1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-071
« Last post by MDU on July 14, 2026, 10:18:14 pm »அழகான கவிதைதான் அம்மா
அம்மாவின் கருவறையில் தொடங்கியது மகளின் வாழ்க்கை,
அவள் கைகளில் வளர்ந்தது ஓர் அழகான கவிதை.
மகள் சிரித்தால் அம்மாவின் உலகம் சிரிக்கும்,
மகள் அழுதால் அம்மாவின் இதயம் வலிக்கும்.
முதல் நடை பழக கை கொடுத்தவள் அம்மா,
வாழ்க்கைப் பாதை காட்டி வழிநடத்தியதும் அம்மா.
மகளின் கனவுகளைத் தன் கனவாய் சுமந்தாள்,
அவள் வெற்றிக்காகத் தினமும் மனதில் வேண்டினாள்.
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்,ஆறுதல் தரும் ஒரு தோள் போதும்…
காலம் நம்மை மாற்றலாம் வயது நம்மை வளைக்கலாம்.
ஆனால் கை கோர்த்த நம் அன்பை,
எந்தக் காலமும் பிரிக்க முடியாது.
அம்மா இளமையாக இருந்தபோது,
தன் மகளைப் பொத்திப் பொத்தி வளர்த்தாள்.
அவள் கால்கள் தடுமாறும் போதெல்லாம்,
கை கொடுப்பதோடு தன்னம்பிக்கையும் கொடுத்தாள்
“வாழ்க்கை என்றால். போராட்டம் மகளே,
விழுந்தாலும் எழுந்து நடக்கக் கற்றுக்கொள்” என்றாள்;
எத்தனை துன்பங்கள் வாசல் தேடி வந்தாலும்,
அதைத் தைரியமாய் சமாளிக்கச் சொல்லிக் கொடுத்தாள்.
மகளுக்கு வெறும் தாயாக மட்டும் இல்லாமல்,
மனம் திறந்து பேசும் தோழியாகவும் இருந்தாள்.
அவள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் கேட்டுத் திருத்தி,
அழகான சிற்பமாய் மகளைச் செதுக்கியவள் தாய்.
இன்று அம்மாவின் கூந்தலில் நரை பூத்தாலும்,
அவள் முகத்தில் காலத்தின் கோடுகள் தெரிந்தாலும்.
அம்மாவைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,
மகளின் மனதில் ஒரு புதிய சக்தி பிறக்கிறது.
வயது அம்மாவின் தோற்றத்தை மாற்றலாம்.
ஆனால் மகளுக்குள் வாழும் அவளின் தைரியத்தை மாற்ற முடியாது…
ஏனெனில் ஒவ்வொரு மகளின் உயர்வுக்குப் பின்னாலும்,
அவளைத் தலைநிமிரச் செய்த ஓர் “அம்மா” இருக்கிறாள்!
காலங்கள் ஓட மகளும் வளர்ந்துவிட்டாள்,
அம்மாவின் நரை முடியைக் கண்டு கண் கலங்கிவிட்டாள்.
ஒருநாள் அம்மா கொடுத்த தோளின் ஆறுதலை,
இன்று மகள் திருப்பிக் கொடுக்கிறாள் அன்பினாலே.
அம்மாவின் கையைப் பிடித்து மெதுவாய் நடக்கிறாள்,
அவள் சொன்ன பழைய கதைகளை மீண்டும் ரசிக்கிறாள்.
வயது அம்மாவின் உடலை மட்டும் மாற்றலாம்,
மகளின் அன்பை எந்தக் காலமும் மாற்ற முடியாது.
அன்று மகளுக்கு உலகமே அம்மாவாக இருந்தாள்,
இன்று அம்மாவுக்கு உலகமே மகளாக மாறிவிட்டாள்.
தலைமுறைகள் மாறினாலும் மாறாத ஓர் உறவு,
அம்மா–மகள் அன்பு… வாழ்க்கையின் அழகான வரவு! ❤️
கடைசி வரை நீ என் அருகில் இருந்தால்,
வாழ்க்கையின் கடைசி பக்கமும் அழகான கவிதைதான் அம்மா. ❤️❤️❤️
இப்படிக்கு உங்கள்❤️ MDU❤️

Recent Posts


