Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - ரதி

Pages: 1 [2]
16
தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1-2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது குடைமிளகாய் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு... இறால் - 20 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை போட்டு 1 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும். பின்பு அதே வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, இறாலையும் போட்டு பிரட்டி விட வேண்டும். பின் அதில் கரம் மசாலா சேர்த்து 4-5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், இறால் பெப்பர் ப்ரை ரெடி!!!

17
தேவையான பொருட்கள்:
 1. கோழி இறைச்சி - 500 கிராம் (எழும்புகள் நீக்கப்பட்டது) 2. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 3. தயிர் - 1 கப் 4. கரம் மசாலா - 1 தேக்கரண்டி 5. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 6. உப்பு - தேவையான அளவு 7. இஞ்சி விழுது - 1 டீஸ்பூன் 8. பூண்டு விழுது - 1 ½ தேக்கரண்டி 9. நெய் - 3 தேக்கரண்டி 10. வறுத்த வெங்காயம் - 1 கப் 11. பாசுமதி அரிசி - 2 கப் (நீரில் ஊறவைத்தது) 12. மசாலா - தேவைக்கேற்ப 13. உலர் பழங்கள் - 1 கப் (நறுக்கியது) 14. குங்குமப்பூ தண்ணீர் - 2 டீஸ்பூன் 15. ரோஸ் - 1 டீஸ்பூன் 16. கீவ்ரா வாட்டர் - 1 டீஸ்பூன்


செயல்முறை: 1. ஒரு பெரிய கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அதனுடன் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி மற்றும் பூண்டு விழுது, உப்பு மற்றும் கரம் மசாலா தூள் போன்றவற்றைச் சேர்க்கவும். 2. அனைத்து மசாலாப் பொருட்களையும் நன்கு கலந்து அதில் சிக்கன் துண்டுகளை சுமார் 2 மணி நேரம்ஊற விட வேண்டும். 3. ஒரு ஆழமான அடிப்பாகமுடைய கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானவுடன், அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக கிளறவும். 4. அதனுடன் பொறித்த வெங்காயம் மற்றும் உலர் பழங்களைச் சேர்த்து, சிக்கன் துண்டுகள் அரை வேக்காடு வேகும் வரை வேக விடவும். சிக்கன் துண்டுகள் வெந்த பின்னர் அதை தனியே எடுத்து வைக்கவும். 5. ஒரு கடாயை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது, கொதிக்கும் தண்ணீரில் மசாலா பொருட்களைச் சேர்க்க வேண்டும். 6. கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து அதை முக்கால் திட்டம் வரை வேக விடவும். 7. இப்போது, ஒரு பெரிய பாத்திரத்தின் அடியில் கோழி துண்டுகளை வைத்து ஒரு அடுக்கை உருவாக்கவும். அதன் மீது வேக வைத்த அரிசியை பரப்பி மற்றொரு அடுக்கை உருவாக்கவும். 8. அதன் மீது குங்குமப்பூ தண்ணீர், ரோஸ் வாட்டர், கீவ்ரா வாட்டர், உலர் பழங்கள், வறுத்த வெங்காயம், மற்றும் துண்டாக்கப்பட்ட கொத்தமல்லியை சேர்ர்க வேண்டும். அதன் பின்னர் அதை ஒரு அலுமினிய தாள் கொண்டு மூடவும். 9. உங்களுக்கு பாரம்பரியமான பிரியாணி வேண்டும் எனில் பாத்திரத்தை அதனுடைய உண்மையான மூடி வைத்து மூடி, அதன் பின்னர் இடைவெளியை மாவை வைத்து அடைத்து விடுங்கள். 10. இப்போது, மிகவும் குறைந்த தீயில் பிரியாணியை சுமார் 20 நிமிடங்கள் சமைக்க வேண்டும். 11. பிரியாணி மணம் உங்களின் மூக்கை துளைக்கும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது உங்களுடைய கோழி பிரியாணி பறிமாற தயாராக உள்ளது. நீங்கள் வார இறுதியில் குடும்பத்துடன் ஒரு பார்ட்டி கொண்டாடுவதாக இருந்தால் இந்த சிக்கன் பிரியாணியை தயார் செய்து உங்களின் விருந்தினர்களை ஆச்சரியப்படுத்துங்கள். அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்! அத்துடன் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த அற்புதமான மற்றும் எளிமையான சிக்கன் பிரியாணி செய்முறை குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்


18
ஓர் ஊரில் உண்மை, பொய்  இரண்டும் அருகருகே வசித்து வந்தன. இரண்டும் பரம எதிரிகள் என்பது உங்களுக்குத் தெரியும்.

உண்மை எப்போதுமே புத்தாடையோடு காணப்படும். அமைதியானது. அன்புமயமானது. இன்னும் பல நற்குணங்கள் அதனிடம் இருந்தன. அதனால், நல்லோர் உண்மையை நேசித்தனர்.

ஆனாலும், உண்மை எப்போதும் மறைவாகவே இருந்தது. தன்னை அரிதாகவே வெளிப்படுத்தியது.  அப்படி  வெளிப்பட்டபோது,  மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

பொய்யின் நிலையோ இதற்கு நேர் எதிர். எப்போதும் மனிதர்கள் மத்தியில் உலவிக்கொண்டே இருந்தது. அழுக்கு உடையில் வலம் வந்தது. நல்ல மனிதர்கள் அதனுடன் பழகுவதைத் தவிர்த்தனர். ஆனால், கெட்டவர்கள் பொய்யை மிகவும் விரும்பினர். உண்மையிடம் இருந்து விலகி இருப்பதுதானே அவர்கள் வழக்கம்?

ஒரு நாள் உண்மையும் பொய்யும் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தன. உண்மை, தனது அழகிய உடைகளை ஒரு கல் மீது வைத்திருந்தது.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட பொய், உண்மையின் உயர் தர உடைகளைத் திருடி அணிந்துகொண்டு ஓட்டம் பிடித்தது.

குளத்தில் இருந்து வெளியே வந்த உண்மைக்கு அதிர்ச்சி. அது, பொய்யின் அழுக்கு உடைகளை அணிய விரும்பவில்லை. அதைவிட உடையின்றி இருப்பதே நல்லது என எண்ணியது.

இன்று நாம், பொய்யை பகட்டான பொன்னிற உடையிலும், உண்மையை உடை ஏதும் இல்லாமலும் காண்கிறோம்

19
Stories - கதைகள் / ரதி கதைகள்
« on: March 21, 2019, 12:21:21 am »
         நிறைய பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் இருக்கும் மழையூரில், காளான்களும் அதிகம். மரங்களின் கீழே, பாதைகளில் என எல்லா இடங்களிலும் காளான்கள். அந்தக் காளான்களுக்கு ராணி, லக்ஸி. அவள், ரொம்ப ரொம்ப அழகு. அவள் பறந்து செல்ல பட்டாம்பூச்சிகள் இறக்கைகளைக் கொடுத்திருந்தன. அவள் கண்கள் பிரகாசிக்க, நட்சத்திரங்கள் ஒளியைத் தந்திருந்தன. காளான்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பாதுகாத்தாள் லக்ஸி.

           ஒரு நாள், அங்கே வந்த ஒருவர்  செடிகளுக்கு மருந்து அடித்துச் சென்றார். உடல் மீது மருந்து பட்டதும் மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயங்கி விழுந்தன. இதைப் பார்த்த லக்ஸி, மேக ராஜாவிடம் மழையைக் கேட்டாள். மேகங்கள் கறுத்து, மழை பெய்தது. மழையில் நனைந்த மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயக்கம் தெளிந்தன. அவை, முழுமையாகக் குணமாகும் வரை லக்ஸிதான் உணவளித்துப் பாதுகாத்தாள்.

நாம் காட்டின் மறுபுறமும் சென்று, சிறந்த பரிசைத் தேடலாம்’’ என்றது ஒரு பட்டாம்பூச்சி. மற்ற பட்டாம்பூச்சிகளும் ஒப்புக்கொண்டன.

பல இடங்களில் தேடி அலைந்தன. ஓர் ஓடை அருகே, பார்க்கவே வித்தியாசமாக ஒரு வண்டி நின்றிருந்தது. மிகப் பெரிய பரங்கிக்காயைக் குடைந்து, சக்கரங்கள் அமைத்த அழகான வண்டி. இரவுப் பயணத்தில் வெளிச்சம் தருவதற்காக, அந்த வண்டியில் ஒரு விளக்கும் இருந்தது. ஓடைக்கு அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர்தான் அந்த வண்டிக்கும் சொந்தக்காரர்.

திரும்பி வந்து இந்த வண்டி பற்றிச் சொன்னதும், தங்களைத் தோட்டக்காரரிடம் தந்து, பரங்கி வண்டியை ராணிக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டன, உணவுக் காளான்கள்.

அதன்படி செய்து, லக்ஸி ராணிக்குப் பரிசு அளிக்க, ‘‘இந்த அன்புதான் என்னை மேலும் மேலும் இங்கே இருக்கச் செய்கிறது” என்று மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டாள்.

அந்த மகிழ்ச்சியில் இன்னும் இன்னும் பல காளான்கள், பட்டாம்பூச்சிகள், மின்மினிகள் மழையூரில் தோன்றின.


20
என்னுள் நீ...
உன் உருவம் நுழைத்தாய்
கண்ணின் வழியே...
உன் மூச்சும் கலந்தாய்
நாசின் வழியே...
உன் உணர்வுகள் கொடுத்தாய்
மேனியின் வழியே...
உன் உயிரும் ஒளித்தாய்
இதயத்தின் வழியே.

21
எதிரியிடம் தோற்பதால் ஏற்படும்
வலியை விட,
நண்பன் பேசாமலிருப்பதால்
ஏற்படும் வலியே மிகக் கொடியது!!!

22
எத்தனையோ ஆசைகள் தினம் தினம்
ஆயிரம் கதை பேசி பழக இருபத்தி நான்கு
மணி நேரம் போதவில்லை உன்னோடு
கதை பேச..........


Pages: 1 [2]