-
என் தாய்மொழி
தங்க தமிழே தரணி புகழ் செம்மொழியே
தென்றல் தேரேற்றி உன்னை அழைத்து வரும்
தேவர் குலம் சேர்ந்து வந்து வாழ்த்துரைக்கும்
மின்னல் அழகே மிளிர்கின்ற மென்தமிழே
கன்னல் கரும்பாய் காதி்ல் இனிக்கின்ற
கவிதை பல கோடி தந்தாய் வாழ்த்து
தங்க தமிழே தரணி புகழ் செம்மொழியே
கவி சொல்லும் அரங்கில் நிறைவாய்
கற்றோர் கைகளிலே என்றும் தவழ்வாய்
பண்ணிசையாய் நெஞ்சம் குழைப்பாய்
பாமர மக்கள் பாடும் நல்லிசையாய் நிறைவாய்
மேகலையாய் சிலம்பாய் அணிசெய்தாய்
திருக்குறளாய் திகழ்ந்தாய் தித்திக்கும் தேவாரமாகி
எத்திக்கும் ஒலித்தாய் செந்தமிழே இன்று கணனி ஏறி
கலக்குகின்ற மின்தமிழே என்தமிழே
என்றும் மாறா இளமை பூண்டு
கவிஞர் வார்த்ததையிலே நின்று வளர்.
-
Naan padithathil pidithathu....
-
சிறப்பு சஞ்சனா !!
தமிழ் -- நம் அடையாளம்
-
என் தாய்மொழி
எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே
என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே
கன்னித் தமிழாம் கனியின சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்
இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை
-
தமிழ் மொழி சிறப்பு ...!
உயிர் நாவில் உருவான
உலகமொழி
நம் செம்மொழியான
தமிழ் மொழியே.......
மென்மையும் தொன்மையும்
கலந்த தாய் மொழியே
நீ தானே தனித்து தவழும்
தூய மழலை தேன் மொழியே.....
இலக்கண செம்மையில்
வரம்பே இல்லா
வாய் மொழியே....
மும்மை சங்கத்தில்
முறை சாற்றும்
இயற்கை மொழியே....
இலக்கண பொருளின்
அணிச்சிறப்பாய் அளவெடுத்த
செய்யுள் மொழியே
நம் தாய் மொழியாம்.....
-
தென்பொதிகை பிறந்த மொழி
தென்பாண்டி வளர்ந்த மொழி
தேனினும் இனிய மொழி
தெவிட்டாத செந்தமிழ் மொழி
அமிழ்தினும் இனிய மொழி
ஆண்டாண்டுகளாய் வாழும் மொழி
அன்னை மடியை விஞ்சும் மொழி
அனைத்து என்னை மகிழும் மொழி
Credit goes to Mr. Benedict
-
ULAGAZHUM TAMIL.....
-
என் உயிர் மொழி,.....
(https://i.postimg.cc/c6xVdvww/tamil.png) (https://postimg.cc/c6xVdvww)
காலம் கடந்த வரலாறு
கவிதை தொடங்கிய வரலாறு
ஞாலம் வியக்கும் வரலாறு
-எம் தமிழ் மொழியின் வரலாறு
மாந்த இனத்தின் முதல்மொழி
மண்ணில் பிறந்த முதல்மொழி
ஏந்தும் இலக்கண முதல்மொழி
எழுச்சி இலக்கிய முதல்மொழி
சொற்கள் கிடக்கும் சுரங்கமொழி
சோதி மிக்கப் புதியமொழி
நிற்கும் வளமை நிறைமொழி
நீண்ட வரலாற்று பெருமைமொழி
-
புகழ்சேர் உலக மொழி
இறைவனோடும் இவ்விகத்தோடும்
இணைந்து தோன்றிட்டு
காலங்களை கடந்து வாழ்ந்திடும்
பண்பட்ட பழமை மொழி
அடர்காடுகளில் கரடுமலைகளில்
அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன்
இயற்கையோடு இணைந்து உறவாடி
வடித்திட்ட இயற்கை மொழி
தானே விதையுண்டு விருச்சகமாய்
வேரோடி ஆலமரமாய் தழைத்திட்டு
இலக்கண இலக்கியம் வளம் கொளுத்து
செழுத்திட்ட செம்மொழி
தமிழகம் ஈழம் தன் தாயகத்தில்
மலேயா சிங்கை மொரிசு பிஜு
என புலம்பெயர்ந்த பன்னாட்டில்
தலைநிமிர்ந்து புகழ்சேர் உலக மொழி
என் தாய் மொழியாம் தமிழ் மொழி
-
உலகத் தாய்மொழி !!
அன்னைத் தமிழும்
அழகு பொங்கு தமிழும்...
அன்னை மொழியே! ஆசைத் தமிழே!
அழகுத் தமிழே! அறிவுத் தமிழே!
செம்மொழியே !செந்தமிழால்
எம்வாழ்வில் இணைந்தாயே!
இனிமை கூட்டும் இன்ப மொழியே!
இளமை காக்கும் அருமை மொழியே!
துன்பம் போக்கும் துடிப்பு மொழியே!
நன்மை விளைக்கும் நற் செம்மொழியே!
அன்பைச் சொன்ன அமுத மொழியே!
அறிவை வளர்த்த அழகு மொழியே!
ஆற்றலைத் தந்த அருமை மொழியே!
ஆர்வத்தை ஊட்டும் பெருமை மொழியே!
தமிழ்ச் சொல் ஒன்றே போதுமே
தரணியில் என்றும் நம்மை உயர்த்துமே!
செம்மொழித் தமிழ் தினமும் பேசவே
சென்ற இடமெல்லாம் தமிழ் சிறந்திடுமே!
உணர்ச்சியின் உச்ச மொழியாம் தமிழே !
உள்ளத்தின் உயிராம் எங்கள் தமிழே !
மனிதத்தைக் காக்கும் மாண்பமை மொழியே!
மனிதர்களை இணைக்கும் நட்புப் பாலமே!
உலகிற் சிறந்த முதல் மொழியே!
உயிரெழுத்துக்களால் உயிரானாய்!
மெய்யெழுத்துக்களால் உடலானாய்!
அழியா நிலை பெற்றாய்!
எம்முயிர் மூச்சானாய்!!
தமிழ் ♥️♥️
-
ஆதிமொழியும் நானே!
அமுதமொழியும் நானே !
அன்னை மொழியும் நானே!
கன்னிமொழியும் நானே!
வீர மொழியும் நானே !
காதல் மொழியும் நானே...
அகவையில் முதிர்ந்தவளும் நானே!
புதுமையாய் மலர்பவளும் நானே!
பூக்களைச் சூடிக்கொண்டு
புன்னகைக்கவும் தெரிந்தவள்..
எரிமலையாய் எழுச்சி கொண்டு
எழுத்தாயுதம் ஏந்தவும் தெரிந்தவள் ....
குத்துப்பாட்டில் மயங்கி கிடக்கும்
தமிழா பத்துப்பாட்டே உன் அடையாளம்..
பெட்டித் தொகையில் உழன்று கிடக்கும்
தமிழா எட்டுத்தொகையே உன் விலாசம்...
கணினியில் மூழ்கி கிடக்கும்
தமிழா காப்பியங்களே உன் கம்பீரம்..
அன்னைத் தமிழை மறந்து
அந்நிய மொழியை கொண்டாடும்
தமிழா இதுவே உன் அவமானம்.....
-
சோகம் ஒரு கடல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், சில சமயங்களில் நாம் மூழ்கிவிடுவோம், மற்ற நாட்களில் நாம் நீந்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.