Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1] 2 3
Post info No. of Likes
Re: NILA HERE HI NillA  Siss❣Warm Welcome  To GTC FORUM 😊

NICE INTRO SISS👌Unge Nick Poleve Unge Intro Also Alaga
Iruku..NICE TO MEET YOU SISS💐

March 17, 2023, 12:04:13 pm
1
Re: NILA HERE HI NILLA MA,

VERY CUTE INTRO. WELCOME TO OUR GLOBAL TAMIL CHAT.


March 20, 2023, 02:22:34 pm
1
Re: NILA HERE Welcome to GTC ❤️
April 02, 2023, 01:20:31 am
1
Re: NILA HERE Nilaa chella kutty wc wc semma intro da :-* :-*
April 16, 2023, 09:44:14 pm
1
Re: கவிதையும் கானமும்-022 மே தினக் கவிதை!!

உழைப்பினால்,
வியர்வையை தந்து,
உழைப்பின்
அயர்வினால்
உடல்நொந்து,
உலகிற்கு
உயர்வு தரும்
உந்து சக்தியான,
தொழிலாளிகளுக்கு
மே தின வாழ்த்துக்கள்!!

முதல் போட்டவன்
அல்ல முதலாளி!
தன் முதுகெலும்பை
முதலாகக் கொண்டு,
லாபத்தில்,
முதலாளியை
முதல் ஆளாக,
கொண்டு வரும்
தொழிலாளியே,
முதலாளி!!

மே தினம் தந்தது,
பணி நேரத்தை "எட்டாகவும்"
மிகை நேரத்தை "துட்டாகவும்"!!

மே தினம் தந்தது
முதலாளிகளுக்கு "கொட்டும்"
தொழிலாளிகளுக்கு "லட்டும்"!!

முதலாளி,
தொழிலாளிகளை
ஒப்பிட்டான்,
"பிணத்தோடு"!
அந்த எண்ணம்
ஒழிந்தது
மே "தினத்தோடு"!!

பலரின் தியாகத்தால்,
பணி நேரம்
பதினாறிலிருந்து
"எட்டானது"!
அன்று முதல்
தொழிலாளிகளுக்கு
இயந்திர சத்தம்
கூட "மெட்டானது"!!

நமக்கு
நலன் கிடைக்குமா
என்று
தொழிலாளிகள்
இருந்தனர்
"தாகத்தால்"!
அவர்களின்
தாகம் தீர்ந்தது
மே மாத
"மேகத்தால்"!!

மே தினம்
மா தினமாக மாற
தேவைப்பட்டது,
பலரின் "சத்தங்களும்"
பலரின் "ரத்தங்களும்"!!

இந்த உலகத்தை
ஆள நினைத்த,
முதலாளிகள் என்னும்
பாவிகளால்தான்,
இந்த உலகத்தை
விட்டு
தொழிலாளிகளின்
ஆவிகள் போனது!
ஆயினும்
அந்த "ஆவிகள்" தான்
மே தினத்தை
திறக்க
"சாவிகள்" ஆனது!!

"நெற் கதிர்களும்"
"சூரிய கதிர்களும்",
தலை நிமிர்ந்து
தலை சாயும் வரை,
தலை சாயாமல்
உழைக்கும்
உலகின் தலை
விவசாயி!!

"உளி" கொண்டு,
உளியின் "ஒலி" கொண்டு,
கை "வலி" கண்டு,
கல்லை கடவுளாக்கி
கருவறைக்குள்,
கொண்டு செல்பவரே
"சிற்பி"!
அவரை நீ "சிறப்பி"!!

நாம்,
துப்பியதையும்
துடைக்கும்
துப்புரவாளர்கள்,
"துப்புரவாளர்கள்" அல்ல!
அசுத்தத்தை கண்டு
பிடித்து அழிக்கும்
"துப்பறிவாளர்கள்"!!

பட்டு பூச்சியின்
நூல் கொண்டு,
நம்மை  ஆடை
கொண்ட
பட்டாம் பூச்சியாய்
மாற்றும்
"நெசவாளி"!
உழைப்பில்
"நிறை வாளி"!!

"வலைகளை"
கொண்டு,
"அலைகளையும்",
புயல் "மழைகளையும்"
மேற்கொண்டு,
நாம் நாவாற
சுவைக்க,
இறா
சுறா
விரா
தந்து,
தன் கரத்தால்
சாகரத்தை
ஆளும் மா வரம்
மீனவன்!!

நாம்,
காலம் ஆகாத படி
காலனும் சிறிது
கருணை காட்டுகிறான்,
மருத்துவர்களின்,
காலம் கருதா
உழைப்பை பார்த்து!
மருத்துவர்களின்,
ஞானத்தினால் தான்
இந்த ஞாலம்
உயிர் பெறுகிறது!!

"விழா" நாட்களில்
கூட ஊருக்குள்
"உலா" வந்து,
நம் குடும்ப மகிழ்ச்சிக்கு,
தன் குடும்ப
மகிழ்ச்சியை,
காவு கொடுக்கும்
"காவலாளிகள்",
நம்மை காக்க
இறைவன்
அனுப்பிய
"ஏவலாளிகள்"!!

குடும்ப வாசத்தை
விட்டு,
தேசத்தின் மீது
"பாசமும்",
"விசுவாசமும்"
கொண்டு,
உறை பனியிலும்
உறங்காமல் பணி செய்து,
நாம் நிம்மதியாக
உறங்க
பாயாக இருக்கிறார்கள்
சிப்பாய்கள்!!

உழைப்புக்கு இல்லை,
"மதமும்
மாதமும்"!!

உழைப்பை நேசித்து,

அறிவால் வாழ்வோம்
"சிங்காரவேலர்களாய்"!

அகிலத்தில் வாழ்வோம்
"சிங்கார
தொழிலாளர்களாய்"!!

வாழ்த்துக்களுடன்
சிற்பி

April 25, 2023, 11:09:27 am
1
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12


Dear Friends,

GTC FM has decided to broadcast songs handpicked by GTC Users , So that users get a chance to share their taste of music with listeners....We name the this event as "Nenjil Nindra Raagangal"

Let music bind us further in our journey of friendship.

------------------------------------------------------------------

HOW TO PARTICIPATE?
To decide the slot order that will be telecast, the interested users may find a place by typing "My Place"  in the Nenjil Nindra Raagangal Thread.

HOW MANY SONG YOU CAN REQUEST?
Maximum of 12 Songs.

IN WHICH ORDER SONG REQUESTS WILL BE PLAYED?
The slots will be arranged based on first come first serve basis & Each Day only one user's  songs will be played in GTC Fm.


While Posting in NNR  Please remember that you can post in days from MONDAY to FRIDAY ( Please do not enroll dates in SAT & SUN as we have weekly programs on these days)

July 02, 2023, 02:12:44 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12 My place was July 11
July 05, 2023, 04:34:41 pm
1
Re: கவிதையும் கானமும்-028 நெடுந்தூர பயணம் என்னவனோடு....

வாழ்க்கை என்னும்
இலக்கில்லா பயணத்தில்
இலக்கை எட்ட
சில வரைவுகளால் வரையப்பட்ட
ஓர் காதல் பயணம்...

தொலைதூர பயணத்தில்
என் காதலோடு தொலைகிறேன் நான்.........
தீரா காதலோடும்,
என் மன முழுதும் தித்திப்பிலும்
பயணிக்கிறேன் நான்.......

ஏனோ !!
அவனோடு இருக்கும் தருணம்,
அகிலத்தில் நிசப்தம் காண்கிறேன்....
ஆரவாரம் செய்யாமல்
மனதுக்குள் சதிர் ஒன்றை எண்ணுகிறேன்...

அவனோடு இருக்கும் தருணம்,
புது உலகம் ஒன்றையும்,
புதுமை அனுபவத்திலும்,
வானம் வசப்பட்டு மும்மாரி கொண்டு
வாழ்த்துரைப்பையும் உணர்கிறேன் நான்......

அவனோடு இருக்கும் தருணம்,
இளங்காற்று வீசும் திசையில்
அசையும் சாலை ஓர மரங்கள்
ஏதேதோ ஒரு சல சலப்பு சஞ்சரிக்கிறது...
இதில், குயில்களும் குருவிகளும்
புதியதாய் இந்த காதல் பயணத்துக்கு
இசை மீட்டுகிறது...

தென்றலின் மெய் தீண்டலில்  ..
இதயத்தில் ஓர் இணக்கம் ஒன்றை ஏற்படுத்துகிறது....

என்னவனோடு,
நீண்ட தூர பயணத்தை
இனிமையாய் நீளச் செய்கிறது.....


July 24, 2023, 02:17:24 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#038   Hi.. You guy's doing great aNd  keep Rocking....
       
       ... SM TEAM HOPE YOU GUYS ALL GOOD.....

என் பாடல் :பறவையே எங்கு  இருக்கிறாய்

திரைப்படம்  : தமிழ் எம்.ஏ.

இசை : இளையராஜா

எனக்கு பிடித்த வரிகள் :

    நீ போட்ட கடிதத்தின்
வரிகள் கடலாக அதில்
மிதந்தேனே பெண்ணே
நானும் படகாக

   பறவையே எங்கு
இருக்கிறாய் பறக்கவே
என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்
அன்பே....

    INtha soNg for my aNgel (Devathai) PoNdati
 DediCate paNra

 "eN vazhkai il eNaku oru peNNidam iruNthu vaNtha muthal kaditham athu ❤️ kadhal kaditham ❤️ vazhkai La maraka mudiyatha surprise Gifts oda vaNtha kaditham athu,, aNtha kaditham eNNidam vaNthu adaiNtha piNbu  avaludan call  pesi koNdu kaditham padika arambitheN ♥️aval ketathum vetkathil mouNam agi vittal..., Padika padika maNathukkul oru vithamaNa Jill EnkiNdra ❤️  Feel first time solla mateN eNeNdral Aval udaN pesum pothu varukiNdra Feel..., Adutha siru ♥️ osai elupum kaditham oNdru kaga kaathu kondu irukum uN aNbu Mama.., ♥️ kadhal kaditham epoluthum thaNi sugam thara kudiya Alagiya NiNaivugal eNdrum uN NiNaivil.♥️ Romba Romba Nu sona avaluku pudikum so iNtha varthai marakama soluviNga Nu NambureN....

                             .......    ThaNk you.  ....
                                                              By   
                                                                                 ...  chaaN...
                           

August 20, 2023, 10:14:25 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#038 படம்- வனமகன்
பாடல் - சிலு சிலு வென பூங்காற்று
இசை - Harris Jeyaraj
பாடியவர்கள் - விஜய் யேசுதாஸ்

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா

மேல் கீழாக அருவி எல்லாம்
இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லு செல்லக்கண்ணம்மா

"அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம் நிழையோடுதே
வெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா
மேலே கிடையாதும்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா

முட்கள் கிழிந்தாலுமே மொத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே
தெய்வம்கூட இங்கே பசியாறுமே
இது நாம்தானடி மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி

[u]பிடித்த வரிகள் :[/u]

"அன்பின் நிழல் வீசுதே ..
இன்பம் விளையாடுதே..
பாறைக்குள்ளும் பாசம் நிழையோடுதே..
வெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே..
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே..
சொர்க்கம் இதுதானம்மா

மேலே கிடையாதும்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா""


யாருக்கு dedicate செய்வது..

" இந்த இரண்டு சரணங்களிலும் இயற்கை அன்னையின் நவரசங்கள் கொட்டி கிடக்கின்றன..

கண்களை மூடிக்கொண்டு இந்த பாடல் ரசிக்கும் பொழுது மலைச்சாரல், காடுகள், அருவிகள் என என்னை அறியாமல் என் மனம் இயற்கையோடு ஒட்டிக்கொள்ளும்..

யாருக்கு சமர்ப்பிப்பது என்பதை விட எதற்காக சமர்ப்பிக்கிறோம் என்பது இனிதானது.. இப்பாடல் எனக்கும் என்னைப்போல் இயற்கை விரும்பிக்கும் சமர்ப்பணம்..

இக்குழந்தைக்கு இயற்கையின் தாலாட்டு...

August 20, 2023, 10:15:09 pm
1