1300
« on: July 22, 2022, 12:50:13 am »
என் தாய்மொழி
தங்க தமிழே தரணி புகழ் செம்மொழியே
தென்றல் தேரேற்றி உன்னை அழைத்து வரும்
தேவர் குலம் சேர்ந்து வந்து வாழ்த்துரைக்கும்
மின்னல் அழகே மிளிர்கின்ற மென்தமிழே
கன்னல் கரும்பாய் காதி்ல் இனிக்கின்ற
கவிதை பல கோடி தந்தாய் வாழ்த்து
தங்க தமிழே தரணி புகழ் செம்மொழியே
கவி சொல்லும் அரங்கில் நிறைவாய்
கற்றோர் கைகளிலே என்றும் தவழ்வாய்
பண்ணிசையாய் நெஞ்சம் குழைப்பாய்
பாமர மக்கள் பாடும் நல்லிசையாய் நிறைவாய்
மேகலையாய் சிலம்பாய் அணிசெய்தாய்
திருக்குறளாய் திகழ்ந்தாய் தித்திக்கும் தேவாரமாகி
எத்திக்கும் ஒலித்தாய் செந்தமிழே இன்று கணனி ஏறி
கலக்குகின்ற மின்தமிழே என்தமிழே
என்றும் மாறா இளமை பூண்டு
கவிஞர் வார்த்ததையிலே நின்று வளர்.