GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on August 22, 2022, 01:32:44 am

Title: கவிதையும் கானமும்-003
Post by: Administrator on August 22, 2022, 01:32:44 am
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk003.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-003
Post by: Ishan on August 23, 2022, 01:15:36 pm
உன்னை காதலிக்கிறேன் என்றேன் மௌனமாய் பார்த்தாய் உன் மௌனம்
உன் எண்ணம் சொன்னது
உந்தன் நெற்றி மீது ஒற்றை முத்தமிட்டு எனக்கானவன் நீதான் என முத்திரை பதித்திட ஆசையடா.

 நெற்றியில் இருக்கும் சிவப்புபொட்டு நீ என் பெண்மைக்கு கொடுத்த பரிசல்லவோ கணவனே என் ஆருயிர் காதலனே..

இருமனங்கள் உரவாட வார்த்தைகள் ஏதும் தேவையில்லை பார்வைகள் பேசும் மௌன மொழியே போதும் என்பதை உணர்ந்தேன் உன் விழி காதல் மொழி பேசுகையில்.. இவ்வுலகில் ரசிப்பதற்கு ஆயிரம் இருந்தாலும்  நான் ரசித்தது உன்னுடன் உறவாடிய நாட்களைத் தான்... கொஞ்சம், கொஞ்சமாய் என் இதயத்தின் நிலத்தை, உன் பெயருக்கு எழுதி வைக்கிறேன் என் அன்பே என் அன்பே....
Title: Re: கவிதையும் கானமும்-003
Post by: RiJiA on August 24, 2022, 02:00:00 pm
கவிதையா?
எனக்கு  எழுத  தெரியாதே என்று  நான்  சொன்னேன்....
முயற்சி செய்யலாமே என்று  என்னவன்  சொன்னான்....
நான் முயற்சி  செய்தேன்  எண்ணம்படி....
எழுதியது என்  பேனா உள்ளபடி....

நீ  என்  கரம்  பிடி‌த்த  பின்....
என் மஞ்சள்   முகத்தை தொட்டு  பார்த்தேன்..
என்  நெற்றியை  குங்கும் சொந்தம் கொண்டாடியது....
மெட்டி  என்  கால் விரல்களை
பற்றிக்கொண்டது....
மாங்கல்யம்  என் நெஞ்சில் 
குடியேறியது....
கண்ணாடி  வளையல் கைகளில் முத்தமிட..
நாணனத்தில் கால்  கொலுசு
சத்தமிட....
மலர்கள்  தூவி வரவேற்க
சொந்தங்கள் நம்மை  ஆசிர்வதிக்க...

அன்று  நான் .... இன்று  நாம்....

மொத்ததில்...
திருமணம்  நம்  வாழ்க்கையில் நறுமணம்..
ஒரு  கணம்  கூட  விலகாமல் இருபது  ஒரு வரம்....

எழுதி விட்டேன் என்று  சொல்ல  என் பேனா....
நன்றி  சொல்லி  விடைப்பெற்றேன் ஒரு
பெண்ணா....
Title: Re: கவிதையும் கானமும்-003
Post by: Mithra on August 24, 2022, 10:31:41 pm
நம்மிடம் மாறாமலும் மறக்காமலும் இருப்பது நாம் பழகிய அந்த தருணங்களே.....

எப்போதாவது நினைத்து பார்த்து இருக்கிறாயா என்று தெரியவில்லை...?

ஆனால் நான் எப்போதும் நினைத்து பார்ப்பது உண்டு....!

எனது வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கி கொள்வேன்....

ஏனென்றால் என்னவன் இருக்கையில் எனக்கு என்ன பயம் என்பதனால்...!

நான் உன்னை காதலிப்பது உன்னோடு மட்டும் வாழ இல்லை.....

உனக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதற்காக...

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது...
 ஏமாற மட்டுமே தெரியும்.. ...

என் மீது நீ கொண்ட நம் காதலையும்,
உன் மீது நான் கொண்ட நம் காதலையும்,

அன்பு தோழனாகவும், தோழியாகவும்,
அன்பு காதலானாகவும், காதலியாகவும்,

அன்பு கணவன், மனைவியாகவும் என்றுமே காதலிப்போம் நம் ஆயுள் வரை.....!
Title: Re: கவிதையும் கானமும்-003
Post by: Mithra on August 24, 2022, 10:44:15 pm
நம்மிடம் மாறாமலும் மறக்காமலும் இருப்பது நாம் பழகிய அந்த தருணங்களே... எப்போதாவது நினைத்து பார்த்து இருக்கிறாயா என்று தெரியவில்லை... ஆனால் நான் எப்போதும் நினைத்து பார்ப்பது உண்டு.. எனது வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கி கொள்வேன்.. ஏனென்றால் என்னவன் இருக்கையில் எனக்கு என்ன பயம் என்பதனால்... நான் உன்னை காதலிப்பது உன்னோடு மட்டும் வாழ இல்லை... உனக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதற்காக...உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது... ஏமாற மட்டுமே தெரியும்.. என் மீது நீ கொண்ட நம் காதலையும், உன் மீது நான் கொண்ட நம் காதலையும் அன்பு தோழனாகவும், தோழியாகவும். அன்பு காதலானாகவும், காதலியாகவும் அன்பு கணவன், மனைவியாகவும் என்றுமே காதலிப்போம் நம் ஆயுள் வரை......
Title: Re: கவிதையும் கானமும்-003
Post by: Madhuri on August 25, 2022, 10:36:42 am
வீட்டைக் கட்டுபவனுக்கும் திருமணம் செய்துகொள்பவனுக்கும் எந்த நேரத்திலும் அபாயம் வரும்.

கல்யாணம் ஒரு நாள், இரு நாள்தான், அதன் பலனோ நெடுநாள் இருக்கும்.

மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்,
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்,
நீ வாடினால் என் உயிரை விடுவேன் ,
நீ சந்தோஷ பட அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்....!!!
Title: Re: கவிதையும் கானமும்-003
Post by: Sanjana on August 25, 2022, 11:26:49 am
உன்னை பார்க்கும் போதெல்லாம்
உன் அன்பின் ஆழத்தை அறிகிறேன்
உன்னை பார்க்காத போது
உன் அன்பை உணர்ந்து மீண்டும்
உன்னை பார்க்க ஏங்குகிறேன்

என் நெஞ்சைத் தொட்டு
நினைவில் நின்று
சில சமயம் சிரமபடுத்தி
பல சமயம் பரவசமூட்டி
என் வாழ்வின் வசந்தமாய்,
இருளின் வெளிச்சமாய் நீ

நான் தலை நிமிர
பூமியை நேசித்தவளே
என்னை முழுமையாக்க
உன் குடும்பத்தார்க்கு கண்ணீருடன் விடை தந்த வள்ளலே..
உன்னிடம் எப்படியெல்லாம் வாழ நினைத்தேனோ
அதை விட ஒரு படி மேலே
என்னவள் என்னை வாழ செய்தாள்....
(http://[b)



(இந்தக் கவிதையை ஒரு ஆண் பார்வையில் எழுதினேன்)]
Title: Re: கவிதையும் கானமும்-003
Post by: LOVELY GIRL on August 25, 2022, 01:06:58 pm
முத்தமிடும் உன் இதழ்களால் என்னை உறைய வைக்கும் என் ஜீவனே..
என்னுள் நீ உன்னுள் நான் என்று வாழும் காலங்களில் அனுபவிக்க வேண்டும்...
என் கண்ணா...
உன் கரம் கோர்த்து , இதயத்தில் இணைத்து , துன்பத்தில் தோள் கொடுத்து , கண்ணீரை துடைத்து ,
உன் புன்னகையில் கலந்து
வாழ்வின் அர்த்தங்களை புரிய வேண்டும்...
என் மணவாளா
என் நெற்றியில் குங்குமம் இட்டு ,
காலில் மெட்டி இட்டு,
கழுத்தில் மாலை இட்டு,
உன் மடி சாய விரும்புகிறேன்...

என்றும் துடித்து கொண்டிருக்கும் உன் இதய திருடி..
Title: Re: கவிதையும் கானமும்-003
Post by: ChockY on August 25, 2022, 06:31:27 pm
முதலில் காதலில்  தொடங்கி திருமணம் வரை சென்று

காலம் முழுவதும் ஒருவருக்கொருவர்  அன்பை பரிமாறிக்கொள்ளும்

நிகழ்வுகள் வருவதே திருமண பந்தம் !

வாழ்கையில் ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப அத்துடன் பயணிக்கும் பயணம் !

வாழ்க்கை என்னும்   படகில் இரு துடுப்பாக நீயும் நானும் இனைந்து சுழற்றும்போது

வாழ்க்கை என்னும் கரையை வந்தடைவோம் !

வாழ்க்கையில் இனி  இன்பம் பெருகட்டும் துன்பம் அகலட்டும் !

சந்தோசமான வாழ்க்கையை வாழ்வோம் !
Title: Re: கவிதையும் கானமும்-003
Post by: Nandhini on August 31, 2022, 11:24:26 am
உன் கண்களில் உள்ள உன் காதலால்
என் உலகத்தை அழகாய்க்கி விடுகிறாய்!

உன் மனதில் வசிக்கும் வண்ணத்து பூச்சி நான், என்னை அடிமை யாக்கி காதல் செய்ய உன்னால் மட்டுமே முடியும்
ஏநெனில் உண்ணில் நான் என்னில் நீ!!!

உன் மண வீட்டிற்கு சொந்தமானவள்
நான் மட்டுமே என்பதில் பெருமை கொள்கிறேன் என் காதலா!!

இனி வரும் நாட்களில் என் கனவை இனிமை யாக்க வருவாயா !!

என்னுயிரே என் இறுதி கடந்த பின்னும் உன் காதல் வேண்டும்....
உன்னுள் நான் வாழ 💞🌹