Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - AnJaLi

Pages: 1 ... 12 13 [14] 15 16
196
மாம்பழ ஐஸ்க்ரீம்

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 4
சர்க்கரை - 300 கிராம்
பால் (காய்ச்சி ஆறியது) - 2 ஸ்பூன்
திராட்சை - 2 ஸ்பூன்

செய்முறை:

நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சிவி, சதை பாகத்தை துண்டு செய்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகி விடும். பாலும் தேவைப்பட்டால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும். இதை குளிர வைத்து கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றி, திராட்சை தூவி ஸ்பூன் போட்டு பறிமாற வேண்டும்.

197
மாம்பழப் பாயசம்

தேவையான பொருட்கள்:

இனிப்பான மாம்பழங்கள் - 4
சர்க்கரை - 150 கிராம்
பால் - அரை லிட்டர்
உடைத்த முந்திரிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - அரை டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

* மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்­ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

* நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.

* பாலில் கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.

* மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும்.

198
மாம்பழ பர்பி

தேவையான பொருட்கள்:

மாம்பழச் சாறு - 1 கப்
பால் பவுடர் - 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துறுவல் - 1 கப்
ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்

செய்முறை:

* அடிக்கனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற வேண்டும்.

* கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.

* மீதியுள்ள நெய்யை விட வேண்டும்.

* பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு ஏற்கனவே நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும்.

* லேசாக ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.

199
மாம்பழ சீஸ் கேக்

தேவையான பொருட்கள்:

மேரி பிஸ்கட்ஸ் - 1/2 பாக்கெட்
வெண்ணெய் - 10 கிராம்
பனீர் - 50 கிராம்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
மாம்பழச் சாறு - 1/2 கப்
மாம்பழத் துண்டுகள் - தேவையான அளவு
ஜெலடின் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்

செய்முறை:

* வெண்ணெயை உருக்கி அதனுடன் மேரி பிஸ்கட்டை பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.

* இதை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்.

* ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், பனீர், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு பாத்திரத்தில் அல்லது மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.

* கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்.



200
Ingredients:

2 medium finely chopped onions
2 medium chopped tomatoes
1/2 lb. diced mushrooms
6 slit green chili peppers
4 cloves
1 small stick cinnamon
1 teaspoon red chili pepper
1 teaspoon ground cumin powder
1/2 teaspoon turmeric powder
1 tablespoon garlic paste
1 cup cooking oil
1 tablespoon fenugreek leaves (crushed methi leaves)

How to make mushroom masala:

    * Warm oil, add cloves and cinnamon. When oil simmers, add onions.
    * When onions turn brown, add garlic paste, red chili powder, cumin, and turmeric powder mixed in a little water with salt to taste.
    * When the masala is thoroughly fried, and oil comes up, add tomatoes and green chili peppers.
    * Stir thoroughly, then add diced mushrooms. Cook on low heat for 5-7 minutes.
    * Garnish with dried crushed fenugreek leaves for a delicious flavor. Serve with chapattis or puri.



201

203
பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின், போலிக்அமிலம், பொட்டசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, நார்ச்த்துக்கள் உள்ளன.

ஆராய்ச்சியில் பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2 விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும் .

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

பப்பாளி குடல்புழுக்களுண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து.

இந்தப் பழத்தில்தான் எத்தனையெத்தனை சத்துகள், வெவ்வேறு விதமான மருத்துவ குணங்கள்...

சுமார் 30 கிராம் அளவிலான பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வாமாயின், அதில் வைட்டமின் பி 1- 11 மில்லிகிராம்; பி2 - 72 மில்லி கிராம்; வைட்டமின் சி - 13 மில்லி கிராம்; இரும்புச் சத்து - 0.1 மில்லி கிராம்; சுண்ணாம்புச் சத்து - 0.3 மில்லி கிராம் இருப்பதைக் காணலாம்.

விலைமதிப்புடைய ஆப்பிளைக் காட்டிலும் பப்பாளியில் அதிக அளவிலான உயிர்சத்துக்கள் (வைட்டமின்) இருக்கிறது என்பதால், இப்பழத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

இதிலுள்ள மருத்துவ குணங்களைக் காண்போமானால், மேலும் வியப்பு உண்டாகும் என்பது தெளிவு.

இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் பப்பாளி பழம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. மலச்சிக்கல் நீக்கும் வல்லமையும் இப்பழத்துக்கு உள்ளது.

உடலுக்கு ஆரோக்கியத்தை நல்கி, சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு வழிவகை செய்யும் பப்பாளி பழத்தை, நாம் அன்றாடம் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.

 பப்பாளி எல்லா சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய பழப்பயிர். தானாகவே வளரக்கூடியது, மிக குறைவான கவனிப்பே போதுமானது இந்த மரம். ஆனால் அது தரும் பலனோ மிக அதிகம். ஆனாலும் நோயாளிகளைப் பார்க்க செல்பவர்கள் கூட ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற விலை அதிகமான, பப்பாளியை விட சத்துக்குறைவான கனிகளைத்தான் வாங்கி செல்கிறார்களே தவிர, பப்பாளியைக் கவனிப்பாரில்லை.

பப்பாளி பனைபோல பருத்து உயர்ந்து வளர்ந்தாலும் முருங்கையைப் போலவே பலமற்ற மரம் இது. எளிதில் முறிந்துவிடும் தன்மைகொண்ட இம்மரமானது, சரியான சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியது.

ஆசிய நாடுகளில் சுமார் 10லட்சம் டன்கள் பப்பாளி உற்பத்தி செய்கின்றன. இதில் இந்தியாவில் பப்பாளி பழங்கள் 3 லட்சத்தி 70 ஆயிரம் டன் உற்பத்தி செய்கிறார்கள்.
பப்பாளி பழத்தின் விதைகள் மற்றும் தோலை நீக்கிய பின் மற்ற பழங்களை விட அதிக அளவு (75 சதவீதம்) வீணாகாமல் உண்ணத்தக்கதாக உள்ளது. ஆனால் இதை நீண்டநாள் பாதுகாத்து பயன்படுத்த முடியாது.

100கிராம் பப்பாளிப் பழத்தில் 57மி.கிராம் வைட்டமின் சி உள்ளது. 100 கிராம் பப்பாளிப்பழத்தில் வெறும் 32கிலோ கலோரி ஆற்றலே கிடைக்கிறது. எனவே இது குண்டானவர்களும், எடையை குறைக்க விரும்புபவர்களும் விரும்பும் பழமாக குணநலன்களைப் பெற்றுள்ளதுஆப்பிள், கொய்யா, சீத்தாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மிக அதிக அளவு கரோட்டின் சத்து உடையது பப்பாளி பழம் ஆகும்.

பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பொதுவாக இந்திய குழந்தைகளிடையே காணப்படும் வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறுகளைத் தடுக்கமுடியும்.

பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

 பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறுவிதமான என்சைம்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள "பப்பாயின்" என்ற என்சைம் ஆனது மிகச்சிறந்த செரிமான ஊக்கியாக செயலாற்றுகிறது. இது உணவிலுள்ள புரதச்சத்தானது எளிதில் செரிக்க உதவுகிறது.

எனவேதான் இறைச்சியை மென்மையாக வேகவைப்பதற்கு பப்பாளிக்காய் துண்டுகளையும் உடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது.

இந்த பப்பாயினின் வலி நீக்கும் தன்மையானது அமெரிக்க உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதுகெலும்புதட்டு புறந்தள்ளல் போன்ற நோய்நிலைகளில் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்தானது நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலியைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. கோதுமை புரதத்தை எளிதில் செரிக்கச் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. குடல்புண்ணால் அவதிப்படுவோருக்கும் பப்பாயின் பயன்படுகிறது.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை (டான்சில்) குறைக்கிறது. பப்பாளி பழரசமானது கழலைகள், கட்டிகள், புற்றுநோய் மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. இதன் வேரானது, கருப்பைக் கட்டியை அகற்றப் பயன்படுகிறது.

ஆப்பிரிக்காவில் பப்பாளி வேரானது கிரந்தி எனும் பால்வினை நோயை (சிபிலிஸ்) குணப்படுத்தவும், இலையானது இழுப்பு (ஆஸ்துமா) நோயின்போது புகைபிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவைச்சோந்த மக்கள் பப்பாளி (வாத) நோயிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர். கியூபாவில் பப்பாளிப் பாலானது (சோரியாஸிஸ்) காளாஞ்சகப்படை மற்றும் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பப்பாயின் குடலில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்கவும், பூச்சிகளை அழிக்கவும் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைசிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் தீய பக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் கூட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகச் சிறந்த கறை நீக்கியாக செயல்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.

 பப்பாளியின் பயன்களை மனதில் பதிய வைத்துக்கொள்ள சுருக்கமாக;

பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.
மேலும், நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் பப்பாளி பழம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. மலச்சிக்கல் நீக்கும் வல்லமையும் இப்பழத்துக்கு உள்ளது.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.  எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

ஆகவே இறைவன் அளித்த சிறந்த இப்பழத்தினை உண்டு நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழுங்கள்.


204
திராட்சை! நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு.... என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிசுமுசுப் பழம் என பெயரிட்டனர்.

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

குழந்தைகள் வளர்ச்சிக்கு

வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு

எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக

பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

குடல்புண் ஆற

அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு

சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.

அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.

குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு இறையருளால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.


205
கிராமங்களில் குறைந்தது இரண்டடி அகலமாவது விட்டு வீடுகள் கட்டப்பட்டிருக்கும். சந்து என்று அதற்கு பெயர். வீட்டுச்சுவர்களில் ஜன்னல் வைக்க வசதியாகவே இவ்வாறு தனித்தனியாக வீடுகள் கட்டப்பட்டன. இந்த ஜன்னல்கள் வழியே சூரிய ஒளி ஊடுருவி அனைவரையும் தொட்டுச்செல்லும். ஆனால் நகர்புறங்களில் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் சரியான காற்றோட்ட வசதியின்றியும், ஒன்றன் மீது ஒன்றாக வீடுகள் அடுக்கு மாடி குடியிருப்புகளாக கட்டப்படுகின்றன. என்னதான் வீட்டு முன்பு காலியிடம் விட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தாலும் அபார்ட்மென்ட் குழந்தைகள் யாரும் அதில் விளையாடுவதில்லை. இதனாலேயே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு எலும்பு பாதிப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன. அபார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்றழைக்கப்படும் இந்த புதிய குறைபாடு அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. குழந்தைகளில் எலும்புகளை முற்றிலும் பாதிக்கும் புது பிரச்சினையாக இந்நோய் உருவெடுத்துள்ளது.

இந்நோய் எப்படி ஏற்படுகிறது

இதன் விளைவாகத்தான் சென்னை போன்ற மாநகரங்களில் சிறிய இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. வேலை நிமித்தமாக பெரும்பாலோனோர் பெருநகரங்களில் குடியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதால் இடப்பற்றாக்குறையினால் பலரும் அபார்ட்மென்ட்களில் வசிக்க வேண்டியுள்ளது. போதிய காற்று, வெளிச்சம், போன்றவை குறைவு. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வளரும் குழந்தைகளை அபார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்கிற புதிய குறைபாடு தாக்கத் தொடங்கியுள்ளது. எளிதில் எலும்பு உடைதல், விரிசல் ஏற்படுதல், மற்றும் ரிக்கெட், போன்ற பிரச்சினைகள் இந்த குறைபாட்டினால் ஏற்படுகின்றன.

சூரியஒளி தேவை

அதிகாலையிலே உடலில் படும் சூரிய ஒளி எலும்புகளுக்கு சத்தளிக்கக் கூடிய விட்டமின் டி யை உற்பத்தி செய்கின்றன. ஆனால் சூரிய ஒளி பட்டால் கறுத்துவிடுவார்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால் குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க மறுக்கின்றனர். மேலும் ஏ.சி போட்டு கதவுகளை அடைத்து விடுவதால் இயற்கை தன்மை இல்லாமல் போய் விடுகின்றது. இதனால் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளிடையே இக்குறைபாடு அதிகம் காணப்படுகின்றன. கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் வெயில் மழை என்றும் பாராமல் விளையாடுவதானேலே அவர்களுக்கு இதுபோன்ற நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

வைட்டமின் டி அவசியம்

இந்நோய் தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தினமும் காலை வெயிலில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைப்பதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதன்மூலமே அபார்ட்மெண்ட் சின்ட்ரோம் போன்ற நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். என்கின்றனர் மருத்துவர்கள்.



206
தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இர ண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.
சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு  சேர்த்து மென்று சாப்பிட்டு,  குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.

காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில து ளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.

அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச் சாறு அரை அவு ன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.
விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால்  குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி  தேய்க்க வேண்டும்.

தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை  அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும்.

வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.

207
ராஜுவின் கதை - இறுதி பாகம்


முதல் அண்ணன் காலமாகிவிட மீதம் ராஜுவையும் சேர்த்து நான்கு பேர் சகோதரர்கள் ஒருவருக்கும் அப்போது திருமணமாகவில்லை. அப்போது தொலைபேசி அலுவலகம் தனியார் நிருவனமாக்கப்படவில்லை, ராஜுவின் சகோதரரில் ராஜுவிற்கு மூத்த சகோதரர் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் அரசு பணியில் இருந்து வந்தார், ராஜுவின் மூத்த சகோதரர் வேலையை விட்டு விடாதே, திரைப்பட தயாரிப்பிலோ இயக்குனராகவோ கிருஷ்ணன் முன்னுக்கு கொண்டு வருவார் என்கின்ற உன் நம்பிக்கையை நம்பி அரசு பணியை விட்டு விடாதே என்று எடுத்துக் கூறியுள்ளார், ராஜுவின் இரண்டு தம்பிகளில் மூத்தவர் ரயில்வேயில் எழுத்தராக பணி செய்து வந்தார், [கடைசி தம்பியும் பிற்காலத்தில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்தார்]. அவருக்கு அப்போதைய தென்னிந்திய ரயில்வேயின் பொதுமேளாளர் மிகவும் நெருக்கம் என்பதால் ரயில்வேயில் பணியமர்த்திவிடுவதாக ராஜுவிடம் பல முறை சொல்லியும் இயக்குநர் கிரிஷ்ணரின் வாக்குறுதியின் மீதிருந்த நம்பிக்கையால் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் திரைப்பட மோகத்தினால் இழுக்கப்பட்டு கிருஷ்ணனே கதி என்று நம்பிக்கிடந்தார் ராசு.

ஆனால் நம்பிக்கை எந்த அளவிற்கு உதவி செய்தது, கிருஷ்ணர் தனக்கிருந்த நண்பரும் தொழில் பார்ட்னருமான பஞ்சுவிடம் பீம்சிங்கை அறிமுகப்படுத்தினார், பீம்சிங் எங்கிருந்து திடீரென்று வந்தார், அவரும் அடுத்த தெருவில் வசித்தவர், பீம்சிங் ராசுவைப்போல இல்லை, தொழில் நுணுக்கத்தை பிடித்துக்கொண்டு கிருஷ்ணனின் உதவியுடன் திரைப்பட இயக்குனராகிவிட்டார், இயக்குனராவதற்கு உதவிய கிருஷ்ணன் பீம்சிங்கை தனது தங்கைக்கு திருமணம் முடித்து வைத்து சொந்தமாக்கிவிட்டார். ராஜுவின் நிலை என்ன, கேள்விக்குறிதான். பஞ்சுவும் பீம்சிங்கும் [பீம்சிங்கின் தாயார் தெலுங்கு பிராமணர்] பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள், கிருஷ்ணரின் தகப்பனாரும் பிராமணர், ஆக பிராமணர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு தங்களை முன்னேற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் சொந்தமாக மாறிப் போயினர். ராசு அடிப்படையில் கிறிஸ்த்துவர், அவரை உயர்விற்கு கொண்டுவந்து அதனால் அவர்களுக்கு ஆகப்போவது என்ன என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்திருக்கலாம்.

ஏமாளி ராசு, பிழைக்கத்தெரியாதவர், அப்பாவி அப்போதும் இவற்றையெல்லாம் உணரவில்லை, கிருஷ்ணர் தனக்கு நிச்சயம் உதவிவிடுவார் என்று அவரது வாக்கை நம்பி காலமெல்லாம் காத்திருந்தார், திரு வாசு அவர்களால் தயாரிக்கப்போகின்ற திரைப்படம் பெற்றால்தான் பிள்ளையா, அதில் நிச்சயம் நல்ல வசூல் கிடைக்கும் அதன் மூலம் அந்த தயாரிப்பாளரிடம் சொல்லி அடுத்த திரைப்பட வாய்ப்பை பெற்று தருவதாக இறுதியாக வாக்களித்தார் ராஜுவிடம் கிருஷ்ணன், ஆனால் நடந்தது என்ன, யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஆர்.ராதா அவர்கள் திரு. எம்.ஜி.ஆரை சுட்டுவிட பெற்றால்தான் பிள்ளையா திரைப்படம் நன்றாக ஓடி வசூலைக்கொடுத்தாலும் தயாரிப்பாளர் திரைப்படம் தயாரிக்கும் வாய்ப்பை அத்துடன் இழந்துவிட்டார். இதற்கிடையில் ராசு வேறு அரசுபணிகளில் சேர்ந்தார், ஆனால் ஒவ்வொரு முறை கிருஷ்ணன் ஏதோ ஒருதிரைப்படத்தை இயக்குவதை அறிந்து அந்த வேலையை நிறுத்திவிட்டு கிருஷ்ணன் இயக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார்.

மனிதர்கள் மட்டும் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தாலும் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, அரசு வேலை கிடைப்பது குதிரை கொம்பானது, சகோதரர்கள் எல்லோரும் குடும்பஸ்த்தர்களாகி விட்டனர், ராஜுவின் நிலைமையைப் கேட்கவா வேண்டும், ராசுவை நம்பி ஒரு பெண் வாழ்க்கை பட்டார், குழந்தையும் ஆனது, காப்பாற்ற இயலாமல் குடும்பத்தில் கஷ்டம், கிருஷ்ணன் என்ன செய்தார், எல்லா பொறுப்பையும் பஞ்சுவின் மேற்பார்வையில் வைத்துக் கொண்டார், கிருஷ்ணரின் குடும்பத்தினரின் பார்வையில் ராசு எடுபிடி, ராசு கிருஷ்ணருக்கு பெண்களைக் கூட கூட்டி வந்து கொடுப்பவன் என்கின்ற எண்ணம். ராஜுவும் கிருஷ்ணரும் சந்திப்பது அவரது (பஞ்சு உட்பட) குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடிப்பது இல்லை,

ஆனால் நடந்தது என்ன கிருஷ்ணன் தனக்கொரு வைப்பாட்டியை தானே தேடிக்கொண்டார், ஆனால் அவர்கள் நினைத்தது அந்த வைப்பாட்டியையும் ராஜுதான் கூட்டி வைத்தார் என்று, ஆனால் வைப்பாட்டி என்ன செய்தார் அந்த குடும்பம் ராசுவைப்பற்றி என்ன நினைக்கிறது என்பது அறியாதவர், உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு என்பதைப்போல, ராஜுவிற்கு கிருஷ்ணன் செய்யவிருந்த உதவிகளையெல்லாம் தன்வசம் திருப்பிக்கொண்டுவிட்டார், பிழைக்கத் தெரிந்த பெண். அப்போதும் ராஜுவிற்கு கிருஷ்ணரின் மீதிருந்த நம்பிக்கையும் அன்பும் எவ்விதத்திலும் குறையவே இல்லை என்பதுதான் ராஜுவின் குடும்பத்தாற்க்கு ஆச்சரியமான விஷயம், இப்படியும் ஒருவன் உலகில் இருப்பானா, என்று கேட்கின்ற அளவிற்கு உலகின் தில்லு முல்லுகளைப் பற்றி அக்கறை கொள்ளாதவராக இருந்தார் ராசு.

வாழ்க்கையில் கஷ்டங்களின் எல்லைக்கே வந்தாகிவிட்டது, இனியும் படுவதற்கும் சுமப்பதற்கும் உலகில் வேறொரு கஷ்டம் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் ராசு, அவரைப்பற்றி அறிந்தவர்கள் கூறுவது, கலைஞரை உங்களுக்கு தெரியுமே சென்று பாருங்களேன் ஏதாவது உதவி செய்வார், (சிவாஜி) கணேசனை உங்களுக்கு தெரியுமே போய் பார்க்கக் கூடாதா ஏதாவது உதவி செய்வார், இப்படி ராஜுவைப் பற்றி நன்கு அறிந்த அவரது நண்பர்களும் மற்றவர்களும் பலமுறை கூறுவதுண்டு, எத்தனையோ அன்றைய பிரபலங்களை ராஜுவிற்கு தெரிந்திருந்தும் ராசு நம்பியது இயக்குநர் கிருஷ்ணரை மட்டுமே கடைசிவரையில், வாக்குறுதி கொடுப்பவர்கள் மறந்துவிடுவது வாடிக்கைதானே, கிருஷ்ணரும் அப்படித்தானோ அல்லது அவரை சுற்றி இருந்தவர்களின் தந்திரமோ, உண்மைகள் எப்போதும் மவுனம் சாதிக்கும் அல்லவா, ஆனால் கிருஷ்ணர் கடைசிவரையில் தனது வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தன்னையே நம்பி காலமெல்லாம் காத்துக் கிடந்த ராஜுவிற்கு செய்யவேயில்லை என்பது வேதனை ஏற்ப்படுத்தும் செய்தி. ஆனால் ராஜுவின் நம்பிக்கை மட்டும் சற்றும் குறையவே இல்லை. வறுமை, வியாதி, பசி, பட்டினி, பிச்சை, குடிசை, வயோதிகம், மரணம் இவை எல்லாம் ராஜுவின் வாழ்க்கையை தலை கீழாய் மாற்றி போட்ட போதும் அந்த பாழாய்ப் போன 'நட்பு, நேர்மை, நம்பிக்கை, நண்பர்கள்' என்கின்றவைகளை ராசு கட்டிகாத்தவிதம், மதித்தவிதம் என் கண்களில் என்றும் தீராத கண்ணீரையும் மனதினில் ஆறாத் துயரத்தை கொடுத்துவிட்டது.

ராஜுவிற்கு என் சிரம் தாழ்ந்த அன்பு என் உயிருள்ளவரை என்றென்றும் உண்டு, அவரது நேர்மை பண்பு, வறுமையிலும் உதவி என்று வலியோரை நம்பி போகாமல் வறுமையைக் கூட தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எண்ணி ஏற்றுக்கொண்டு பொருமையாய் வாழ்ந்த விதம் என் நெஞ்சை விட்டு என்றும் அகலாத ரணங்கள். அன்னாரின் ஆத்மாவிற்கு என் அஞ்சலிகள் என்றும் உரித்தாகுக

208
Stories - கதைகள் / ராஜுவின் கதை
« on: March 24, 2019, 09:37:09 am »
சிறு வயது முதலே வாத்தியார் இல்லாமலேயே தனது சொந்த முயற்ச்சியில் பலவித கைவினை பொருட்களை செய்யும் ஆர்வம் மிகுந்து இருந்தது ராஜுவிற்கு, பத்து வயது சிறுவனால் இத்தனை அழகான கைவினை பொருட்களை உருவாக்க இயலுமா என்று வியக்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக கைதேர்ந்த கைவினை பொருள் உருவாக்கும் கலைஞரின் கைவண்ணம் போலிருக்கும் ராசுவினால் உருவாக்கப்பட்ட பொருட்கள். இயற்கையாகவே தாய் வழி சொத்தாக கிடைத்த பாடும் குரலும் திறமையும், இருபது வயது மதிக்கத்தக்க வாலிபப்பருவம் அடையும்போது கவிதை கதைகள் எழுதுவதிலும் அந்த திறமை வளர்ந்தது , வசதியான பெற்றோர்களை கொண்ட குடும்பச் சூழல் அடுத்த வேளைச் சோற்றிற்கு சம்பாதிக்க வேண்டுமென்கின்ற கட்டாயத்தை மறக்கச் செய்தது, கலையார்வம் துரத்தியது,

அடுத்தடுத்த தெருக்களில் வசித்து வந்த பிரபலங்கள் ராஜுவின் கலையார்வத்திற்க்கு மிகவும் உருதுணையானார்கள், அதில் ஒரு திரைப்பட பிரபலத்திடம் தினமும் சென்று தனது கலையார்வத்திற்க்கு தீனி போடும் வாய்ப்பும் கிடைத்தது, அங்கு வந்த பல பிரபலங்களின் அறிமுகமும் கிடைத்தது, ராஜுவிற்கு பணத்தின் அருமை தெரியாமல் வளர்ந்ததன் விளைவு, பிரபலங்களின் அறிமுகத்தை கொண்டு தன் கலை வாழ்க்கை உயர்வதற்கு பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் போனது, அன்றைய கால கட்டத்தில் அரசு வேலை வாய்ப்பாக இருந்தாலும் தனியார் வேலை வாய்ப்பாக இருந்தாலும் தற்காலத்தில் இருப்பது போன்று கடினமாக இருக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம், ராஜுவின் தாய் மருத்துவர், பிரபல மருத்துவர் ரங்காச்சாரியின் மாணவிகளில் ஒருவர், அவரது அப்பா தென்னக ரயில்வேயின் ஆங்கிலேய மூத்த அதிகாரி, அவரது மூத்தமகள் ராஜுவின் தாய், முதல் பெண்மருத்துவர் முத்துலெட்சுமியாம்மாவிடம் நெருங்கிய தொடர்புடையவர் என்று அடுக்கடுக்காய் பல விதங்களில் செழுமை மிக்கதொரு குடும்ப அடிப்படையின் காரணம், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

ராஜுவின் சகோதரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசுபணியில் பணியாற்றத் தொடங்கிவிட்டனர், ராஜுவிற்கு நண்பர் கூட்டம் அதிகம், ஒவ்வொருவராக வேலைக்குச் செல்ல ஆரம்பித்த போது ராஜுவின் தாயாரும் ராசுவை வேலைக்கு போகச் சொன்னபோது அப்போதைய அரசு தொலைபேசியில் வேலையில் சேர்ந்து ஒழுங்காக வேலைச் செய்ய ஆரம்பித்தார் ராசு. திரைப்படங்களில் அப்போதைய பிரபல வசன கர்த்தாவும் பாடல் ஆசிரியரும் நடிகருமான ராஜப்பா என்பவர் ராஜுவின் கலை ஆசான், அடுத்த தெருவில் வசித்த பிரபலங்களில் ஒருவர், அவரிடம் திரையுலக சம்பந்தமான பலரும் வந்து செல்வது வழக்கம், அதில் ஒருவர் இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு). ராஜப்பாவின் நண்பர், ராசப்பாவின் வீட்டில் முதன் முதலில் ராஜுவிற்கு பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படத் துவங்கியது, அதற்க்கு முன்பே திரு கிருஷ்ணன் அவர்களை சிறுவயது முதலே பார்த்து பழக்கம் இருப்பினும் அதுவரையில் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படாமலிருந்தது, திரு கிருஷ்ணன் அவர்களும் சிறுவயது முதலே அடுத்த தெருவில் வசித்து வந்தவர்.

அந்த கால கட்டத்தில் புரசைவாக்கம் பல பிரமுகர்கள் வாழுகின்ற இடமாக இருந்தது, அங்கேதான் திரு ராஜுவும் ராஜுவின் சகோதரர்களும் பிறந்து படித்து வளர்ந்தது, ராஜப்பாவின் சொந்த ஊர் தஞ்சை, ஐயங்கார் வகுப்பை சார்ந்தவர், திரையுலகில் பணிபுரிவதற்காக சேலம் கோவை போன்ற நகரங்களில் இருந்த பட்சிராஜா பிலிம்ஸ் பணி புரியத் துவங்கிய போது அறிமுகமானவர்களில் திரு கிருஷ்ணனும் ராஜப்பாவும் இன்னும் பல அன்றைய திரையுலக ஜாம்பவான்களும் உண்டு பிறகு சென்னைக்கு திரைப்பட நிறுவனங்கள் ஸ்தாபிக்கபட்ட போது ராஜப்பா புரசைவாக்கத்தில் வந்து குடியேறியதாக கூறப்பட்டது.

திரு சிவாஜிகணேசன் நடித்த பராசக்திக்கு முன்னர் பல திரைப்படங்களை திரு ஏ.வி.எம். தயாரித்தபோது அங்கே எடிட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த திரு பஞ்சு அவர்களின் நட்பு திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் மூலம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது, இருவரும் ஒரே brand என்பதால் கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் தீர்ந்து போனபோது அருகில் சிகரெட் வாங்குவதற்கு வேலையை விட்டு விட்டு பாதியில் வெளியே சென்று வாங்க இயலாமல் போனதால் அதே brand சிகரெட் திரு பஞ்சு அவர்களும் பிடிக்கும் வழக்கம் இருந்ததாகவும் சிகரெட் கொடுத்ததிலிருந்து நட்பும் தொடர்ந்தது அந்நட்பு தொழிலிலும் தொடர்ந்து பின்னர் இருவரும் உறவினர்களாகியும் விட்டனர். திரு கிருஷ்ணனிடம் நண்பராகவும் தொழிலில் உதவியாகவும் திரு ராசு இணைத்துக் கொள்ளபட்டார். இதனால் அரசு வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஆத்திலே ஒரு கால் சேத்திலே ஒரு கால் என்பது போல காலம் கடந்தது, ராஜுவின் பெற்றோரின் வசதி காரணமாக துவக்க காலங்களில் வாயிற்று பிழைப்பை பற்றிய அக்கறை இருக்கவில்லை ராஜுவின் தாய் அவரது ஐம்பத்து இரண்டாவது வயதிலேயே மரணமடையும் சூழல் உருவானது அதற்க்குக் காரணம் ராஜுவின் மூத்த சகோதரர் இளம் வயதிலேயே திடீரென்று டைபாய்டு (அப்போதெல்லாம் டைபாய்டு நோய்க்கு சரியான மருந்துகள் கிடையாது) ஜுரத்தால் பாதிக்கப்பட்டு இருபது நாட்களிலேயே காலமானதால் அந்த துயரை தாங்கிக்கொள்ள இயலாமல் ராஜுவின் அம்மா குறைந்த வயதிலேயே இறந்து போக நேரிட்டதால் குடும்பத்தில் இருந்த மற்ற அனைவரின் வாழ்க்கையும் கேள்விக் குறியானது. சொத்துக்களை ஏமாற்றி பலர் எடுத்துகொண்டனர், ராஜுவின் அப்பா 'அவளே போய்ட்டா இனிமேல் எனக்கு சொத்து எதுக்குன்னு' சொல்லி உயிருடன் இருந்த மற்ற பிள்ளைகளைப் பற்றி யோசிக்காமலேயே குடும்பம் நசிந்துபோனது

209
Stories - கதைகள் / சொல்லாமலே
« on: March 24, 2019, 09:33:22 am »
அன்னம் ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி ஆப்பரேட்டராகப் பணியாற்றி வந்தாள். அவளுடைய அப்பா பாண்டியன் ஒரு வழக்குரைஞரிடம் கணக்கராக வேலை செய்து வந்தார். அவளுடைய அண்ணன் மாணிக்கம் அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவளுடைய அம்மா இலட்சுமி வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தாள்.
 
அன்னம் தன்னுடைய வேலையைச் செம்மையாகச் செய்வதில் திறமைமிக்கவளாய்த் திகழ்ந்தாள். அந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இன்று புதிய நிர்வாக அதிகாரி திடீரென்று வருவதாகச் சொல்லியிருந்தார்கள். அன்று தன் இருக்கையில் அமர்ந்து தன்னுடைய வேலையைத் தொடங்கினாள்.
 
அப்பொழுது பியூன் மணி அவளிடம் வந்து, எம்.டி. உங்களைக் கூப்பிடுகிறார் என்றான்.
 
எதற்கு என்றதும், எனக்கென்ன தெரியும்! என்றான்.
 
மேனேஜர் இராமுவைத்தானே கூப்பிடுவார்!என்று அன்னம் தயங்கிக் கூறியதும், அவர் இன்று லீவு என்றான்.
 
அப்படியா!.... இதோ வர்றேன் என்று சொன்ன அன்னம் எம்.டி. அறைக்குச் சென்றாள்.
 
வணக்கம் சார்.
 
அவளை ஒரு ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, வணக்கம் என்றார்.
 
உட்காருங்க... இந்த பைலில் உள்ள கடிதங்கள் அனைத்திலும் ஒவ்வொரு பிரதி எடுத்து வாருங்கள்.
 
சரி சார்... இப்பவே கொண்டு வருகிறேன் என்றாள்.
 
செல்லதுரை அவளின் அழகை ரசித்தான். அடுத்த சிறிது நேரத்தில் அவளிடம் கொடுத்த வேலையை முடித்துக் கொண்டு வந்தாள்.
 
வெரிகுட்.... சீக்கிரம் வேலையை முடித்துவிட்டீர்களே அன்னம் என்றதும் அன்னம் ஒரு புன்னகையை உதிர்த்தாள்.
 
தன்னுடைய இருக்கைக்கு வந்த அன்னம் புது எம்.டி. பரவாயில்லையே, பாராட்டெல்லாம் சொல்லுகிறாரே... என்று நினைத்தாள். மறுநாள் அலுவலகத்திற்கு வந்ததும், செல்லதுரை அன்னத்தை அழைத்து இந்த வேலையை முடித்துவிட்டு வாருங்கள் என்றார். அவளும் கொடுத்த வேலைகளை உடனுக்குடன் முடித்துக் கொடுத்ததனால் அன்னத்தின் மீது செல்லதுரைக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.
 
ஒரு நாள் கடைவீதியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் அன்னம். அந்தப் பக்கம் மகிழுந்தில் வந்த   செல்லதுரை அன்னத்தின் அருகில் மகிழுந்தை நிறுத்தி, எங்கே இந்தப் பக்கம் என்றார்.
 
வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்க வந்தேன் என்றாள்.
 
நல்லது. வீடு எங்கிருக்கிறது? காரில் ஏறுங்கள்.... நான் கொண்டு வந்து விடுகிறேன் என்றார் செல்லதுரை.
 
தேங்க்ஸ்! சில சாமான்கள் இன்னும் வாங்க வேண்டும் என்ற பதிலைக் கேட்ட செல்லதுரைக்கு, அவள் காரில் வராதது ஏமாற்றமாக இருந்தாலும், காரில் வரமாட்டேன் என்று சொல்லாமல் நாசூக்காகத் தவிர்த்தது மிகவும் பிடித்திருந்தது. மேலும், யாரிடமும் அதிகமாகப் பேசாத தன்மை, வேலையில் காட்டும் வேகம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட செல்லதுரை அன்றுமுதல் அன்னத்தைக் காதலிக்க ஆரம்பித்தார். தன்னுடைய காதலை அவளிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தார். இப்படியே ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. பின் ஒரு சமயத்தில் அவளிடம் தன்னுடைய காதலைக் கூறினார்.
 
அன்னம் சிரித்துக் கொண்டே, தனக்குத் திருமணம் ஆகிவிட்டது எனச் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு உடனே நகர்ந்தாள்.
 
செல்லதுரைக்கு வியப்பாக இருந்தது. திருமணம் ஆனதற்கான அடையாளங்களான கழுத்தில் தாலியோ, காலில் மெட்டியோ காணப்படவில்லை.
 
உடனே அவளிடம் கேட்க நினைத்தபோது அவள் அலுவலகத்தைவிட்டுப் போய்விட்டதாக பியூன் கூறினான். அன்று இரவு முழுவதும் செல்லதுரைக்குத் தூக்கமே வரவில்லை. அன்னத்தின் கணவன் எங்கே? அவள் வாழ்க்கை என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ள மறுநாள் மாலை அன்னத்தின் வீட்டிற்குச் சென்றான்.
 
அன்னத்தின் அப்பா, அம்மா,  அண்ணன் ஆகிய அனைவரும் வீட்டில் இருந்தனர்.  அன்னத்தின் அம்மா, இந்தாங்க அய்யா... பலகாரம் சாப்பிடுங்க என்று கூறி தட்டில் பலகாரமும், குடிக்க டீயும் வைத்தாள். செல்லதுரை டீயை அருந்திவிட்டு, தயங்கியபடி, அன்னத்தின் திருமணம்.... என்று இழுத்தான். அவளின் அண்ணன் மாணிக்கம், எல்லாம் முடிந்துவிட்டது.... என்று சோகத்துடன் கூறினார். இலட்சுமி, அது ஒரு பெரிய கதை... என்று கூறித் தொடர்ந்தாள். அவளுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடத்திலே விவாகரத்து ஆகிவிட்டது.
 
அவ காதல் கலியாணம் செஞ்சுக்கிட்டா. இப்ப துன்பத்தை அனுபவிக்கிறா... என்றார் மாணிக்கம் வெறுப்புடன்.
 
அதிலென்ன தவறு....
 
அவன் பணத்தாசை பிடித்தவன். எங்கள் யாருக்கும் அவனைப் பிடிக்கவில்லை. அன்னம்தான் விரும்பித் திருமணம் செய்து கொண்டாள். கல்யாணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது அவனுடைய சுயரூபம். அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ஆனால், திருமணம் ஆகாமல் இருந்தால் மட்டுமே அந்த வேலை கிடைக்கும். மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் என்று கூறப்பட்டதால் அவனுக்குக் கட்டினவளைவிட பணம்தான் பெரிசுன்னுட்டான். வெளிநாடும் போயிட்டான். இவளையும் கைகழுவிட்டான். அவன் வேலைக்குப் போகும் கம்பெனியின் விலாசமும் தெரியாது. தெரிஞ்சிருந்தா ஏதாவது செஞ்சிருக்கலாம்.
 
எல்லாவற்றையும் கேட்ட செல்லதுரையின் மனதில் ஓர் இறுக்கம் ஏற்பட்டது. தான் காதலித்த அன்னத்திற்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.
 
இவ்வளவு நடந்துவிட்டதா! சரி... நடந்தது நடந்துவிட்டது. நான் ஒன்று சொல்றேன். அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்றார்.
 
சொல்லுங்கள் என்றார் மாணிக்கம்.
 
எனக்கு அன்னத்தை ரொம்பப் பிடிச்சிருக்கு. அவளுடைய கடந்தகால வாழ்க்கையினைப் பற்றிக் கவலையில்லை என்றார்.
 
அன்னத்தின் குடும்பத்தாருக்கு முதலில் தயக்கம் இருந்தாலும் செல்லதுரையின் நன்னடத்தையைப் பற்றி அன்னம் கூறியிருந்ததாலும் அன்னத்திற்கு ஒரு வாழ்க்கை கிடைக்கட்டும் என்று எண்ணிச் சம்மதித்தனர். என்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார் செல்லதுரை.
 
மறுமணம் வேண்டாம் என்று எண்ணியிருந்தாள் அன்னம். ஆனால் செல்லதுரையின் பழக்கவழக்கங்கள், மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை  அவளுக்குப் பிடித்துப்போனதால் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். மறுநாள் அலுவலகத்திற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் புதுப்பொலிவுடன் வந்தாள். அலுவலகத்தில் இதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. ஆனால், அன்று காலை செல்லதுரை அலவலகத்திற்கு வரவில்லை. அன்னம் அவர் ஏன் வரவில்லை என யோசித்தாள்.
 
திருமணத் தேதியுடன் வருவாரென்று அனைவரும் பேசிக் கொண்டனர். அன்று மதியம் செல்லதுரை வந்தார். ஒருவரையும் அழைத்து எந்தப் பணியும் கொடுக்கவில்லை. என்ன ஆயிற்று இவருக்கு என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான் பியூன் மணி. பிற்பகல்  மூன்று மணி சுமாருக்கு எம்.டி. அழைப்பதாகக் கூறினான் மணி. அன்னத்தின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்றிருந்தது. ஒரு பூங்காவின் பெயரைச் சொல்லி மாலை அலுவலகம் முடிந்தவுடன் அங்கு வருமாறு கூறிவிட்டு உடனே புறப்பட்டுவிட்டான்.
 
மாலை அய்ந்து மணி எப்போது வரும் என்று காத்திருந்த அன்னம், திருமணத்திற்கு என்ன என்ன பொருட்கள் வாங்கலாம், எப்படித் திருமணத்தை நடத்தலாம் என்று கேட்பார் என நினைத்தாள். அதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டும் சென்றாள்.
 
அந்தப் பூங்காவில் புல்தரையில் இருவரும் அமர்ந்திருந்தனர். யார் முதலில் பேசுவது என்ற மனநிலையில் இருவரும் இருந்தனர். ஆனால் செல்லதுரையின் முகம் வாட்டத்துடன் இருப்பதை அறிந்த அன்னம், ஏன் உங்கள் வீட்டில் என்ன சொன்னார்கள்? என்று வினவினாள்.
 
செல்லதுரை ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவனாய், அவர்களிடம் என் விருப்பத்தைக் கூறினேன்.... சரி என்று கூறிவிட்டார்கள்... ஆனால்!....
என்ன ஆனா?
 
அவர்களுக்கு ஒரே ஒரு ஆசை.
 
என்ன அது?
 
நீ எங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என்பது என்றதும், அன்னம் கோபத்துடன் செல்லதுரையைப் பார்த்தாள்.
 
அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?
 
நான் உன்னிடம் பேசிப் பார்க்கிறேன் என்றேன்.
 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 
அவர்கள் சொன்னபடி நீ எங்கள் மதத்திற்கு மாறிவிடு.
 
பணத்தாசை பிடித்தவரைக்கூட மன்னித்துவிடலாம். மதவெறி பிடித்தவரை நினைத்துப் பார்க்கவும் கூசிப் போனாள் அன்னம். உடனே அன்னம் தன் கைப்பையில் வைத்திருந்த டைரியிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து ஏதோ எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தாள். அந்தக் காகிதத்தில் எழுதியிருப்பதைப் படித்தார் செல்லதுரை. அதில்,
 
பெண்கள் கூண்டுக்கிளிகள் அல்லர் -     தந்தை பெரியார்.
 
இதுவே என் கருத்து என்று எழுதப்பட்டிருந்தது.

210
Admin Announcements / Re: Why No Specific Chat rules in GTC Chat ?
« on: March 23, 2019, 09:08:41 pm »
Athai thane naanum kekurom.. WHY??  :o ;D

Pages: 1 ... 12 13 [14] 15 16