General Category > Sayings - பொன்மொழிகள்

அப்துல் காலம் பொன்மொழிகள் - Abdul Kalam Sayings in Tamil

(1/4) > >>

NavaRasa:
அப்துல் காலம் பொன்மொழிகள் - Abdul Kalam Sayings in Tamil


1.கனவு காணுங்கள் ஆனால்
கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது இல்லை
உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ
அதுவே கனவு.

2.நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால்
இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

3.ஒரு முறை வந்தால் கனவு
இருமுறை வந்தால் ஆசை
பலமுறை வந்தால் அது இலட்சியம்.

4.நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி
திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால்
அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.

5. வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம்
இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி.

6.நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால் நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
நீ நீயாக இரு.


7.கனவு காண்பவர்கள்
அனைவரும் தோற்பதில்லை,
கனவு மட்டுமே காண்பவர்கள்
தான் தோற்கிறார்கள்.

8.நம்பிக்கை நிறைந்த
ஒருவர் யார் முன்னேயும்,
எப்போதும் மண்டியிடுவதில்லை.


9.கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.
அது உன்னை கொன்று விடும்,
கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடலாம்.

10.உன் கைரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே.
ஏனென்றால், கையே இல்லாதவனுக்குகூட
எதிர்காலம் உண்டு.

11.வாழ்க்கை என்பது...!
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு லட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக் கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.

12.ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று
உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான்.
ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி
என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.

vicky:
nice motivational lines

Arjun:
@ Navarasa -- Super bro  :) :)

Sanjana:
he was a great human like his Quotes.....

Sanjana:
One of my fav Sayings

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version