-
அனைவருக்கும் வணக்கம் !✨✨
💫நமது கற்றலின் எல்லையை விரிவு செய்யும் வகையில் நல்ல ஒரு தொடக்கமாக தினம் ஒரு திருக்குறள் இங்கு பதிவு செய்யப்படும் ....
💫திருக்குறள் தொடர்பான கேள்விகளை நமது GTC மன்றத்தில் உள்ள விளையாட்டு பிரிவில் வினாக்கள் கேட்கப்படும் .இதில் பங்கேற்று இதன் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளியுங்கள்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
திருக்குறள் :
இயற்றியவர்: திருவள்ளுவர்
அதிகாரங்கள்: 133(௧௩௩)
குறள்: 1330(௧௩௩௦)
பால்: 3(௩)
சிறப்பு பெயர்கள்:
பொய்யாமொழி
முப்பால்
உலகப்பொதுமறை
தெய்வநூல்
வாயுறைவாழ்த்து
உத்தரவேதம்
திருவள்ளுவம்
வள்ளுவமாலை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/xXY5bksN/val.png) (https://postimg.cc/xXY5bksN)
திருவள்ளுவர் :
குறிப்பு: (முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை)
செவி வழியாக வந்த செய்திகள் .....
ஊர் : சென்னையில் உள்ள மைலாப்பூர்
பெற்றோர் : ஆதி - பகவன்
மனைவி : வாசுகி
மரபு : வள்ளுவ மரபு
காலம் : கி.மு 31
சிறப்பு பெயர்கள்:
தெய்வப்புலவர்
பொய்யில் புலவர்
பெருநாவலர்
நாயனார்
தேவர்
முதற்பாவலர்
நான்முகனார்
மாதானுபங்கி
செந்நாப்போதார்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
திருக்குறள் சிறப்புகள்:
⭐தமிழ் மொழியில் இந்த நூல் இயற்றப்பட்டிருந்தாலும் இதில் தமிழ் என்ற சொல் எந்த குரலிலும் இடம் பெறவில்லை. அதே போல கடவுள் என்ற சொல்லும் இடம்பெறவில்லை.
⭐திருக்குறளில் மொத்தம் 14,000 சொற்கள் உள்ளன.
⭐திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன.
⭐முதன்முதலில் திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
⭐திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
⭐நெருஞ்சிப்பழம் என்ற பழவகை மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.
⭐பனை, மூங்கில் ஆகிய மரங்கள் மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.
⭐ஒரு குறளில் “பற்று” என்ற சொல் ஆறு முறை இடம்பெற்றுள்ளது. இதுவே ஒரே குறளில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும்.
⭐குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
(https://i.postimg.cc/fkQ7Fj17/athi-1.png) (https://postimg.cc/fkQ7Fj17)
பால் : அறத்துப்பால்
அதிகார எண்: 1
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
குறள்-01
(https://i.postimg.cc/HWt76cGQ/Screenshot-17.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன;
(அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
கலைஞர் விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை;
ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-02
(https://i.postimg.cc/nLvXLPfS/Screenshot-19.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
சாலமன் பாப்பையா விளக்கம்:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?
கலைஞர் விளக்கம்:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-03
(https://i.postimg.cc/0NBCGVSD/Screenshot-25.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி
நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
சாலமன் பாப்பையா விளக்கம்:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த
திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
கலைஞர் விளக்கம்:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு,
உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-04
(https://i.postimg.cc/HLXvfTzB/Screenshot-30.png) (https://postimages.org/) (https://treetop100babynames.com/exotic-baby-names-boys)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு
எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
சாலமன் பாப்பையா விளக்கம்:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால்
எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை
கலைஞர் விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு
எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-05
(https://i.postimg.cc/fR4tVL8D/Screenshot-29.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம்
அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை
சாலமன் பாப்பையா விளக்கம்:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை,
தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை
கலைஞர் விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள்,
நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-06
(https://i.postimg.cc/Jhsc7mqv/Screenshot-31.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க
நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்
சாலமன் பாப்பையா விளக்கம்:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின்
பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்
கலைஞர் விளக்கம்:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய
நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-07
(https://i.postimg.cc/yNvmVJ9m/Screenshot-33.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல்,
மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது
சாலமன் பாப்பையா விளக்கம்:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி,
மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்
கலைஞர் விளக்கம்:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்
தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-08
(https://i.postimg.cc/PrZNNTk4/8.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல்,
மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது
சாலமன் பாப்பையா விளக்கம்:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல்
மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்
கலைஞர் விளக்கம்:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும்
அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி,
மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-09
(https://i.postimg.cc/G2mKnc2v/kural-9.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய
கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
சாலமன் பாப்பையா விளக்கம்:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள்,
புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே
கலைஞர் விளக்கம்:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ
அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-10
(https://i.postimg.cc/KcK0nVNJ/Screenshot-43.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய
பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
சாலமன் பாப்பையா விளக்கம்:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்;
மற்றவர் நீந்தவும் மாட்டார்
கலைஞர் விளக்கம்:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர்,
தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
அதிகாரம் 1
1)அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
2)கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின
3)மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
4)வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
5)இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
6)பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
7)தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
8 )அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
9)கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
10)பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
-
(https://i.postimg.cc/vgMnQVb9/2.jpg) (https://postimg.cc/vgMnQVb9)
பால் : அறத்துப்பால்
அதிகார எண்: 2
அதிகாரம் : வான்சிறப்பு
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-11
(https://i.postimg.cc/XN8pDG0x/1.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும்
உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
சாலமன் பாப்பையா விளக்கம்:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது;
அதனால் மழையே அமிழ்தம் எனலாம்
கலைஞர் விளக்கம்:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால்
அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-12
(https://i.postimg.cc/zB815pJt/Screenshot-45.png) (https://postimages.org/) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு,
பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை
உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.
கலைஞர் விளக்கம்:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,
அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-13
(https://i.postimg.cc/gcNYwdZz/kural-13.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற
உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த
இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.
கலைஞர் விளக்கம்:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால்
பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-14
(https://i.postimg.cc/NF0b0yJ2/kural-14.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப்
பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால்,
உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.
கலைஞர் விளக்கம்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-15
(https://i.postimg.cc/XvtQbqXf/kural-15.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல்
வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத்
திருத்துவதும் எல்லாமே மழைதான்.
கலைஞர் விளக்கம்:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,
பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-16
(https://i.postimg.cc/htmfz4TZ/kural-16.png) (https://postimages.org/) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல்,
உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
சாலமன் பாப்பையா விளக்கம்:
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின்
நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.
கலைஞர் விளக்கம்:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில்
பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-17
(https://i.postimg.cc/vB8Hqng0/kural-17.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல்
விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால்,
நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.
கலைஞர் விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித
சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-18
(https://i.postimg.cc/0NK7RPf1/kural-18.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக
நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
சாலமன் பாப்பையா விளக்கம்:
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது;
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.
கலைஞர் விளக்கம்:
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச்
சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-19
(https://i.postimg.cc/ydF5RGz4/Screenshot-81.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர்
பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும்
தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
கலைஞர் விளக்கம்:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும்
தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
(https://i.postimg.cc/Yhn2vPf5/karka-1-jpg.jpg) (https://postimg.cc/Yhn2vPf5)
குறள்-20
(https://i.postimg.cc/W4sbSdtR/Screenshot-83.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது
என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது;
அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
கலைஞர் விளக்கம்:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால்,
நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
(https://i.postimg.cc/Mf0dbpB4/thiru.png) (https://postimg.cc/Mf0dbpB4)
பால் : அறத்துப்பால்
அதிகார எண்: 3
அதிகாரம் : நீத்தார் பெருமை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
குறள்-21
(https://i.postimg.cc/6q4wCx7p/Screenshot-88.png) (https://postimages.org/)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மு.வ விளக்கம்:
எஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச்
சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின்
பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.
கலைஞர் விளக்கம்:
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில்
விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
🔥குறள்-22🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟தபற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.
⚜️கலைஞர் விளக்கம்:⚜️
🌟உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
-
🔥குறள்-23🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.
⚜️கலைஞர் விளக்கம்:⚜️
🌟நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
-
🔥குறள்-24🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
⚜️கலைஞர் விளக்கம்:⚜️
🌟உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
-
🔥குறள்-25🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
⚜️கலைஞர் விளக்கம்:⚜️
🌟புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
-
🔥குறள்-26🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.
⚜️கலைஞர் விளக்கம்:⚜️
🌟பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
-
🔥குறள்-27🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.
⚜️கலைஞர் விளக்கம்:⚜️
🌟ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
-
🔥குறள்-28🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
⚜️கலைஞர் விளக்கம்:⚜️
🌟சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
-
🔥குறள்-29🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.
-
🔥குறள்-30🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
-
பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 4
அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
🔥குறள்-31🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.
-
🔥குறள்-32🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.
-
🔥குறள்-33🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.
-
🔥குறள்-34🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.
-
🔥குறள்-35🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.
-
🔥குறள்-36🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.
-
🔥குறள்-37🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
-
🔥குறள்-38🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
-
🔥குறள்-39🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.
-
🔥குறள்-40🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
-
பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 5
அதிகாரம் : இல்வாழ்க்கை
🔥குறள்-41🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.
-
🔥குறள்-42🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.
-
🔥குறள்-43🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.
-
🔥குறள்-44🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
-
🔥குறள்-45🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.
-
🔥குறள்-46🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.
-
🔥குறள்-47🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
-
🔥குறள்-48🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.
-
🔥குறள்-49🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.
-
🔥குறள்-50🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
-
பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 6
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
🔥குறள்-51🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.
-
🔥குறள்-52🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.
-
🔥குறள்-53🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?
-
🔥குறள்-54🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.
-
🔥குறள்-55🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
-
🔥குறள்-56🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
-
🔥குறள்-57🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.
-
🔥குறள்-58🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்
-
🔥குறள்-59🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
-
🔥குறள்-60🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.
-
பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 7
அதிகாரம் : மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்
🔥குறள்-61🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
🌟பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
🌟அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.
-
🔥குறள்-62🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா⭐
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா⭐
-
🔥குறள்-63🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்✨
-
🔥குறள்-64🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது✨
-
🔥குறள்-65🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்✨
-
🔥குறள்-66🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்✨
-
🔥குறள்-67🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே✨
-
🔥குறள்-68🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது✨
-
🔥குறள்-69🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்✨
-
🔥குறள்-70🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே✨
-
பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 8
அதிகாரம் : அன்புடைமை / The Possession of Love
🔥குறள்-71🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்✨
-
🔥குறள்-72🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்✨
-
🔥குறள்-73🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்✨
-
🔥குறள்-74🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்✨
-
🔥குறள்-75🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்✨
-
🔥குறள்-76🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்✨
-
🔥குறள்-77🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்✨
-
🔥குறள்-78🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்✨
-
🔥குறள்-79🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?✨
-
🔥குறள்-80🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
❝அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு❞
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚜️மு.வ விளக்கம்:⚜️
⭐அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்✨
⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️
⭐அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்✨