See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: Happy Birthday ISHAN
MANY MANY RETURNS OF THE DAY..MAY ALL YOUR WISHES COME TRUE... With love SANJU May 15, 2023, 12:32:30 am |
1 |
Re: Happy Birthday ISHAN
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இஷான் சகோ. இந்த நட்பின் இணையத்தை திறம்பட வழிநடத்தும் உங்களின் செயல் எதிரியும் போற்றுதலுக்குரியது. ஆலமரமாய் உங்களின் நட்பு மென்மேலும் தழைத்தோங்க மனமார வாழ்த்துகிறேன், May 15, 2023, 01:13:14 am |
1 |
Re: Happy Birthday ISHAN
May 15, 2023, 09:11:52 am |
1 |
Happy Birthday RIYANA QUEEN
Global Tamil Chat (GTC) Wishes RIYANA QUEEN on Her Birthday (27-May) Happy Birthday RIYANA QUEEN 🎂🎉🍫🍬🥳 May 27, 2023, 12:06:15 am |
1 |
கவிதையும் கானமும்-025
உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம். இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும். இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும். 2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது. 4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். கவிதையும் கானமும்-025 இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம். மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள். May 28, 2023, 10:12:52 pm |
1 |
கவிதையும் கானமும்-026
உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம். இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும். இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும். 2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது. 4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். கவிதையும் கானமும்-026 இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம். மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள். June 12, 2023, 09:43:34 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-026
ஜோதா அக்பர் 💘💘 indilinrunthu naan jodha இந்த ஓவியத்தை பார்த்ததும் என் கண்முன்னே தோன்றிய உருவம் ஜோதா💜💜💜💜 கத்திஜா என்ற பெயரையே ஜோதா வாக மாற்றிவிட்டேன் என் அக்பருக்காக💖💖💖💖 அந்த அளவிற்கு என் மனதில் இடம் பிடித்தவர் அக்பர். என்னை ஜோதாவாக உணர்ந்த தருணம் அனைத்து பெண்களும் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கை, காதல், அக்கறை அதை அழகாக எடுத்துக்காட்டிய ஆண்மகன் அக்பர். என்னை முழுவதுமாக கவர்ந்த ஒரு ஆடவன், எப்போது அந்த முகத்தை பார்த்தாலும் இனம்புரியாத காதலும், ஒருவிதமான ஆனந்தமும் என்னில் தோன்றும், என்னை கவர்ந்தவன் அகபர். காதலுடன் தொடங்குகிறேன் எனது கவிதையை: இருவரும் எங்கோ இருக்க இருவரும் எங்கோ இருக்க காலம் ஒன்றாய் சேர்க்கும் வரை பெண்மையின் தன்மையை அறிய மறந்தேன் என்னை ஆள்பவன் யார் என்றே மண்ணில் பிறந்த பெண் நெஞ்சு தேடும் அதை மறந்து குழந்தையையாய் அலைந்தவள் நாளும் சிறுகுழந்தையாய் விளையாண்டவள் மாவீரன் என்று உன்னை உலகமே போற்ற உன்னை காணும் எண்ணம் எழவில்லை ஏனோ! காலம் கனிந்தது கண்முன்னே தோன்றினான் என் வீரன் ஒரு கணம் என் இருதயம் நின்றது! சிலை போல்! வீதியெங்கும் விளையான்று சுட்டியாய் திரிந்தவள் என் மாவீரனை பார்த்து அசையா மாது ஆகினேன் வார்த்தை ஊமையாகும் வார்த்தை ஊமையாகும் வார்த்தையும் ஊமையாகும் என்று அன்று தான் உணர்ந்தேன் உன்திருமுகம் கண்டு பேசும் வார்த்தை வரவில்லை நடக்கும் பாதையும் புரியவில்லை என் செய்வேனடா என்று முகம் புதைத்தேன் என் கைகளால் உலகமே உன் வீரத்தால் வென்றாய் என்னையோ உன் பார்வையால் வென்றாய் என்னையோ உன் பார்வையால் வென்றாய் எதிர்த்து வரும் பகைவர் அனைவரும் உன் காலடியில் என் மன்னவனோ என் காலடியில் என்று நினைத்து நினைத்து மகிழ தன்னை தாழ்த்தி என்னை வென்றவன் மக்களே உன்னை காண தவம் கிடக்க என் ஒரு விழி அசைவுக்கு ஏங்கும் என் வீரன் என் மன்னன் என் கண்ணாளன் என் நெற்றியில் உன் நெற்றியை வைத்து என்னை உன் மனதில் வைத்தாய் நான் பெண்ணாக பிறந்ததற்கு ஒரு அர்த்தம் கண்டேன் உன்னால் உன் காதலினால் நாளும் பிறக்கிறேன் புதிதாய் நீ வந்தாலே எனக்குள் ஏற்படும் மாற்றம் என் நிலையை என் முகம் சொல்லும் உலக நாடு போற்றும் மாவீரன் நீ நாடு போற்றும் மாவீரன் நீ உற்றவளை அணைக்கும் காதலனும் நீயே கண்ணில் தூசி பட்டால் துடித்த காதல் மத்தியில் தூசி கூட என்னை நெருங்காமல் காத்த காவலன் நீ உன்னை எண்ணி எண்ணி வியாகிறேனடா நாளும் என் தவம் செய்தேனோ என் மன்னவனை அடைய எழுதும் வார்த்தை நிறுத்த மனமில்லை யடா உன் காதலை எண்ணி ஏழு சென்மம் வேண்டும் நீ என்னோடு இது உங்கள் ஜோதா 💛💛💛💛💛 June 13, 2023, 12:17:44 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-026
காதல் மங்கை.. தன் மும்தாஜ்காக அவன் எழுதிய வரிகளிங்கே... அந்தி சாயும் நேரம்.. அழகான ஆக்ரா நதியோரம்.. நித்தம் விழும் நின் நிழல் ஒன்றே.. நீங்காத என் நிஜ தரிசனம்... மெய் நிகர் அழகே.. நீ என் மேல்.. மெல்ல விழும் மழையே.. பொய்யொன்று உரைக்கையிலே.. முகம் பொலிவிழக்க காண்கின்றேன்.. நினைவுக்குள் வருகின்றாய்.. நீங்காத ஏக்கம் தருகின்றாய்.. முகிலாடை அணிகின்றாய்.. முழுமதி முகம் மறைக்கின்றாய்.. காற்புள்ளியிட்டு உன்னை தொடர.. விழிகளாலே போரிட்டு எனை வெல்கின்றாய்... வெண்புரவியின் மேலமர்ந்து.. வெண்ணிலாவை உனை தரிசிப்பேன்.. வெட்கப்படும் உன் முகத்தை.. வெண்மையாக வரைந்தெடுப்பேன்.. தூரிகையால் மடல் எழுதி.. மாதே உனை கவர்ந்தெடுப்பேன்.. பேரெழில், பெருஞ் சீற்றம்.. பேச்சினாலே சரி செய்வேன்.. உன்னிதழ் உதிர்க்கும்... ஒருகோடி வார்த்தைகளால்.. உள்ளூர உருகிப் போவேன்.. பக்கம் நின்று பார்க்கையிலே.. பளிங்கு சிலை போலிருப்பாய்.. யுகயுகமாய் தொடருந்து வந்து.. யுத்தமிட துணிய வைப்பாய்.. கொண்ட கடன் காதல் ஒன்றே... நான் கொண்ட காதலுக்கு.. கட்டிடங்கள் நிகரில்லை.. எதிர்ப்புகளற்ற காதலில் இல்லை எதுவும்.. எதிர்ப்புகள் பல கடந்த காதல் காவியமாகி ததும்பும்.. அளவில்லா நேசத்தை, ஆழிக் குமிழ் போல் மறைக்காமல்... உலகுக்கே தெரிய வைத்து உள்ளத்திலே உயிர் கொடுப்பேன்... கொள்ளையடித்த உன் மனதால்.. காதல் சிறையில் எனை அடைத்தாலும்.. உன்னத தாஜ்மஹாலை.. உனக்காக நானும் எழுப்புவேன்.. June 13, 2023, 01:49:59 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-026
மனிதன் மாறினாலும் மாறாத ஒன்று காதல் காதல் என்பது கல்லறை என்று சொல்லி நகைப்பார்கள் ஆனால் காதலின் கல்லறையும் நினைவுச் சின்னமானது இன்று அந்த நினைவுச் சின்னமும் அதிசயங்களில் ஒன்றானது உண்மை காதல் காலம் சென்றாலும் வாழும் வரம் பெற்றது காலமும் மூன்றெழுத்து அந்த காதலும் மூன்றெழுத்து காதலை வாழவைக்கும் அன்பும் மூன்றெழுத்து அன்று உள்ள காதல் அர்த்தமுள்ளதாக இருந்தது ஆனால் இன்றோ காதல் அரட்டையாகிவிட்டது இன்றும் உண்மை காதல் ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருக்கிறது காதலும் கல்லறையும் ஒன்றுதான் இருமனம் ஒன்றானால் அது காதல் இருமனம் பல மனங்கள் ஆனால் அது கல்லறை இன்று கல்லறைகள் தான் பல உள்ளது அதில் நினைவுகள் நிறைந்துள்ளது நினைவுகள் ஒன்றாகி வலம் வரும் அழகிய நேரம் அன்பு என்னும் அருவியில் ஆனந்த நடனமிடம் அற்புத தருணம் இரு உயிர் ஓருயிராய் மாறும் காலம் வண்ணங்கள் நிறைந்த சோலைவனமானது மனம் காலங்கள் சென்றாலும் மாறாதது இந்த காதல் சின்னம் எத்தனை தான் எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்கொண்டு சிரிக்கின்றது இந்த காதல் உண்மை காதல் மரணித்தாலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது உண்மையாய் காதலித்துப்பார் மனம் புதிதாகும் சிந்தை சிறப்பானதாகும் உண்மை காதல் உன்னை புதியவன் ஆக்கும் உண்மை காதல் அழகானது அதை அலங்கோலமாக்கிவிடாதே. June 14, 2023, 04:50:18 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-026
காதலின் காவியம் என்றும் அழியாத ஓவியம் காதல் ...... சற்றே கணம், நூலிழை தீண்டல் போல், உன் மைவிழி தீண்டி, மனம் என்னும் கோட்டையை ஆக்கிரமிப்பு செய்தாய்யடி..... உன் மதிமுகம் காண மணிநேரம் கணக்கில்லாமல் மங்கையின் வாசலை என் இருவிழி தேடலில் தவிப்பை கண்டேனடி..... உன் விழி பேசு மொழி புரியுதடி, நீ புருவம் உசத்தும் கோவம் அறிந்தேனடி, இதயம் பேசும் மௌனம் தினம் என்னை கொல்கிறதடி.... ஆராதிக்கிறேன்.... அகப்பட்ட காதலில் ஆசைகளும், அளவில்லா தவிப்பும், மனமும், மதியும் ஆரவாரம் செய்யும் அவஸ்தைகள்தான் இதுவோ?..... என் மனதை களவு கொண்ட பேதையே, உன்னை கண்டதும் ஏனோ? கார்முகில் சூழ்கிறதே.... என் உயிர் வரை சூறைக்காற்றை வீசுகிறதே.... வான் மழையும் தூவுகிறதே.... இக்கணம் எம் காதலையும் உணர்கிறேனடி.... காதலுக்கோர் தாஜ்மஹால் கட்டி வைத்தானடி.... கல்லறை என்று சொல் இருந்தாலும் ஷாஜகான் காதலை, காதலுக்கு அதியச சின்னமாய் காதலின் உறவுக்கு அழியா சுவடாய்... இன்றும் உலக வரலாற்றில் வாழ்கிறதேயடி... இங்ஙனம் காதலின் ஆழம் அதிலே உணர்தேனடி... அதில் என் காதலும் ஓர் இலக்கியமாய் எண்ணுகிறேனடி... June 15, 2023, 12:41:25 pm |
1 |