GTC FORUM
POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: செம்மொழி on October 11, 2021, 09:21:47 pm
-
மரக்கிளையில் சாய்ந்தேன்
உன் நினைவுகள் துளிர்விட்டது.
வீசும் காற்றும் வெட்கம் கொண்டு
தலைசாய்ந்தது நீ பேசும் அழகில்..
உன் கரம் கோர்த்து முடியாத
நெடுந்தூர பயணம் நான் தொடர வேண்டும்.
மொத்தமாய் உன் அன்பு
என்னை ஆதிக்கம் செய்ய..
மொத்தமாய் மாறிப்போனேன் நானும்.
என் ஆயுளின் காலம் எதுவரை என்று தெரியாது..
ஆனால் உன் காதல் இருக்கும்வரை என் ஆயுள் இருக்கும்...
-
kaiyalavu enthan idhayam irunthalum ...
adhil kadal alavu ungal ninaivugalai sumakiren...
endrum ❤
-
Arumaiyana Kavithai ..UN kavithai varigalin Payanam Thodattum Thozhiye
-
nice
-
nice kavithai lines keep going
-
ஆழ் கடலின் மௌனம்
அந்திவானச் சிவப்பு
மழைச் சாரல்
குயில்களின் பண்ணிசை
மரங்களின் பசுமை...
நான் வியந்து பார்க்கும் எல்லாமாகவும்
நீயே இருக்கின்றாய்!
எனில் -
நீ...
இயற்கையா?
கடவுளா?
இல்லை...
என் காதலா?
-
கவிதை கவிதை..
சுவாரசியம் மிக்க உங்கள் சிந்தனையில் இன்னும் பல கவிதைகள் எதிர்நோக்கி இருக்கிறோம் தோழி.
-
Surukkamana iniya kavithai.. Keep Going Semmozhi.
-
நன்றி தோழரே ;)
-
(https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR4PDs_t3TCvkl7UisvyMez7AWkZNFPOmTZ0g&usqp=CAU)
-
என் -
இரவுகளைத் திருடினாய் என்றேன்
நிலவைத் தந்தேன் என்றாய்!
தனிமையைத் திருடினாய் என்றேன்
இனிமைகளைத் தந்தேன் என்றாய்!
வெட்கம் திருடினாய் என்றேன்
ஏக்கம் தந்தேன் என்றாய்!
வார்த்தைகளைத் திருடினாய் என்றேன்
மௌனங்களைத் தந்தேன் என்றாய்!
உறக்கம் திருடினாய் என்றேன்
கனவுகளைத் தந்தேன் என்றாய்!
உறவுகளைத் திருடினாய் என்றேன்
உயிரைத் தந்தேன் என்றாய்!
இதயத்தை திருடினாய் என்றேன்
இச்சைகளைத் தந்தேன் என்றாய்!
என் கள்வனே!
கடைசியில்...
முத்தம் திருடினாய் என்றேன்
மொத்தமும் தந்தேன் என்றாய்!
-
wonderful
-
appadi oru kadhal kedika kuduthu vachirukanum
-
amazing