GTC FORUM
POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Empty Dappa on March 09, 2023, 09:11:02 pm
-
என்னை என்ன செய்து விடும் உன் பெயர்??
மழை, நதி, நிலா என்றும்
இன்னும் பல பிறவென்றும்
உனக்கு பெயரிட்டுக் கொள்கிறேன்
மழையெனும்போது
மனம் நிறைத்துவிடும் மழையாகி விடுகிறாய்
நதியென மொழிகையில்
நினைவுகளில் பெருக்கெடுக்கிறாய்
நிலா என அழைக்கையில்
தனிமைகளை தணிக்கிறாய்
உன் அன்பின் அவதாரங்களை விவரித்திட
தேவதை இராசாத்தி மலர் என நீளும்
இன்னும் பல பெயர்கள் உண்டே உனக்கு
ஆயினும்
உன் பெயர் மொழிகையில்
நான் நிறைவாகிறேன்.
அத்தனையையும்
உள்ளடக்கிய பரிபூரண நிறைதல்
என்னில் உன் பெயர்.
-
NICE POEM FRD.....
-
Nycc