Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Nandhini

Pages: [1]
1
ஒரு நாய் அதை வளர்க்கும்
பெண்ணுக்கு மிகவும்
விசுவாசமாக இருக்கிறது,
அவள் தன் குழந்தையை
அதனுடன்
விட்டுவிட்டு பல வேளைகளில்
வெளியில் செல்கிறாள்.

 நாயுடன்  உறங்கும்
குழந்தையை
அவள் எப்போதும்
கண்டு கொள்வதில்லை.
அவளும் நாயை நம்பினால்
ஆனால்,

ஒரு நாள் மிகவும் சோகமான
சம்பவம்
ஒன்று நடந்தது.

 வழக்கம் போல் அந்த பெண்
இந்த விசுவாசமான நாயை வீட்டில்
குழந்தையுடன் விட்டு விட்டு
கடைக்கு சென்றார்.

 அவள் திரும்பி வந்தபோது, ​​
ஒரு பயமுறுத்தும் காட்சியைக்
கண்டாள்,
அது அவளுக்கு ஒரு
முழுமையான
குழப்பமாக இருந்தது.

குழந்தை தன் தொட்டிலில்
இல்லை அதன் சூப்பி
போத்தல் அதை உடைந்து
அதை
சுற்றியிருந்த துணி துண்டு,
துண்டாக
கிடந்தது மேலும்
படுக்கையறை முழுவதும்
இரத்தம் படிந்திருந்தது.

அதிர்ச்சியடைந்த பெண்,
பயந்து தனது குழந்தையைத்
தேடிக் கொண்டிருந்தார்.

 திடீரென்று, அந்த விசுவாசமான
நாயை
கண்டாள்  அது தன் சுவையான
உணவை முடித்தது போல் இரத்தம்
தோய்ந்த
தன் வாயை நக்குவதைக்
கண்டாள்.

 நாய் தனது குழந்தையை
சாப்பிட்டதை
பெண் உறுதி செய்து கொண்டாள்.

 அதிகம் யோசிக்காமல் தன்
குழந்தையை ருசித்த நாயை
கட்டையால் அடித்தாள்
நாய் செத்து மடிந்தது.

 பின்னர் அவர் தனது
குழந்தையின்
உடலின் பாகங்களைத் தேடினாள்.

அப்போது கட்டிலின் கீழ்
ஒரு மூலையில் குழந்தை
படுத்துக்கொண்டு
வேடிக்கை பார்த்தவாறு
இருந்ததையும்
அதன் மறு புறம் பாம்பு
ஒன்று
கிழிந்த நிலையில் கிடந்ததையும்
அந்த பெண் கண்டார்.

அங்கு  பாம்புக்கும் நாய்க்கும்
கடும் சண்டை
கொடூரமான பாம்பிடம்
இருந்து குழந்தையை
காப்பாற்ற நாய் போராடியதையும்
அவள் அதை புரிய நேரமாகியது.

ஏனென்றால் அவள்
தனக்கு வந்த கோபத்தாலும்,
நிதானமற்ற
தன்மையாலும்
விசுவாசமான நாயைக்
கொன்றாள்.

இனி அவள் கண்ணீர்
விடுவதை அந்த விசுவாசமான
நாய் அறியப்போவதில்லை.

 அது போல் உண்மையை
சரிவர அறியாமல் எத்தனை
முறை கடுமையான
வார்த்தைகளால்
மற்றவரை தூற்றுகின்றனர் மற்றும்
அவர்களைப் பற்றி
பொய்களைப் பரப்புகின்றனர்.

வீண் பழி சுமத்தி அடுத்தவரிடம்
காட்டிக்கொடுக்கின்றனர்.

 "சூழ்நிலையை அணுகுவதற்கு
எப்பொழுதும் பொறுமையாக
இருப்பதே சிறந்தது.”

 மேலும் தீர விசாரிக்காது
சில விடயங்களை அவசரப்பட்டு
நம்புதலும் கூடாது.

நன்றி.💐

(படித்ததில் மிகப்பிடித்தது.)

2
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
FROM PENNIN MANATHAI THOTTU

Enaku pudicha varikal
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே

தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி


5
அம்மா என்ற வார்த்தைக்குள் ஆயிரம் உறவுகளை அடக்கி கொண்டாய்
உன் மடி சாய்ந்து உறங்கும் போது
என் கவலை எல்லாம் மறந்து போகும்
என் சோகமெலாம் சுகமாய் மாறும்

நிலா காட்டி சோறூட்டும் போதும் தெரியாது அம்மா
என்னையே சுற்றி வந்த நிலா நீ தான் என்று

அன்பை மட்டுமே எதிர் பார்க்கும் ஓர் உறவு

கருவில் சுமந்த உன்னை
மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்

மனதார வேண்டுகிறேன்
மீண்டும் நீயே என்னை கருவில் சுமக்க

என்ன தவம் செய்தேன் உனக்கு மகலாய் பிறக்க
என்ன வரம் பெற்றேன் நீ என் தாயாய் வந்திட

அடுத்த பிறவியிலும் இதே வரம் பெற்றிட வேண்டுகிறேன்

6
உன் கண்களில் உள்ள உன் காதலால்
என் உலகத்தை அழகாய்க்கி விடுகிறாய்!

உன் மனதில் வசிக்கும் வண்ணத்து பூச்சி நான், என்னை அடிமை யாக்கி காதல் செய்ய உன்னால் மட்டுமே முடியும்
ஏநெனில் உண்ணில் நான் என்னில் நீ!!!

உன் மண வீட்டிற்கு சொந்தமானவள்
நான் மட்டுமே என்பதில் பெருமை கொள்கிறேன் என் காதலா!!

இனி வரும் நாட்களில் என் கனவை இனிமை யாக்க வருவாயா !!

என்னுயிரே என் இறுதி கடந்த பின்னும் உன் காதல் வேண்டும்....
உன்னுள் நான் வாழ 💞🌹



7
அதிஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது.
உதவி என்பது எப்பொழுதும் அடுத்தவரிடம் உனக்கு கிடைத்து கொண்டே இருக்காது. கடைசியில் உன்னிடம் மிஞ்சுவது
உன்மேல் நீ கொண்ட தன்னம்பிக்கை மட்டுமே.
 அதை மட்டும் என்றுமே இழந்து விடாதே.
முடிவெடுத்தால் முடியாதது ஒன்றுமில்லை
 துணிந்துவிட்டால் வெற்றி தூரத்தில் இல்லை.
மெதுவாக சென்றாலும் முன்னேறி செல்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.


8
Birthday Wishes / Re: Happy Birthday CARING PERSON
« on: August 01, 2022, 07:11:30 am »
Happy Birthday caring person

இன்று போல் என்றும் ஆனந்தமாய் வாழ்க பல்லாண்டு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Pages: [1]