Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 [2]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-023 மனதைச் சுற்றி யுவன் பாடல்களே எனக்கு அதிகம்!! காற்றுக்குள்ளே
வாசம் போல என்ற பாடலை  பற்றி எழுதுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!!!!!

பாடல்கள் என்றும் வாழ்வின் புதிய அத்தியாயங்களின் தருணங்களை தருபவை அல்ல

அவை பழைய அத்தியாயங்களையே புதுப்பித்து திருப்பி தருபவைதான்

யுவன் நிகரில்லாமல்  கஞ்சா விற்று கொண்டிருந்த காலம் அது

 teetotaler முதற்கொண்டு இந்த போதையில் சிக்காதவர் யாரும் இல்லை

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஒளிப்பதிவு

இதயத்திற்கு விருந்தாக நடு காற்றில் தனிமை வந்ததே என்று ஆரம்பமாகும் இந்த பாடல்

 காதலியே இல்லை என்பவருக்கும் ஒரு கற்பனை காதலியை ஏற்படுத்திவிடுவார்

பாட்டிலேயே மழை காடுகளுக்குள்ள ஒரு டூர் கூட்டிட்டு போவார்

ஊறிவரும் ஊற்றைப் போல

துளித்துளி தூரலாய் பாடலின் ராகம்

பரவி வரும் வான் மழையில்

பூங்குழலின் நாதம் போல

எழுத்தாளர் பா. விஜய்யின்  எதுகை மோனை இனிமை சேர்க்க

சிலிர்க்க வைக்கும் குரலால்

ஜீவன் உரசும் தருணமாய்  யுவன்  பாட

"மாறாதே" என்ற வரியில் சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்று கண் முன்னே காட்டினார்

நடு வீட்டில் தனிமை வந்ததே

இந்த ஒரு பாடல் இதயம் தொட்டதே

மனம் மாறுதே...!!



Song Request ~~இந்த பாடலை எனக்காக ஒளிபரப்பு செய்தால் சந்தோஷப்படுவேன்

Movie : Sarvam

Song : kaatrukulle

May 17, 2023, 10:49:48 am
1
Re: கவிதையும் கானமும்-024 எங்கும் சத்தங்களாகவே வியாபித்திருக்கும் இப்பூங்காவிலே

இங்கு இரு இதயங்களோ சத்தம் இல்லாமல் விசுப்பலகையிலே!!

இன்னும் கொஞ்சம் காதலிப்போம்

வலியும் ஒரு வகை காதல் தானே

கடல் கடந்த மணித்துளிகள் போல

நிமிடங்கள் கடந்தும், அவளுக்கு  கோபம் இன்னும் கரையவில்லை

சின்ன சின்ன மழை தூரலில்

கொஞ்சி விளையாடும் பிஞ்சுகளிடம்

மிஞ்சி நின்றது இந்த ஆனந்தமான மணித்துளிகள்

சிந்தித்தேன், என் இதயம் ஒரு மாயக் கண்ணாடியோ

உன் பிம்பத்தை மட்டும் பிரதிபலிக்கிறதே

என்னவளே என் கண் பாவையை பார்

அதில் உள்ள ஐரிஸ் வண்ணங்களை மட்டும் ஈர்ப்பவை அல்ல

உன் உள்ளத்தில் உள்ளதையும் எதிரொலிக்கும் வண்ணமயமாய்

யார் முதலில் பேச வேண்டும் என்ற கோரிக்கை தானே உனக்கு

விண்ணப்பிக்கிறேன்,என் தீர்ந்து போகாத மனநிலையை தீர்க்கமாய்

உன் மௌனம் என்னை பலவீனப்படுத்தவில்லை மாறாக பக்குவப்படுத்தியது

இந்த நிமிடம்..,,,!!!!

கற்பனை செய்தேன் எனது பிருந்தாவனத்தின் ராஜகுமாரி நீதான் என்று

சிற்பனை கேட்டேன் இவள் சிலையை எனக்கு வடித்து தருவாயா என்று

இதுவரை பிரிக்கப்படாத பிரம்மனின் கவிதை புத்தகத்தில் இருந்து தவறி வந்த கவிதையா நீ

உன் சிக்கல் அற்ற நான்கடி கூந்தலில் நான் சிக்கி போனதை எவரிடம் சொல்வேன்!!

உன் ஹைக்கூ இதழ்களால் இந்த புதுக்கவிஞன் படும் பாடு எவர் அறிவார்??

காதலெனும் பாதரசம் பூசிதான் காத்திருக்கிறேன்

காலம் மாற்றம் அடைந்தாலும் காதல் கண்ணாடி பிம்பம் தான்

6 மணி அளவிலும் கூட  தீபம் ஏற்றியாய் இங்கு அமர போகிறாய்

 எப்படியும் இந்த பூங்காவை விட்டு கிளம்பி தான் ஆக வேண்டும்

 அந்த மன தைரியத்தில் உன் மௌனத்தோடு நானும் பயணம் செய்கிறேன்

உன் மௌனமே எனது வசந்த காலம்! 🤭

May 23, 2023, 01:04:43 pm
2
Re: Memorable Persons in GTC Chat And Forum Jesi PVT Dhan Always Miss Pandren😅♥️
May 23, 2023, 02:50:54 pm
1
Re: BLACK & WHITE

IT was persnl cnct.. 😅♥️

HAPPY BROTHER'S MY BROTHER  YASH🥰❤

May 26, 2023, 11:19:49 am
1
Re: ✨Intresting Facts💯 !!!!
June 03, 2023, 11:18:57 pm
1
Re: ✨Intresting Facts💯 "Value your time. It is all you have. It’s more important than your money. It’s more important than your friends. It is more important than anything. Your time is all you have. Do not waste your time."

               #Obviously its intrsting facts✨🖤

June 04, 2023, 07:21:32 pm
1
Re: காதலே

உன் முகம் பார்த்து நான்
நலமாக இல்லை..
நாட்கள் நகராமல் நின்று விடவில்லை..
எண்ணங்கள் தேங்கி போய் விடவில்லை..
முகவரியை தொலைத்து தேடி அலைய வில்லை..
என்றெல்லாம் பேச விரும்பவில்லை..

எங்கே உன்னை தேடுவதாக நினைத்து கொள்வாயோ...
உன் ஆறுதலுக்கும், அன்பிற்கும் அடிமை என்றெண்ணி விடுவாயோயோ..
என்று மனம் பதபதைக்கிறது..

ஒருவர் மட்டுமே தான் வாழ்க்கையா என்ன..?
முடிந்து போன வாழ்விற்கு முதலுதவி எதற்கு??
நான் ஒன்றும் கடந்து செல்ல முடியாத அளவு அன்பை வைத்து விடவில்லை உன்மேல்..
என் மகிழ்ச்சியான முகமே நீ காணும் என் நிரந்தர முகமாக இருக்கும்..




😅மாயாஜால வார்த்தைகள்☘️

June 07, 2023, 09:43:15 am
1