POEMS - கவிதைகள் > கவிதையும் கானமும்
கவிதையும் கானமும்-033
Administrator:
உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.
4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
கவிதையும் கானமும்-033
இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.[/color
Passing Clouds:
கற்பணை குடும்பம்
"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் "
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது
அன்னையின் பாசம் தந்தையின் நேசம்
பாசம் இன்று கலப்படமாகிப்போனது
பணம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான பாசம்
அவர்களுக்கு உபயோகம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான விசுவாசம்
இந்த விசுவாசம் பாசம் மறந்துவிடும் காலப்போக்கில்
நம்மிடம் ஒன்றும் இல்லையென்றால் புதைத்திடுவார் அவர்களின் காலுக்கு அடியில்
ஆனால் துளிகூட களங்கமில்லாத எதையும் எதிர் பாராத அன்பு
தாயின் அரவணைப்பில் தந்தையின் அக்கரையில் தான் உள்ளது
வெண்சங்கு சுட்டாலும் வெண்மைதரும் அதுபோல
அவர்களை நாம் உதாசீன படுத்தினாலும் ஒரு துளிகூட மாறாத அன்பு பெற்றோரின் அன்பு
அந்த அன்பு பசுவின் மடியில் இருந்து வரும் பாலை விட தூய்மையானது
நீல வானத்தின் எல்லையை விட பெரியது
எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதை ஒரு நொடியில் போக்கிவிடும்
அன்னை மடியும் தந்தையின் அறிவுரையும்
தலை சாய்க்க மடியும் இல்லை அறியுரை கேட்க என்னக்கு பாக்கியமும் இல்லை
உங்கள் கை கைகோர்த்து நடக்கத்தான் ஆசை எனக்கு அம்மா அப்பா
ஆனால் கடவுளுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை உங்களை அழைத்து சென்றுவிட்டான்
உங்களின் அன்பையும் அறியுரையும் கேட்க ....
உங்கள் இருவரோடும் கைகோர்த்து போக என்னக்கு ஆசை அம்மா என் அப்பா
அதனால் கற்பனையாக வரைத்தேன் சுவரில் ............. கற்பனையோடு வாழ்கிறேன் உங்களோடு
அப்பொழுதும் என்னையே பார்க்கிறாய் அம்மா ஐ லவ் யு மா
ப்ளஸ் உங்க அம்மா அப்பாவை கஷ்டப்படுத்தாதீங்க இல்லாத போதுதான் அவங்க கஷ்டம் தெரியும் ...
நீலவானம்
Limat:
தனிமையில் தவிக்கிறேன்.!
நான் பிறக்க பத்து மாதங்கள் உங்களை தவிக்க வைத்ததாலோ இன்று நான் உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கி தனிமையில் தவிக்கிறேன்..!
என்னை செல்லமாக தொட்டு தூக்கி உன் நெஞ்சோடு அனைத்து என் துயர் துடைக்க தாயின் கைவிரல்கள் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..!
நான் துவலும் போதெல்லாம் என் தலை கோத என் தோலை தட்டி கொடுக்க தந்தையின் விரல்கள் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..!
என் பசியரிந்து பாலூட்ட தாயின் மார்பும் நான் துயில் கொள்ள தந்தையின் மார்பும் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..!
விக்கல் வருகையில் மற்றவர்கள் யாரோ நினைக்கிறார்கள் என்று கூறுகையில் என் வெறுமையை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
என் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்றாலும் என் பிறந்தநாள் எதுவென்றே அறிவாமல் தனிமையில் தவிக்கிறேன்..!
உங்கள் வரவை நோக்கி தனிமையில் தவிக்கும் எனக்கு நித்திரையில் வரும் சொப்பனத்திலாவது வருவீர்களா என்று எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
என்னை விட்டு தொலை தூரம் சென்ற தாய் தந்தையே உங்களை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
என் மனதின் வேதனைகளும் குறையவில்லை என் கண்ணீரும் நிற்கவில்லை என் மன கவலை போக்க நீங்கள் இல்லாமல் தனிமையில் தவிக்கிறேன்..!
செப்பாய் இருக்க வேண்டிய என் தேடல்கள் மட்டும் தங்கமாய் ஜொலிப்பதை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
போகுமிடம் தங்குமிடம் அனைத்திலும் தனிமையிலே தவிக்கிறேன்..!
என் தனிமையை மறைக்க வரைந்தேன் ஒரு ஓவியம் அதில் என் தாய் என்னை பார்த்து புன்னகைப்பதில் உணர்ந்தேன் அவள் அன்பின் காவியம்..!
என்றும் உங்கள் நட்💐க்களுடன்
Sivarudran:
தாயை பிரிந்த கன்றானேன் !
தவித்து தனியாய் நின்றேனே !
என் தலையைக் கோதும் என் தாயின் விரல்கள் எங்கே ?
என் தனிமையை துரத்தும்
என் தந்தை விரல்கள் எங்கே ?
தரணி ஆளப் பிறந்த மகன் நான் தானென்றே !
தவறாது என்னை தலையில் வைத்தாடும்
தந்தையே !
தனியாய் நின்று தவிக்கும் உங்கள்
தலைச்சன் பிள்ளை
நான் தானே !
தறிகெட்டு ஓடியாடும் எனக்காய்
கறி கூட்டு பல சமைத்து
நறி வருது கத சொல்லி
நாலு வாய் சோறு ஊட்டும்
நல்ல தாய் நீதானே !
தேர் பாக்க போகையில
தேம்பி நான் அழுகையில
தேயாத நிலவு நான்தானுன்னு
என்னைத் தேற்றும் தெய்வங்களே !
உங்கள் முன்பிருக்கும் என்னைக்
கண்ணிருந்தும் நீங்கள் காணலையே !
உங்களிடம் வந்து வாய் பேசும் என்னை
நீங்கள் வாய் திறந்து
கூப்பிடலையே !
ஓயாமல் அழுகும் என்னை கண் சாயமல்
காத்து நின்ற காவல் தெய்வங்களே !
அடுப்பு கரியில் நான் வரைந்த
அழகு காவியம் இதுவென்று தெரிந்தும்
உங்கள் கரம் பற்றி
ஊமையாய் நிக்கிறேனே !
இங்கே ஊமையாய் நிக்கிறேனே !
Eagle 13:
இது ஓவியமா இல்லை
மொழியின்றி பேசும் காவியமா?
ஒன்றும் புரியவில்லை?
சுவற்றில் கிறுக்கிய கிறுக்கல்களை
உயிரின் பந்தமாய் நினைத்து
வியக்கிறாய்!
அந்த நிலையை கடந்து
செல்ல
தெரியமல் தவிக்கிறாய்!
ஏனோ ஒரு சிலருக்கு மட்டும் இப்படி
அமைகிறது வாழ்க்கை!
அதனால் அவர்கள் மனம் கடந்த
செல்ல முடியாமல் தவிக்கிறது உலகை!
சுவற்றில் அதை தீட்டியது ஒரு சிறுவன்
அல்லது சிறுமியாக கூட இருக்கலாம்!
ஆனால்,
நீயோ?
அதை மனதில் வேதனை தூண்டும்
கிருமியாக நினைத்து தவிக்கிறாய்!
ஒரு ஓவியமே!
ஒரு சிறுவனுக்கு ஏக்கம், தவிப்பு,
சோகம் மற்றும் தேடல் தருமானால்,
இந்த உலகம் அவனுக்கு என்ன என்ன
தருமோ!
இனியாவது,
நாம் அனைவரும் ஒற்றுமையாய்
இணைந்து வாழ்வோம்!
உலகில் யாரும் தனித்த மனிதன் இல்லை
என்று
குரல் கொடுப்போம்!,
மனிதநேயத்தோடு!.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version