Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 [2]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-033 இது ஓவியமா இல்லை
மொழியின்றி பேசும் காவியமா?
ஒன்றும் புரியவில்லை?
சுவற்றில் கிறுக்கிய கிறுக்கல்களை
உயிரின் பந்தமாய் நினைத்து
 வியக்கிறாய்!
அந்த நிலையை கடந்து
செல்ல
தெரியமல் தவிக்கிறாய்!
ஏனோ ஒரு சிலருக்கு மட்டும் இப்படி
அமைகிறது  வாழ்க்கை!
அதனால் அவர்கள் மனம் கடந்த
செல்ல முடியாமல் தவிக்கிறது உலகை!

சுவற்றில் அதை தீட்டியது ஒரு சிறுவன்
அல்லது சிறுமியாக கூட இருக்கலாம்!
ஆனால்,
நீயோ?
அதை மனதில் வேதனை தூண்டும்
கிருமியாக நினைத்து தவிக்கிறாய்!
ஒரு ஓவியமே!
ஒரு சிறுவனுக்கு  ஏக்கம், தவிப்பு,
சோகம் மற்றும் தேடல் தருமானால்,
இந்த உலகம் அவனுக்கு என்ன என்ன
தருமோ!
இனியாவது,
நாம் அனைவரும் ஒற்றுமையாய்
இணைந்து வாழ்வோம்!
உலகில் யாரும் தனித்த மனிதன் இல்லை
என்று
குரல் கொடுப்போம்!,
மனிதநேயத்தோடு!.

December 01, 2023, 06:59:40 pm
3
Re: கவிதையும் கானமும்-037 எங்க வீட்டு புளியமரம்:

நாள் முழுக்க
கால்வலிக்க ஓடி ,
பகல் முழுவதும் மட்டை பந்து
ஆட நிழல் தந்தாய்
அன்று,
மழலை முதல் இளமை வரை
உன் கிளைகளில்
ஊஞ்சல் ஆடி
பெற்ற இன்பங்கள்
கோடி,
கோடையில் வெயில் விரட்டும்
பொழுது செல்ல செல்ல அனல் மிரட்டும்,
அப்பொழுது அந்த நிழலில் அனைவரும்
ஒன்று கூடி,
பேசுவோமே குடும்ப கதைகள்
தேடி தேடி,
'பள்ளி விடுமுறை நாட்களில்,
கபடி, கோலி மற்றும் கில்லி
விளையாடுமே, வெற்றி எனது
என்று அடித்து சொல்லி!
தரையில் பாயிட்டு அமர்ந்தாலும்,
தாயம், பரம்பபதம்!
ஒவ்வொரு நாளும் விளையாடுவோம்,
ஒவ்வொரு விதம்!
மாத்தில் பழல் வந்தால்,
பழத்தை அணில் கொஞ்சும்!
குரங்கு கூட்டம் வந்தால்
மனம் அஞ்சும்!
பறவை இனங்களுக்கு அதுவே
தஞ்சம்!
பழ அறுவடை நேரத்தில்
மரத்தின் மீது ஏறி பார்த்தால்,
கொக்கு, நாரைகளின் செ
எச்சம்!
அதை கண்டபின் மரத்தின் மீது
மீண்டும் ஏற கூச்சம்!
தலைமுறைகளை கண்ட மரத்தை
தலை வீதி எங்கு விட்டது,
திடீரன அடித்த புயலில் அருகில்
இருந்த வேப்பமரம் பக்கத்து
வீட்டின் மீது மாய்ந்தது!
அதன் அச்சதால் புளியமரத்தை
வெட்டவும் நேர்ந்தது!
அதன் பின் எங்களை விட்டு
நிழலும் சென்றது!
உணவிற்காக புளியும்
வேண்டி
தினமும்
மளிகை கடையை
நாடவும்
உள்ளது!.

January 25, 2024, 07:53:38 pm
1