12
« on: June 13, 2023, 12:17:44 pm »
ஜோதா அக்பர் 💘💘
indilinrunthu naan jodha
இந்த ஓவியத்தை பார்த்ததும் என் கண்முன்னே தோன்றிய உருவம் ஜோதா💜💜💜💜
கத்திஜா என்ற பெயரையே ஜோதா வாக மாற்றிவிட்டேன்
என் அக்பருக்காக💖💖💖💖
அந்த அளவிற்கு என் மனதில் இடம் பிடித்தவர் அக்பர்.
என்னை ஜோதாவாக உணர்ந்த தருணம் அனைத்து பெண்களும் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கை, காதல், அக்கறை அதை அழகாக எடுத்துக்காட்டிய ஆண்மகன் அக்பர்.
என்னை முழுவதுமாக கவர்ந்த ஒரு ஆடவன், எப்போது அந்த முகத்தை பார்த்தாலும் இனம்புரியாத காதலும், ஒருவிதமான ஆனந்தமும் என்னில் தோன்றும், என்னை கவர்ந்தவன் அகபர்.
காதலுடன் தொடங்குகிறேன் எனது கவிதையை:
இருவரும் எங்கோ இருக்க
இருவரும் எங்கோ இருக்க
காலம் ஒன்றாய் சேர்க்கும் வரை
பெண்மையின் தன்மையை அறிய மறந்தேன்
என்னை ஆள்பவன் யார் என்றே
மண்ணில் பிறந்த பெண் நெஞ்சு தேடும்
அதை மறந்து குழந்தையையாய் அலைந்தவள்
நாளும் சிறுகுழந்தையாய் விளையாண்டவள்
மாவீரன் என்று உன்னை உலகமே போற்ற
உன்னை காணும் எண்ணம் எழவில்லை ஏனோ!
காலம் கனிந்தது கண்முன்னே தோன்றினான் என் வீரன்
ஒரு கணம் என் இருதயம் நின்றது!
சிலை போல்!
வீதியெங்கும் விளையான்று
சுட்டியாய் திரிந்தவள்
என் மாவீரனை பார்த்து அசையா மாது ஆகினேன்
வார்த்தை ஊமையாகும்
வார்த்தை ஊமையாகும்
வார்த்தையும் ஊமையாகும்
என்று அன்று தான் உணர்ந்தேன்
உன்திருமுகம் கண்டு
பேசும் வார்த்தை வரவில்லை
நடக்கும் பாதையும் புரியவில்லை
என் செய்வேனடா
என்று முகம் புதைத்தேன்
என் கைகளால்
உலகமே உன் வீரத்தால் வென்றாய்
என்னையோ உன் பார்வையால் வென்றாய்
என்னையோ உன் பார்வையால் வென்றாய்
எதிர்த்து வரும் பகைவர் அனைவரும் உன் காலடியில்
என் மன்னவனோ என் காலடியில்
என்று நினைத்து நினைத்து மகிழ
தன்னை தாழ்த்தி
என்னை வென்றவன்
மக்களே உன்னை காண தவம் கிடக்க
என் ஒரு விழி அசைவுக்கு ஏங்கும்
என் வீரன்
என் மன்னன்
என் கண்ணாளன்
என் நெற்றியில்
உன் நெற்றியை வைத்து
என்னை உன் மனதில் வைத்தாய்
நான் பெண்ணாக பிறந்ததற்கு
ஒரு அர்த்தம் கண்டேன்
உன்னால்
உன் காதலினால் நாளும் பிறக்கிறேன்
புதிதாய்
நீ வந்தாலே எனக்குள் ஏற்படும் மாற்றம்
என் நிலையை என் முகம் சொல்லும்
உலக நாடு போற்றும் மாவீரன்
நீ
நாடு போற்றும் மாவீரன்
நீ
உற்றவளை அணைக்கும் காதலனும் நீயே
கண்ணில் தூசி பட்டால் துடித்த காதல்
மத்தியில்
தூசி கூட என்னை நெருங்காமல் காத்த காவலன்
நீ
உன்னை எண்ணி எண்ணி
வியாகிறேனடா
நாளும்
என் தவம் செய்தேனோ
என் மன்னவனை அடைய
எழுதும் வார்த்தை நிறுத்த
மனமில்லை யடா
உன் காதலை எண்ணி
ஏழு சென்மம் வேண்டும்
நீ என்னோடு இது உங்கள் ஜோதா 💛💛💛💛💛