100
« Last post by Shree on March 20, 2024, 09:04:16 pm »
உனதருகில் நான்...
ஒவ்வொரு நிமிடத்தின் ஆழங்கள்
சற்று கடினமாக கடக்க நேர்ந்தாலும்
என்னில் இருக்கும் எண்ணில்லா உணர்வை
ஏனோ! வெளிப்படுத்த வெய்த்தது நீயே....
எவற்றை இழந்த பொழுதும்
எனக்காய் என்று என்னோடு இன்றும்
உறவாடும், உன் எண்ணத்தின் மதிப்பு
உன்னோடு இருக்கும் என் சிரிப்பில் வெளிப்படும்....
எண்ணற்ற எண்ணங்கள் அனைத்தும்
எண்ணக் கூட வெய்க்காது,
விலகியே விரும்பும் உன் மனதின் செயல்பாடு
செயல் இழந்த என்னை ஓர் புதிய செயழியாக மாற்றியது....
சிறிதும் செயல் இழக்க நேர்ந்தால் கூட
மனதின் அன்பை கொண்டு என்னை சரி செய்யும் நீ..
செவி சாய்த்து உன் தோளில் விழும் தருணத்தில்
என்னோடு எழும் ஆசை அனைத்தும்
உன்னுடன் கூற விரும்பியது யாதெனில்
தந்தையின் மார்போடு தன் முகத்தை முட்டி சாய்க்கும்
ஓர் இன்புற்ற ஏக்கங்கள் நிறைந்த மழலையைப் போல
என்றும் உனதருகில் நான் 😇💜