனுக்கும் வந்த ஒருதலை காதல் தான் விவசாயம்... விவசாயி வியார்வை சிந்தியாதால் விண் மேகம் கண்ணீர் சிந்தியதே....

பட்டம் பதவி பேர் புகழ் அனைத்தும் மண்ணோடு போராடும் விவசாயின் சோற்றுக்காக தான்...

காட்டில் வேலை செய்பவன் கேவலமாம்
கணினி இல் வேலை செய்பவன் கௌரவமாம்.... என்று நினைப்பவர்களுக்கு தெரியவில்லையா அரிசியை இன்டெர்நெட்டில்  டவுன்லோட் செய்ய முடியாது என்று....
தகுதி பார்க்கும் மக்களே.. விவசாயின் கால் படாமல் உனக்கு ஏது மா சோறு இதை உன் இதய இன்டெர்நெட்டில் கொஞ்சம் தேடி பாரு....

போலியாக நடிக்க தெரியாத கெளரவ தொழிலே விவசாயம்....
கஷ்டத்தை இஷ்டப்பட்டு செய்கின்ற உழவரே உம்மை நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்க கூடாது....

14
Birthday Wishes / Re: Happy Birthday LOVELY
« on: December 11, 2022, 11:09:20 am »
     உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவை இல்லை,
முகவரியும் தேவை இல்லை,
நம்மை நினைக்கும் உண்மையான
நினைவுகள் போதும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.lovly siso🤩
                                           

Pages: [1] 2