Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1] 2 3
Post info No. of Likes
RiJiA 👉வணக்கம் நான்  RiJiA..
👉 மலேசியா
👉சொந்த தொழில்..
👉எனக்கு கொஞ்சம்  பாட தெரியும்..
👉இது தவிர்த்து எனக்கு என் வீடு   என்        குடும்பம் ரொம்ப பிடிக்கும்.. 
👉நல்ல இசையுடன்  நீண்ட பயணம் ரொம்ப பிடிக்கும்.
👉நான் கொஞ்சம் அமைதியான சுபாவம்..
👉RESPECT  RESPONSE   இது  ரெண்டும்
நான்  மத்தவங்களுக்கும் எப்போதும் கொடுக்கனும் நினைப்பேன்.
👉யார் மனதையும் புண்படுத்திட கூடாதுனு ரொம்பவே யோசித்து பேசுவேன்.
👉 மஞ்சள், நீலம், கருப்பு பிடித்த வண்ணம்.
👉நான் gtc-க்கு வந்து 4 மாதம் ஆக போது.
👉இந்த 4 மாதத்தில் நிறையவே அழகான MAGICS நடந்திருக்கிறது எனக்கு.

1)ஒரு பாடல் பாடி என்னோட சுயவிவரத்தில் பதிவிட்டேன்.உங்கள்  குரல்வளம் நல்லா  இருக்குனு சொல்லி B'DAY WISH N  B'DAY TEAM WISH KU மற்றும் NRR- க்கு குரல் பதிவுக்கு  வாய்ப்பு
கொடுத்தாங்க.
2)அடுத்தப்படியாக  KG PROMO-க்கு  குரல் பதிவு  வாய்ப்பு.
3)அடுத்துதான்  ஒரு  பெரிய திருப்பம் KG PRGM  தொகுத்து வழங்க ஒரு  வாய்ப்பு   கிடைத்தது.
4) இப்ப  Gtc-யின் தொகுப்பாளர்  என்று  ஒரு அங்கீகாரம்.
5)GTC USERS  ஆதரவு இல்லாமல் RiJiA HOST  இல்ல..GTC USERS அனைவருக்கும் RiJiA-வின்  நன்றிகள் 🙏

👉இதெல்லாம்  வேணும்னா  எல்லாருக்கும்  சின்ன  விஷயமாக இருக்கலாம்..ஆனால் எனக்கு  அப்படி  இல்ல. காரணம்  CHAT ROOM LE என்னோட NICK பக்கத்துல  ஒரு  LOGO சுத்திட்டு இருக்கும் பாருங்க..அதுல  MIC LOGO  இருக்கும்.12 வருசத்துக்கு முன்னாடி என்  கை  விட்டு  போனது..இப்ப  அதுவே  என்ன தேடி  வந்தது..இப்ப  நான்  அதை  சரியா பயன்படுத்த வேண்டும்..சரியா  பயன்படுத்துவேன் நெனக்கிறேன்..இந்த  வாய்ப்பு  கொடுத்த நல்ல  மனம்  படைத்த coffee BoY-கும் நான் மரியாதை  வைத்திருக்கும்  DJ ISHAN-க்கு நன்றிகள்.🙏



👉CHAT LE  ஒரு  நல்ல  COMFORTABLE   குள்ள என்ன  வச்சிருக்காங்க sarayu  siss💕CHT LE எனக்கு நிறைய  விஷயம்  எனக்கு  சொல்லி கொடுத்தாங்க.MAIN  CHT LE நான்  அதிகமா அவங்க  கூடத்தான் பேசி இருக்கேன்.ஏதோ  ஒரு  நல்ல  vibe இருக்குனு  நான்  நெனைக்கிறேன். SARAYU  siss  நன்றி எல்லாத்துக்குமே..இந்த  அன்பு  எப்பவுமே  தொடரனும்.💞

👉அன்பான  நண்பர்கள், நல்ல உள்ளம் கொண்ட சகோதரிகள்,மரியாதைக்குரிய சகோதரர்கள் GTC CHT LE இருக்காங்க எனக்கு.💕


👉GTC ADMINS, அனைத்து  COMMANDER மற்றும் USERS-க்கும் நன்றிகள்.

👉என்ன  இவ்வளவு  பெரிய  அறிமுகமா அப்படினு  நினைக்காதீங்க..மேடை  நிகழ்ச்சியில்  வேணும்னா  4 நிமிடத்தில்  MAGICS  நிகழ்த்திட்டு போகலாம்..ஆனால் இது என் வாழ்கையில்  நடந்த  MAGICS  4 வரியில்  அடக்க  முடியாது இல்லையா, நன்றி 🙂


         

October 24, 2022, 10:42:48 pm
1
Re: கவிதையும் கானமும்-030           நட்புக்கு ஒரு இலக்கணம்


தோழா எதற்கும் கலங்காதே..
தோழி இருக்கிறேன் மறவாதே..
தோளில் நீயும் சாய்ந்து கொண்டால்
தோல்விகள் உன்னை துரத்தாதே!!

தடைகள் சில இங்கு சார்ந்து வரும்..
தவிப்புகள் பல இங்கு கடந்துவிடும்..
தேனீக்கள் கட்டிய கூட்டு வீடு இது..
தேள் வந்து குடியேறும் மறவாதே..

வந்தது எதுவும் வாய்ப்பதில்லை..
தந்தது எதுவும் தர்மம் இல்லை..
வழியின் வழியில் வலி இருந்தால்..
வசந்தங்கள் வசப்படும் மறவாதே...

சிலந்தியின் வலையினை பார் தோழா...
சிரமங்கள் இருக்கும் தெரியாதா?
சிரமம் என்று நினைத்திருந்தால்
சிகரத்தை தொட வழி அறியாதா?

கடல் அலை வருவதை பார் தோழா..
கடந்து வந்து கரை தொடும் தெரியாதா?
கல்லறையில் பூக்கும் பூவூக்கும்,
கார்மேகம் மழை தந்தால் மலராதா?

நினைத்தால் நினைவுகள் வலி தோழா...
நினைவலைக்கு கரை இங்கு  கிடையாதா?
நிழலும் தனியே நிற்பதினால்
நின்ற இடம் அது மறவாதா?..

ஒருநாள் உனக்கு வரும் தோழா..
ஒவ்வொரு வரமும் உன் வசம் தோழா..
கண்ணுக்கும் கனவுக்கும் தூரம் என்றால்..
கனவுகள் இங்கு பூக்காதா??

சோகங்கள் என்று நினைத்திருந்தால்,.
சோலை கதிர்கள் இங்கு விளைவதில்லை..
சொந்தங்கள் எல்லாம் சொர்க்கம் என்றால் ..
பந்தங்கள் இங்கு பாரமில்லை..

இழப்புகள் எல்லாம் நிரந்திரமில்லை..
இழப்போம் என்று தெரிவதில்லை..
இன்னிசை பாடிடும் கானகுயில் ஒன்றும்..
இதுதான் இசை என்று அறிவதில்லை..

துன்பத்திற்கு துணை உண்டு என் தோழா..
துவண்டு நீ கிடந்தால் துளிர்க்காதா?
துடுப்புகள் எல்லாம் பாரம் என்றால்..
தடுப்புகள் தாண்டி படகு கரை அடையாதா?..

தடுமாறும் மனம் இங்கு ஏன் தோழா..
தட்டிக்கொடுப்பேன் நான் இங்கு வா தோழா..
தவழும் பிள்ளை நீ எனக்கு,
தவறிட வழி இல்லை புரியாதா?

உயிர் தந்த உறவிது நம் நட்பு தோழா..
நீ உடைந்தால் உயிர் விடுவேன் நான் தோழா..
உனக்காக யார் என்று கலங்காதே...
உள்ளங்கையில் உன் உலகம் நான் ,
என்றும் மறவாதே..

சுமை என்றால் சுகமில்லை என் தோழா..
சுழலும் உலகினில் நாம் தோழா..
வார்த்தைகள் எல்லாம் வாழ்த்துக்கள் ஆக,.
வாழ்வோம் இந்நாள் வா தோழா!!!






















August 22, 2023, 12:37:50 am
1
Re: Limat Hi Limat, Warm Welcome To GTC FORUM💐

💫Nice Intro
💫Unge Tamil Alaga Iruku

💫Nice To Meet You
💫Hope You Will Enjoy Here

💫BE HAPPY ALWAYS & KEEP SMILING 😊

August 29, 2023, 06:36:53 pm
1
Happy Birthday Limat
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday (26-09-2023) Wishes To Our Lovable Limat Wishes Her All Very Best & Good Luck👍


🎁🍫🎆🌹HAPPY BIRTHDAY🌹🎆🍫🎁
🌺🌻Limat🌻🌺





🎊💫🎁 Wishing You A Beautiful Day With Good Health And Happiness Forever🎊💫🎁

🍫🍬🍰Be Happy With Your Loved Ones
May Your Dreams All Come True🍫🍬
🍰

September 26, 2023, 12:01:34 am
1
Re: Happy Birthday Limat
🎉🎂 Happy Birthday Limat 🎂🎉
Wishing you all the happiness in the world on your journey ahead!

September 26, 2023, 02:51:01 am
1
Re: Happy Birthday Limat Happy birthday to you Limat... Wish you all the success in this birthday... May God bless you with long life and prosperity.... Have a great day.. Take care... By Bullett
September 26, 2023, 03:30:14 am
1
Re: Happy Birthday Limat என்னவனே!
நான் கண் மூடும்போது தெரியும் பிம்பம் நீயாக இருக்க வேண்டும் 💖💖💖

நான் கண் திறக்கும்போது கண் முன் நிற்கும் உருவம் நீயாக இருக்க வேண்டும் ❤️❤️❤️

எத்தனையோ உறவுகள் இருந்தும் உன் ஒரு நொடி பிரிவு என்னை வதைக்கும் 😭😭😭

எனக்கு தாயாய் தந்தையாய் தோழனாய் மாமனாய் என் உயிரில் என்றும் கலந்து இருக்கும் என்னவனுக்கு💝💝💝

இனிய பிறந்த நாள் வாழ்த்த்துக்கள்,😘😘😘😘😘😘😘😘😘

September 26, 2023, 06:18:14 am
1
கவிதையும் கானமும்-033 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-033


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
[/color

November 27, 2023, 06:44:57 pm
1
Re: கவிதையும் கானமும்-033 கற்பணை குடும்பம்


"அன்னையிடம் நீ  அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் "

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது

அன்னையின் பாசம் தந்தையின் நேசம்

பாசம் இன்று கலப்படமாகிப்போனது

பணம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான பாசம்

அவர்களுக்கு உபயோகம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான விசுவாசம்
 
இந்த விசுவாசம் பாசம் மறந்துவிடும் காலப்போக்கில்

நம்மிடம் ஒன்றும் இல்லையென்றால் புதைத்திடுவார் அவர்களின் காலுக்கு அடியில்

ஆனால் துளிகூட களங்கமில்லாத எதையும் எதிர் பாராத அன்பு

தாயின் அரவணைப்பில் தந்தையின் அக்கரையில் தான் உள்ளது

வெண்சங்கு சுட்டாலும் வெண்மைதரும் அதுபோல

அவர்களை நாம் உதாசீன படுத்தினாலும் ஒரு துளிகூட மாறாத அன்பு பெற்றோரின் அன்பு

அந்த அன்பு பசுவின் மடியில் இருந்து வரும் பாலை விட தூய்மையானது

நீல வானத்தின் எல்லையை விட பெரியது

எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதை  ஒரு நொடியில் போக்கிவிடும்

அன்னை மடியும் தந்தையின் அறிவுரையும்

தலை சாய்க்க மடியும் இல்லை அறியுரை கேட்க என்னக்கு பாக்கியமும் இல்லை

உங்கள் கை கைகோர்த்து நடக்கத்தான் ஆசை எனக்கு  அம்மா அப்பா

ஆனால் கடவுளுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை உங்களை அழைத்து சென்றுவிட்டான்

உங்களின் அன்பையும் அறியுரையும் கேட்க ....

உங்கள் இருவரோடும் கைகோர்த்து போக என்னக்கு ஆசை அம்மா என் அப்பா

அதனால் கற்பனையாக வரைத்தேன் சுவரில் ............. கற்பனையோடு வாழ்கிறேன் உங்களோடு

அப்பொழுதும் என்னையே பார்க்கிறாய் அம்மா ஐ லவ் யு மா



ப்ளஸ் உங்க அம்மா அப்பாவை கஷ்டப்படுத்தாதீங்க இல்லாத போதுதான் அவங்க கஷ்டம் தெரியும் ...




நீலவானம்

November 30, 2023, 10:46:26 am
1
Re: கவிதையும் கானமும்-033 தாயை பிரிந்த கன்றானேன் !
தவித்து தனியாய் நின்றேனே !
என் தலையைக் கோதும் என் தாயின் விரல்கள் எங்கே ?
என் தனிமையை துரத்தும்
என் தந்தை விரல்கள் எங்கே ?

தரணி ஆளப் பிறந்த மகன் நான் தானென்றே !
தவறாது என்னை தலையில் வைத்தாடும்
தந்தையே !
தனியாய் நின்று தவிக்கும் உங்கள்
தலைச்சன் பிள்ளை
நான் தானே !

தறிகெட்டு ஓடியாடும் எனக்காய்
கறி கூட்டு பல சமைத்து
நறி வருது கத சொல்லி
நாலு வாய் சோறு ஊட்டும்
நல்ல தாய் நீதானே !

தேர் பாக்க போகையில
தேம்பி நான் அழுகையில
தேயாத நிலவு நான்தானுன்னு
என்னைத் தேற்றும் தெய்வங்களே !

உங்கள் முன்பிருக்கும் என்னைக்
கண்ணிருந்தும் நீங்கள் காணலையே !
உங்களிடம் வந்து வாய் பேசும் என்னை
நீங்கள் வாய் திறந்து
கூப்பிடலையே !
ஓயாமல் அழுகும் என்னை கண் சாயமல்
காத்து நின்ற காவல் தெய்வங்களே !
அடுப்பு கரியில் நான் வரைந்த
அழகு காவியம் இதுவென்று தெரிந்தும்
உங்கள் கரம் பற்றி
ஊமையாய் நிக்கிறேனே !
இங்கே ஊமையாய் நிக்கிறேனே !

November 30, 2023, 07:35:45 pm
1