GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on January 22, 2024, 09:38:03 pm

Title: கவிதையும் கானமும்-037
Post by: Administrator on January 22, 2024, 09:38:03 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-037


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk037.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
[/color
Title: Re: கவிதையும் கானமும்-037
Post by: Shree on January 23, 2024, 12:19:03 am


இது அவளின் மனம்....

நேசத்தின் பிடியில் குறையாமல்....

நாட்களோடு தொடர்ந்த ஒர் பொழுது
எது ஏது என்று அறியாமல்....

நீங்காது நின்றே போனது
அதன் ஆழம் தெரியாமல்....

சொல்லித்தான் புறியுமோ அதன் ஆழம்
அவ்வளவு கொடிதா என்ன?

சொல்லி விட வேண்டும் என்றது எண்ணம்
மனமோ கூறாமல் அதன் நேசத்தை சேர்த்து வைத்தது....

ஏங்கியதா என்றால், இல்லையே
எதற்கு அந்த எக்கம்
என்னோடு தான் உள்ளது என்றது....

சேர்த்து வைத்த மனதிற்கு, அதன் தூரம் தெரியவில்லை
ஆனால் பாரத்தின் அளவு குறையகூடுமா?

நகரத் தொடங்கியது நாட்கள்
நேசம் குறையாத நினைவலைகளோடு....

நாட்களின் பாகங்கள் நிஜங்களாய் மீழுமோ
மீண்டாலும் நிஜங்களோடு சேர்க்காமல்
நினைவோடு மட்டுமே கடந்து போக என்னும்....

ஆனாலும் அந்த நேசத்தின் அளவு குறையாது
மறைத்தும் தன் அன்பை வெளிப்படுத்தும்....

ஏன் என்று தான் கேட்டு பாருங்கள்
கூறத் தெரியாமல் நடிப்பது போல் துடிக்கும்...

ஏனெனில் அது அவளின் மனம்....


Title: Re: கவிதையும் கானமும்-037
Post by: Passing Clouds on January 23, 2024, 11:02:52 am
💕💕💕காதலின் சின்னம் கைகளில் 💕💕💕

வானின் தூரம்போல, காற்று படர்ந்திருப்பதைப் போல
கடலின் ஆழம்போல, சூரியனின் வெப்பத்தை போல
காதலும் உள்ளது இந்த உலகத்தில்.

நீ கையால் காதலின் சின்னம் காட்டுகிறாய்
ஆனால் உனது முகத்தை மறைத்துக் கொண்டு

சிந்தேன் ஏன் என்று என்னையே கேட்டுக்கொண்ட தருணம்

உனது வெட்க்கம் கண்டு சூரியன் உறைந்து போய்விடும்  என்றா?
இல்லை காற்று தன் பாதையை மாற்றி உன்னையே சுற்றும் என்றா?

நீ வெட்க்கப்பட்டு ஒளிந்தது  பட்டுப்போன மரம், என்ன ஒரு மாயம்
துளிர் விடுகிறது பெண்ணே!!!

என்ன ஒரு அதிசயம் இயற்கையின் இன்னிசை நிகழ்ச்சி நீ வெட்க்கபட்டதால் அரங்கேரியது
காற்று இன்னிசை அமைக்க மரங்கள் அனைத்தும் ஆனந்தத்தோடு ஆடுகின்றதே  பெண்ணே !!!

உன்னைப் பூவோடு ஒப்பிடமாட்டேன் ஒருநாள் பூ உதிர்ந்துவிடும்
உன்னை நிலவென்று சொல்லமாட்டேன் ஒரு நாள் முழுவதும் இருக்கமாட்டாய்
உன்னை எனது நிழல் என்று சொல்லமாட்டேன் ஒளி இல்லையென்றால் பிரிந்துவிடுவாய்
பெண்ணே நீ எனது இதயத்தின் ஓசை நான்  இரு(ற)க்கும் வரை என்னோடு இருப்பாய் !!!

உனது இதயத்தைக் கைகளில் காட்டி எனது இதயத்தை உன்னோடு  சேர்த்தாயே பெண்ணே
கத்தியின்றி இரத்தமின்றி பரிமாறப்பட்ட இதயம் காதல் எனும் அறுவைசிகிசையில் !!!

மீண்டும் பிறந்தோம் காதளர் என்னும் குழந்தையாக உனக்கு நான் எனக்கு நீ என்று !!!

ஒளிந்து கொண்டது போதும் பெண்ணே இயற்கை ரசித்த உனது வெட்கத்தை
நானும் ருசிக்க ஆசைப்படுகிறேன்!!!

இன்றுமட்டும் அல்ல வாழ்நாள்முழுவதும் ❤❤❤



என்றும் காதலுடன்

💙💙💙நீல வானம் 💙💙💙

Title: Re: கவிதையும் கானமும்-037
Post by: Sudhar on January 23, 2024, 11:07:21 am
மரம் பேசுகிறது உனக்காக நான் இருக்கேன் என் சுவாசத்தை எடுத்து கோல்,
உன் மூச்சை ஸ்வாசி... நீ உயிர் உள்ளவரை நான் இருப்பேன்.
மனிதனை பார்த்து மரம் சொன்னது.
மனிதன் சொன்னான் மரமே இவுளுகில் ஆச்சரியம் என்றால் நீ,
காலத்தில் அழியாதது மரம்,
ஏன் என்றால் தண்ணீர் உள்ள வரை மரத்திற்கு வாழ்க்கை. மரம் இருக்கும் வரை மனிதனுக்கு வாழ்க்கை.
மனிதனால் மரம் வாழவில்லை, மரத்தால் மட்டுமே மனிதன் வாழ்கிறான்..
மூச்சு விட சுவாசம் தேவை ஆகையால் நான் மரத்தை நேசிக்கிறேன்.
மரத்தை சுவாசிக்கிறேன்
மரத்தை காதலிக்கிறேன்.
மரத்துடன் வாழ்கிறேன்...
மரத்திற்கு மட்டுமே நிற்க, நடக்க, வாழ, பாதுகாக்க மரங்கள் தேவை படுகிறது.
மரத்திற்கு மட்டுமே அழகு உள்ளது வாடினாலும், துளிர்த்தாலும்.
மரத்தை நேசிப்போமே
மரத்தை பாதுகாப்போம்....
மரத்தை காதலிப்போம்...
Title: Re: கவிதையும் கானமும்-037
Post by: Sivarudran on January 23, 2024, 12:16:55 pm
மரமாகிப் போனேன் நான் - ஆம்
அவள் என்னை கட்டி அணைத்து
காதல் சொல்கையில் தானே மரமாகிப் போனேன் நானே !
நான் துளிர்விட நினைக்கையில் அவள் என்னை தொட்டுவிட்டாள் !
என் உடம்பில் கிளைகளும் இலைகளும் முளைத்து முறுக்கேறியது
அவள் என்னை மூளை சலவை செய்கையில் !
அவள் தொட்ட இடம் துளிர்விட்டது !
களிறு போல் என் தோல் தடித்து போனது !
காதல் சொல்லி என் பக்கம் வந்த கன்னியவள் கைப்பட்டதும் -ஆம்
களிறு போல் என் தோல் தடித்து போனது !
அவளின் வேர்வைத் துளி பட்டு நிலத்தில் நான் வேர் விட்டுப் பாய்ந்தேன் !
இச்சையோடு அவள் என் அருகில் வர
என் உடம்பில் பச்சையம் பல கோடி கூடியது!
காயாத சருகுகள் என்னில் பல உண்டு
அவள் தன் காதல் சொல்லியதால்!
வாடாத கிளைகள் என்னில் பல உண்டு
வண்ணக்கிளி அவள் என்மேல் வாழ்ந்து வருவதால் !
உதிராத பூக்கள் என் மேல் பல உண்டு -அவள்
உள்ளத்தை அள்ளி என் மேல் வைத்த காரணத்தினால் !
வெம்பாத பழங்கள் என்னில் பல உண்டு
வெட்கப்படும்
 பாவை- அவள்
 என் மேல் விருப்பம் கொண்டதால் !
ஆசை மங்கை அருகில் இருக்க ஆயுள் கூடி போன மரமானேன் நான்-  ஆம்
ஆண்டெல்லாம் வளர்ந்து செழிக்கும் மரமாகி போனேன் நான் !
யாரும் என்னை வெட்டிவிடாமல்
 என்னை கட்டி அணைத்து காலமெல்லாம் காத்து நிற்கும்  இவளோடு
என் காலமும் காதலும் நாளெல்லாம் நகர்ந்து கொண்டிருக்கிறது !
Title: Re: கவிதையும் கானமும்-037
Post by: queen on January 25, 2024, 06:58:19 am
காற்றோடு கீதம் பாடும்... கிளையோடு அசை போடும் மரத்தோடு  ஒரு காதல் மொழி பேச ஆசை....

பச்சை பசேல் என வயலுக்கு நடுவில் நடந்து செல்லுவது ஒரு சுகம்... நடந்து சென்றே பூக்களை வண்ண பட்டாம்பூச்சிகளை ரசிப்பது ஒரு சுகமே...
 நடந்து ஓய்ந்து மரத்தடியில் ஓய்வெடுத்து உன் தோலோடு தோல் சாய்ந்து  கதை பேசிட ஆசை.....

காற்றுக்கு வேலி இல்லை... கடலுக்கு ஓய்வு இல்லை...
மரங்கள் இன்றி வனங்கள் இல்லை...அந்த வனங்கள் இன்றி மழை நீரில்லை....இத்தனை எத்தனை இயற்கையோடு இணைந்த காதலில் மனிதனின் இதயத்தை கொள்ளையடிக்கும் இயற்கையே ஒரு அழகு தான்....

இயற்கை மரங்கள் அது... கிளைகளில் அசைவுகளில் தள்ளாடும் காற்றோடு குயில்களின் பாட்டு மரத்தடியில் நாம் காத்திருக்க இதயத்தை  தொட்டும் செல்லும் மெல்லிசை ராகங்கள் இயற்கைக்குள் ஒழிந்து கொண்டு பல்லாயிரம் கதை பேசுகின்றது ...

இயற்கை தாயின் பெருந்தன்மைக்கு அளவே இல்லை...
நம் மன அமைதிக்கு அவள் தான் உண்மையான அக்கறை காட்டுகிறால்...

தோழியாக அன்னையாக காதலியாக மாறும் அவள் ஒரு அருமருந்து

மண்ணுக்குள் இருந்த  என்னை மரமாக மாற்றிய மழைத்துளியே எங்கே சென்றாய்... நான் மடிந்தேன் என்று நினைத்தாயோ..
என்னை மரமாக மாற்றியே மனிதன் மாறிவிட்டான்.. நீ விண்ணில் இருந்து இறங்கி வா மண்ணை காப்பாற்ற...

இயற்கையின் வாரிசு நாம்... தேசத்தை நேசிக்க முதலில் மண்ணை காக்கும் மரங்களை நேசி...  இதை பற்றி கொஞ்சம் யோசி...
இயற்கையோடு சென்று கொஞ்சி பல கதைகளை பேசி....
உன் காதலை மரங்களை கட்டி தழுவி இதயத்தோடு இணைத்து பார்.... உனக்குள்ளே ஒரு காதல் ராகம் மரங்களோடு உருவாகும் ....

நீ தனிமை வாடினால்... சென்று விடு ஒருதடவை மரங்கள் தரும் அசைவுகளின்.... அவை வாய் பேசாவிட்டாலும் மனதோடு இணைந்து  பல உண்மை கதை சொல்லும் வல்லுமை மரங்களுக்கு உண்டு....

ஒரு நாள் மனித காதல் விட்டு பிரியலாம்... ஆனால் மனிதனுடன் நடமாடும் மரங்கள்  இந்த பூமியின் மீது வைத்த காதல் விட்டு பிரியாது...

உனக்குள்ளே துடிப்பது ஒரு இதயம்.... இந்த பூமியே துடிப்பது இயற்கையின் இதயம் மரங்களின் உயிரோட்டம் தான்... அவற்றை அழிக்க நினைத்தால் அழிவது நாம் தான்....
பல கை கொண்டு கட்டியணைக்க  காத்திருக்க்கின்றது விருட்சத்துடன்... உன் மூச்சு வழியாய் மெல்ல நுழைந்து... உன் மூச்சை ஒரு நாள் காற்று இல்லாமல் ஒரு நிமிடம் நிறுத்தினால் மானிடா அப்போது உணர்ந்து கொள்வாய் மரத்தின் காதல் என்னவென்று.... என்னை நீ நேசிக்க ஆரம்பித்ததால்... உனக்கான சுவாசத்தை பிரபஞ்சம் முழுவதும் தருவேன் இது தான் நான் கொண்ட காதல்...

காதலுடன் இணைத்து காதல் கதை பேசிட அழைக்கிறேன் நான்... நான் தான் உம்மை காத்திடும் மரங்கள் எனக்குள்ளே ஒரு இதயம் இந்த உலகத்துக்காக துடித்து கொண்டு தான் இருக்கின்றது......இதை நீ மறக்க நினைத்தாலும் நினைக்க மறக்காதே  என் மானிட ....
Title: Re: கவிதையும் கானமும்-037
Post by: Eagle 13 on January 25, 2024, 07:53:38 pm
எங்க வீட்டு புளியமரம்:

நாள் முழுக்க
கால்வலிக்க ஓடி ,
பகல் முழுவதும் மட்டை பந்து
ஆட நிழல் தந்தாய்
அன்று,
மழலை முதல் இளமை வரை
உன் கிளைகளில்
ஊஞ்சல் ஆடி
பெற்ற இன்பங்கள்
கோடி,
கோடையில் வெயில் விரட்டும்
பொழுது செல்ல செல்ல அனல் மிரட்டும்,
அப்பொழுது அந்த நிழலில் அனைவரும்
ஒன்று கூடி,
பேசுவோமே குடும்ப கதைகள்
தேடி தேடி,
'பள்ளி விடுமுறை நாட்களில்,
கபடி, கோலி மற்றும் கில்லி
விளையாடுமே, வெற்றி எனது
என்று அடித்து சொல்லி!
தரையில் பாயிட்டு அமர்ந்தாலும்,
தாயம், பரம்பபதம்!
ஒவ்வொரு நாளும் விளையாடுவோம்,
ஒவ்வொரு விதம்!
மாத்தில் பழல் வந்தால்,
பழத்தை அணில் கொஞ்சும்!
குரங்கு கூட்டம் வந்தால்
மனம் அஞ்சும்!
பறவை இனங்களுக்கு அதுவே
தஞ்சம்!
பழ அறுவடை நேரத்தில்
மரத்தின் மீது ஏறி பார்த்தால்,
கொக்கு, நாரைகளின் செ
எச்சம்!
அதை கண்டபின் மரத்தின் மீது
மீண்டும் ஏற கூச்சம்!
தலைமுறைகளை கண்ட மரத்தை
தலை வீதி எங்கு விட்டது,
திடீரன அடித்த புயலில் அருகில்
இருந்த வேப்பமரம் பக்கத்து
வீட்டின் மீது மாய்ந்தது!
அதன் அச்சதால் புளியமரத்தை
வெட்டவும் நேர்ந்தது!
அதன் பின் எங்களை விட்டு
நிழலும் சென்றது!
உணவிற்காக புளியும்
வேண்டி
தினமும்
மளிகை கடையை
நாடவும்
உள்ளது!.
Title: Re: கவிதையும் கானமும்-037
Post by: karthick sri on January 30, 2024, 12:26:27 pm
கவிதையும் கானமும் program la கவிதை எழுத வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷம்...
.

கண்கள்ளை களவாடி சென்று கண்ணமூச்சி ஆடினாய்,
காதல் எனும் இருண்ட காடினில்  குருடாய் அலைந்தேனடி நான்,
எப்போதும் தேடி கொண்டே இருப்பேன்
மறைந்த போன உன்னை...!

 தண்ணீரில் இருக்கும் உப்பு போல் கரைந்தது விடும் என்று எண்ணிய உன் நினைவுகள்,
கடலில் கலந்த உப்பு போல் என்னை கரிகின்றதடி தினமும்...!


ஒளியாக நுழைந்தாயே -தேடும் முன்னே
ஒளிந்து கொண்டாய் - உன்
ஒலி மட்டுமே காதில் கேட்டேனடி நான்
உண்ணை காணும் முன்னே ஏனோ
ஒழிந்து போனாய்..!


நாம் களவாடிய பொழுதுகள் மறைந்தாலும்,
உன் ஞாபகம் அழிந்தாலும்
அந்த மரத்தின் நிழல் சொள்ளுமடி நம் கதையை.


கைகளால் காதல் சொன்ன கண்மணியே,
நெருங்கும் பொது தொலைவில் சென்றாயே
குரல் மட்டுமே கேட்ட நான் இசை என நனைந்தேனனே,
உன் முகம் காட்டுவாயா முழுமதியே...!!