See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-040
உனதருகில் நான்... ஒவ்வொரு நிமிடத்தின் ஆழங்கள் சற்று கடினமாக கடக்க நேர்ந்தாலும் என்னில் இருக்கும் எண்ணில்லா உணர்வை ஏனோ! வெளிப்படுத்த வெய்த்தது நீயே.... எவற்றை இழந்த பொழுதும் எனக்காய் என்று என்னோடு இன்றும் உறவாடும், உன் எண்ணத்தின் மதிப்பு உன்னோடு இருக்கும் என் சிரிப்பில் வெளிப்படும்.... எண்ணற்ற எண்ணங்கள் அனைத்தும் எண்ணக் கூட வெய்க்காது, விலகியே விரும்பும் உன் மனதின் செயல்பாடு செயல் இழந்த என்னை ஓர் புதிய செயழியாக மாற்றியது.... சிறிதும் செயல் இழக்க நேர்ந்தால் கூட மனதின் அன்பை கொண்டு என்னை சரி செய்யும் நீ.. செவி சாய்த்து உன் தோளில் விழும் தருணத்தில் என்னோடு எழும் ஆசை அனைத்தும் உன்னுடன் கூற விரும்பியது யாதெனில் தந்தையின் மார்போடு தன் முகத்தை முட்டி சாய்க்கும் ஓர் இன்புற்ற ஏக்கங்கள் நிறைந்த மழலையைப் போல என்றும் உனதருகில் நான் 😇💜 March 20, 2024, 09:04:16 pm |
4 |
Re: Happy Birthday Raju
Wishing you a happy year thambi ma 💜 Happy ha iru 😇 March 25, 2024, 09:41:00 am |
1 |
Re: கவிதையும் கானமும்-041
மைக் கனவு... ஓர் விரல் புரட்சி தான் நம் வாழ்க்கை என்று சிறுது அழகூட்ட தென்ப்படும் வியப்பு விரலின் அழகை மெருகூட்ட அல்ல வாழ்கையின் எண்ணத்தை செறிவூட்ட சிறிதேனும் மாறும் என எண்ணிக்கொண்டே சிறுதூரம் செல்வோம் என ஏங்கும் அவ்விரல் சற்று திகைப்புடன் செலவழிக்கும் அந்நேரத்தின் மதிப்பு தன்னுடைய அனைத்தையும் மாற்றுமோ ? மாற்றும் எண்ணமானது விரலோடு மற்றும் அல்ல அதனுடன் இருக்கும் எனக்கானதும் கூட விரலின் பொறுப்பு அல்ல அந்த மாற்றம் அதனோடு அடங்கும் என் எண்ணத்தின் வெளிப்பாடும் எண்ணிய அனைத்தும் செயலாற்ற அச்சிறு விரல் பொதுமெனில், செயல்படுமா நம் எண்ணம் ? அனைத்தையும் மாற்றுமா என்றால் இயலாது, இருந்தும் மாற்றத்தின் விதையையாவது விதைப்போம் மாறுவது என்னுடைய அனைத்துமாக இல்லை என்றாலும் அதை எண்ணி ஏங்கும் என் விரலின் மைக் கனவு... April 09, 2024, 08:37:02 am |
3 |