Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Donmama

Pages: [1]
1
Birthday Wishes / Re: Happy Birthday Limat
« on: September 26, 2023, 10:03:50 am »
இந்த நாள் இப்பெயரால் (limat) தமிழ் என்பதை பின்னோக்கி வந்த இந்த Tamil க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. உங்கள் கவிதை போல, உங்கள் காதலை போல, உங்கள் இந்த பிறந்தநாளும் வசந்தமாய் மலர வாழ்த்துக்கள்..

3
Last time melody potom , intha time jollya dance vibes la song poduvom ,
Movie - ninaithaley inikum-
Song - Banaras pattu katti
Music - Vijay Antony
Favourite lines nu yethum ila, intha song ketutu long drive pogum pothu oru dancing vibes varum, ellam jolly a dance Ada intha song ,, and intha song seventh place la podanum nu virumbi ketukolgiren.. dedicate to all gtc friends

4
"சிப்பாயே சிப்பாயே
சிறு காதலில் சிதைந்தாயே..
சிங்கத்தின் சீற்றம் நீயே
சிலந்தி வலையில் விழுந்தாயே..

வந்தாளே வருவாளே,
வாகை சூடி ஏற்பாளே,
வான் வீசும் அம்பு அவள்
வலைத்து உன்னை எய்ப்பாளே..

உன் பேனாக்கள் அவள் கண் பட்டு
கண் மையாய் மாறிடும்.
உன் கைவிலங்கு அவள் கைப்பட்டு
கைக்குட்டை ஆகிவிடும்.

போர்வீரன் இவன் தானே,
போராடி வெல்வானே,
போர் சூழ்ந்து வெல்லும் அவன்,
போர்வையிலே தோற்பானே..

முடி சூடும் மன்னனே,
முகத்தில் வெட்கமென்ன?
வாள் வீசும் வானவனே
வானவில் ரசிப்பதென்ன?

ஆண்மகனே ஆண்மகனே,
ஆயிரத்தில் ஓர் மகனே,
அகிலம் காக்கும் கருவி நீயே,
அவள் அன்பில் அருவி ஆவாயே..

களம் கொண்ட காளையனுக்கு,
காதல் மலர்ந்தென்ன?
சினம் கொண்ட சிறுத்தைக்கு
சிறகுகள் முளைத்தென்ன?

தளபதியே தளபதியே
தமிழ் காக்க தலைத்தவனே,
தளம் கண்ட தலைவன் நீயே,
தலை கோத மடி சாய்ந்தாயே..

முப்படை நாயகனுக்கு,
முத்தத்தில் வீரமென்ன?
இப்படைகள் தோற்றாலும்
இதயத்தில் இன்பமென்ன
?"""

5
          நட்புக்கு ஒரு இலக்கணம்


தோழா எதற்கும் கலங்காதே..
தோழி இருக்கிறேன் மறவாதே..
தோளில் நீயும் சாய்ந்து கொண்டால்
தோல்விகள் உன்னை துரத்தாதே!!

தடைகள் சில இங்கு சார்ந்து வரும்..
தவிப்புகள் பல இங்கு கடந்துவிடும்..
தேனீக்கள் கட்டிய கூட்டு வீடு இது..
தேள் வந்து குடியேறும் மறவாதே..

வந்தது எதுவும் வாய்ப்பதில்லை..
தந்தது எதுவும் தர்மம் இல்லை..
வழியின் வழியில் வலி இருந்தால்..
வசந்தங்கள் வசப்படும் மறவாதே...

சிலந்தியின் வலையினை பார் தோழா...
சிரமங்கள் இருக்கும் தெரியாதா?
சிரமம் என்று நினைத்திருந்தால்
சிகரத்தை தொட வழி அறியாதா?

கடல் அலை வருவதை பார் தோழா..
கடந்து வந்து கரை தொடும் தெரியாதா?
கல்லறையில் பூக்கும் பூவூக்கும்,
கார்மேகம் மழை தந்தால் மலராதா?

நினைத்தால் நினைவுகள் வலி தோழா...
நினைவலைக்கு கரை இங்கு  கிடையாதா?
நிழலும் தனியே நிற்பதினால்
நின்ற இடம் அது மறவாதா?..

ஒருநாள் உனக்கு வரும் தோழா..
ஒவ்வொரு வரமும் உன் வசம் தோழா..
கண்ணுக்கும் கனவுக்கும் தூரம் என்றால்..
கனவுகள் இங்கு பூக்காதா??

சோகங்கள் என்று நினைத்திருந்தால்,.
சோலை கதிர்கள் இங்கு விளைவதில்லை..
சொந்தங்கள் எல்லாம் சொர்க்கம் என்றால் ..
பந்தங்கள் இங்கு பாரமில்லை..

இழப்புகள் எல்லாம் நிரந்திரமில்லை..
இழப்போம் என்று தெரிவதில்லை..
இன்னிசை பாடிடும் கானகுயில் ஒன்றும்..
இதுதான் இசை என்று அறிவதில்லை..

துன்பத்திற்கு துணை உண்டு என் தோழா..
துவண்டு நீ கிடந்தால் துளிர்க்காதா?
துடுப்புகள் எல்லாம் பாரம் என்றால்..
தடுப்புகள் தாண்டி படகு கரை அடையாதா?..

தடுமாறும் மனம் இங்கு ஏன் தோழா..
தட்டிக்கொடுப்பேன் நான் இங்கு வா தோழா..
தவழும் பிள்ளை நீ எனக்கு,
தவறிட வழி இல்லை புரியாதா?

உயிர் தந்த உறவிது நம் நட்பு தோழா..
நீ உடைந்தால் உயிர் விடுவேன் நான் தோழா..
உனக்காக யார் என்று கலங்காதே...
உள்ளங்கையில் உன் உலகம் நான் ,
என்றும் மறவாதே..

சுமை என்றால் சுகமில்லை என் தோழா..
சுழலும் உலகினில் நாம் தோழா..
வார்த்தைகள் எல்லாம் வாழ்த்துக்கள் ஆக,.
வாழ்வோம் இந்நாள் வா தோழா!!!






















6
படம்- வனமகன்
பாடல் - சிலு சிலு வென பூங்காற்று
இசை - Harris Jeyaraj
பாடியவர்கள் - விஜய் யேசுதாஸ்

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா

மேல் கீழாக அருவி எல்லாம்
இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லு செல்லக்கண்ணம்மா

"அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம் நிழையோடுதே
வெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா
மேலே கிடையாதும்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா

முட்கள் கிழிந்தாலுமே மொத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே
தெய்வம்கூட இங்கே பசியாறுமே
இது நாம்தானடி மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி

[u]பிடித்த வரிகள் :[/u]

"அன்பின் நிழல் வீசுதே ..
இன்பம் விளையாடுதே..
பாறைக்குள்ளும் பாசம் நிழையோடுதே..
வெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே..
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே..
சொர்க்கம் இதுதானம்மா

மேலே கிடையாதும்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா""


யாருக்கு dedicate செய்வது..

" இந்த இரண்டு சரணங்களிலும் இயற்கை அன்னையின் நவரசங்கள் கொட்டி கிடக்கின்றன..

கண்களை மூடிக்கொண்டு இந்த பாடல் ரசிக்கும் பொழுது மலைச்சாரல், காடுகள், அருவிகள் என என்னை அறியாமல் என் மனம் இயற்கையோடு ஒட்டிக்கொள்ளும்..

யாருக்கு சமர்ப்பிப்பது என்பதை விட எதற்காக சமர்ப்பிக்கிறோம் என்பது இனிதானது.. இப்பாடல் எனக்கும் என்னைப்போல் இயற்கை விரும்பிக்கும் சமர்ப்பணம்..

இக்குழந்தைக்கு இயற்கையின் தாலாட்டு...

8
 மழையும் மனமும் நனைந்ததே...

சின்னஞ் சிறு கிளிகளே...
சீக்கிரமாய் சிலிர்த்துக்கொண்டு வாருங்களேன்..
சின்ன சின்ன மேகங்கள் சேருது இங்கு பாருங்களேன்..
சின்னதாய் வெட்கத்தில் மறையுது கேளுங்களேன்..

எண்ணத்தில் உள்ளதெல்லாம்
எழுந்து நின்று தூருது பாருங்களேன்...
எட்டுத்திக்கும் இடி இசை
இசைக்குது ஆடுங்களேன்..

பட்டமரம்  பூ பூக்குதம்மா..
பட்டு பூச்சி கண்சைத்து கவிபாடுதம்மா..
பச்சை வயல் பசி போக்க கொண்டாடுதம்மா..

செங்கதிர் சோலை எல்லாம்..
செவ்விதழ்கள் திறந்திட காணுதம்மா..
செம்மலை மேகம் எல்லாம்
செல்லத்தான் மறந்து இங்கு    வாழுதம்மா...

 தெம்மாங்கு பாடி வரும் ..
 தென் மேற்கு பருவமழை தெகட்டாமல் கொட்டிவிடும்..
  தென்றல் காற்று
  தேனிசை ஒன்றை இசைத்து இயங்குதம்மா..
 தேகம் எங்கும் திகட்டாத காதல் வந்ததம்மா..

 துளி துளி மழைத்துளிகள்..
 துளிர் விட்டு சென்றதம்மா..
 தூது நிலா
 துவண்டு போய் மீண்டும் வந்ததம்மா..

  என்னுள் ஆசையெல்லாம்..
  சாரலாய் சரிந்து துதி பாடிடுமா?
  தூரலாய் துணை இன்றி  வாழ்ந்திடுமா?
 
   மழை வந்தால் மனமெல்லாம்
   கவலை விட்டு தண்ணீரில் ஆடுதம்மா..
   கண்ணீரும் இங்கு கலந்துதான் ஓடுதம்மா?

Pages: [1]