39
« on: March 10, 2023, 01:55:21 pm »
தங்க சுடர் ஒளி ஒன்றை
தற்செயலாய் காணப் பெற்றேன்
வெண்ணிலவின் ஒளி வியக்கத்தக்கது!
மண்ணின் வாசம் மயக்கத்தக்கது!
கண் முன்னே தோன்றிய இந்த மின்மினி பூச்சியின் சுடர் ஒளியோ
என்னை ஆர்ப்பரித்தது!!
அரங்கேற்றும் பச்சை தாவரத்தில் அவை
சுடர்தந்த ஒளிவிளக்காய்,
அலங்கரித்து நின்றன!!
பல்லாயிரக்கணக்கான எறும்புகளோ
அந்த சுடர் ஒளியை நோக்கி வருவதைக் கண்டேன்
பின்னே இருந்த அந்த இயற்கையின் பேரழகும்
அந்த சுடர் ஒளியின் முன், பொலிவிழுந்து போனது!!
அந்த இயற்கையும் வியந்தன,
புத்த புதுமையும் பிறந்தன!!
கனமான என் குரலை மௌனமாக்கியது அந்த ஒளி
கலப்பில்லாத என் கண்களைக் கூட கவர்ச்சி ஆக்கியது அந்த ஒளி
காணற்கரிய இந்த காட்சியை அளித்தது யார் என மனதில் கேள்வி!!
இந்த சித்திரக் காட்சி எனக்கு சொல்வது தான் என்ன??
சின்னதாய் ஒரு நினைவு
அமைதியற்ற நாட்களில்
வெறுமையுற்ற மனநிலையில்,
வீழ்ந்து கிடக்கும் பொழுதெல்லாம்
ஒளியூட்டும் மின்மினி பூச்சியின் இக்காட்சி!
தனிமையுற்ற நாட்களில் எனக்கு தன்னம்பிக்கையை சேர்க்கும்..
இடர்பாடுகள் உடைய இந்த நேரத்தில் தேவதையிடம் வரம் கேட்கலாம் என நினைத்த தருணத்தில்,
அந்த சுடர் ஒளியின் மூலம் "தன்னம்பிக்கையே தேவதை" என உணர்த்திய
அந்த மின்மினி பூச்சிக்கு என்னுடைய நன்றிகள்!!